சென்னையில் தூய்மை இயக்க செயல்பாடுகள் 2021
சுவச்தா பக்வாடா’ என்று அழைக்கப்படும் தூய்மை இயக்க செயல்பாடுகள் 2021 ஆகஸ்ட் 16 முதல் இரு வார காலத்திற்கு சென்னையிலுள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் (மேல்முறையீடுகள்-II) ஆணையர் அலுவலகத்தில் நடைபெறுகின்றன. இது தொடர்பாக கீழ்காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தூய்மை உறுதிமொழியை எடுத்தல்
அலுவலக வளாகத்தில் தூய்மை குறித்த பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை வைத்தல்
அலுவலக வளாகத்தில் எச்சில் துப்புதல் மற்றும் குப்பை கொட்டுதலுக்கான அபராதம் குறித்த சுவரொட்டிகளை வைத்தல்
நெகிழி சாரா பொருட்களை பயன்படுத்துமாறு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்புதல்
அண்ணா நகரில் உள்ள லியோ மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல்
கழிவு மேலாண்மை மற்றும் நெகிழி பயன்பாட்டை குறைப்பது குறித்த பயிற்சி பட்டறை
“சர்வதேச கழிவு மேலாண்மை நெருக்கடி மற்றும் பருவநிலை மாற்றம்” குறித்த கட்டுரை போட்டி
தூய்மை குறித்த வாசகங்களை அனைத்து பிரிவுகளிலும் வைத்தல்
கொரட்டூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் மரம் நடுதல்
அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மரக்கன்றுகளை வழங்குதல்
டிஜிட்டல் மயமாக்கல் பணியை ஆய்வு செய்து, அலுவலக தகவல் தொடர்புக்காக மின்னஞ்சலை பயன்படுத்துதல்
2021 ஆகஸ்ட் 31 அன்று அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சணல் பைகள் மற்றும் தூய்மை உபகரணங்கள் வழங்கப்பட்டு, கட்டுரை போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதோடு தூய்மை இயக்கம் நிறைவுறும்.
மேற்கண்ட தகவல்கள், திரு ஒய் ஸ்ரீநிவாச ராவ், இணை ஆணையர், சென்னை, வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கருத்துகள்