தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
‘முக்கிய தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள்’ குறித்த 3-நாள் புகைப்பட கண்காட்சி
நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆவதை ஒட்டி விடுதலையின் அம்ரித் மகோத்சவம் எனும் பெயரில் ஒரு வாரத்திற்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வரும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தால் ஹைதரபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘முக்கிய தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள்’ குறித்த 3-நாள் புகைப்பட கண்காட்சியை காவல் துறை இணை ஆணையர் திரு ரமேஷ் ரெட்டி வெள்ளியன்று திறந்து வைத்தார்
.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நமது சுதந்திரப் போரட்டத்தின் வெற்றியும், விடுதலை வீரர்களின் தியாகங்களும் நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்றும், அடுத்த தலைமுறைக்கு அதை கொண்டு செல்வதற்கான இந்த முயற்சி பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.
“முக்கிய தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்களை பார்க்கும் போது, அவர்களுக்கிடையே நான் இருப்பது போலவும், அந்த காலத்திற்கே சென்றது போலவும் தோன்றி, நாட்டுப் பற்று மேலிடுகிறது,” என்று அவர் கூறினார்.
பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் திருமதி ஷ்ருதி பட்டேல் பேசுகையில், அதிகம் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துவதே கண்காட்சியின் நோக்கம் என்றார். ஆகஸ்ட் 23 முதல் 29 வரையிலான ஐக்கானிக் வாரத்தில், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு ஊடக பிரிவுகள் பிராந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்புகள் குறித்து எடுத்துரைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் போது புத்தக கண்காட்சி ஒன்றுக்கும் வெளியீட்டுப் பிரிவு, ஹைதராபாத், ஏற்பாடு செய்திருந்தது. சுதந்திரம் போராட்ட வரலாறு குறித்த மதிப்புமிக்க புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
துணை இயக்குநர் திரு (டாக்டர்) மனஸ் கிருஷ்ணகாந்த், உதவி இயக்குநர்கள் திரு ஹரிபாபு, திருமிகு பாரத லட்சுமி மற்றும் திருமதி வந்தனா மற்றும் நேரு யுவகேந்திர ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கருத்துகள்