முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுரை செந்தமிழ்க் கல்லூரியின் மாணவர்களுக்கு 75- ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் பெருவிழா இணையவழி கருத்தரங்கம்

காந்தியடிகளின் போராட்டம் உலகம் சார்ந்த அறப்போர்



மத்திய அரசின் மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக மதுரை செந்தமிழ்க் கல்லூரியின் மாணவர்களுக்கு 75- ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் பெருவிழா என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கமும்,  வினாடி வினா போட்டியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை செந்தமிழ்க் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் ஒருங்கிணைப்பு செய்தது.

செந்தமிழ் இதழ் ஆசிரியர் முனைவர் இரா.சதாசிவம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியது; மகாத்மா காந்தியடிகள் நாட்டின் விடுதலைக்காக உள்ளத்தாலும் உடலாலும் பாடுபட்டவர்.  அவரது அறப்போர் வீச்சானது உலகம் முழுதும் உள்ள செய்தித்தாள்களில் இடம்பெற்றிருந்தது. மக்களின் உழைப்பு, கல்வி, அறிவு இவற்றை சர்வோதயம் என்று குறிப்பிட்டார். நெசவுத் தொழிலாளர்களும் விவசாயிகளும் நாட்டின் முதுகெலும்பு, அவர்கள் நைந்துவிடாமல் காக்க வேண்டும். மாணவர்கள் அறிவாலும் சிந்தனையாளும் காந்தியடிகள் பயணித்தப் பாதையில் சென்று உலகத்தை விடுவிக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.

காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக காந்திய நிர்மாணத்திட்ட அருங்காட்சியக இயக்குனர், முனைவர் த.ரவிச்சந்திரன் பேசியது; இந்திய விடுதலைப் போராட்டமானது, கத்தியின்றி இரத்தமின்றி காந்தியடிகள் தலைமையில் அஹிம்சை முறையில் நடைபெற்றது.  பல சத்தியாகிரகிகள் துன்பப்பட்டு, சிறைவாசம் சென்று உயிர் தியாகம் செய்து பெற்ற சுதந்திரம். வன்முறையில், ரத்தம் சிந்தி பெற்ற பிரெஞ்சுப்புரட்சி , ரஷ்யப்புரட்சிகளில் இருந்து முற்றிலும் இது வேறுபட்டது.  காந்தியடிகள் தமிழகத்திற்கு தன் வாழ்நாளில் 21 முறை வந்துள்ளார். மதுரை மாநகருக்கு ஐந்து முறை வந்துள்ளார். 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதியன்று மதுரை மாநகரில் தான் அரைமுழ ஆடைக்கு மாறினார். வருங்காலம் மாணவர்கள் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. அவர்கள் நன்கு படித்து பொறுப்புணர்ந்து இந்திய நாட்டின் நிலையை உயர்த்த வேண்டும்.  இதை அவர்கள் இன்றைய தினம் சூளுரையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் தமிழ் மற்றும் இந்திய மொழிகள் புலத்தலைவர் முனைவர் பா.ஆனந்தகுமார் தமிழ் இலக்கியங்களில் இந்திய விடுதலைப்போர் என்ற தலைப்பில் பேசியதாவது; இலக்கியங்கள் சமூக ஆவணமாகத் திகழ்வதோடு சமூக மாற்றத்திற்கான காரணியாகவும் விளங்குகின்றன. இந்திய விடுதலைப் போர் தமிழ் இலக்கியத்தில் விரிவான பதிவைப் பெற்றுள்ளது. பாரதியாரின் படைப்புகள் இதன் மையமாகத் திகழ்கின்றன. பாரதியார் காசி, கொல்கத்தா, சூரத் ஆகிய இடங்களில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார். இந்திய விடுதலையை களத்தில் நின்று பாடியவர். திலகரை அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டு அவரது பால பாரத சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். அவரது ஒவ்வொரு தேசிய பாடலுக்கும் வரலாற்றுக் குறிப்பு உண்டு. விவேகானந்தரின் சகோதரர் யுகாந்தர் பத்திரிகை ஆசிரியர் பூபேந்திர நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது பூபேந்திர விஜயம் பாடலைப் பாடினார். வ.உ.சி.‌ சிறையில் அடைக்கப்பட்ட போது சுதந்திர தாகம் பாடலைப் பாடினார். சென்னையில் 1907 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதேசிய  ஊர்வலத்தின் இறுதியில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்போது தான் தாயின் மணிக்கொடி பாடலைப் பாடினார். பாரதி காட்டும் தேசியக் கொடியில் ஒருபுறம் இந்திரனின் வச்சிராயுதமும் மற்றொரு புறம் இஸ்லாமியரின் இளம் பிறையும் நடுவில் வந்தேமாதரம் எனும் மந்திரச் சொல்லும் இடம் பெற்றுள்ளது. பாரதியைப் போல பாரதிதாசன், நாமக்கல் இராமலிங்கம், கவிமணி தேசிக விநாயகம் ஆகிய கவிஞர்களும் இந்திய விடுதலையை வரவேற்றுப் பாடியுள்ளனர். நாடகத்தின் மூலம் தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர், மதுரகவி பாஸ்கர தாஸ், விசுவநாத தாஸ் ஆகியோர் விடுதலைப் போராட்ட உணர்வைப் பொது மக்களிடம் கொண்டு சென்றனர்.

மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலக விளம்பர உதவி அலுவலர் திரு ப.வேல்முருகன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வரவேற்புரை ஆற்றினார். மதுரை செந்தமிழ் கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியரும் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான முனைவர் பூ.பூங்கோதை நன்றி தெரிவித்தார். முனைவர் பா.நேருஜி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இக்கருத்தரங்கை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வினாடி வினாப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இளம் இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவர் எஸ்.வி.மருது பகவதி  முதலிடத்தையும், முதுகலை  இரண்டாம் ஆண்டு மாணவி  ரம்யா இரண்டாம் இடத்தையும் மற்றும் இளம் இலக்கியம் மூன்றாம் ஆண்டு மாணவர் சமயக்கனி மூன்றாம் இடத்தையும் பிடித்து பரிசுகளைப்பெற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த