சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்கான திட்ட கண்காணிப்பு பிரிவின் உறுப்பினர்களுடன் இணை அமைச்சர் உரையாடல்
சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்கான திட்ட கண்காணிப்பு பிரிவின் உறுப்பினர்களுடன் இணை அமைச்சர் திரு ஏ நாராயணசாமி உரையாடல்
தனது திட்ட கண்காணிப்பு பிரிவின் ஒரு பகுதியாக இயங்குவதற்காக நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் இருந்து 26 இளம் பட்டதாரிகளை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சமீபத்தில் தேர்ந்தெடுத்தது. புதிதாக இணைந்தவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சிக்கு 2021 ஆகஸ்ட் 2 முதல் 14 வரை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் இதை தொடங்கி வைத்தார்.
அறிமுக நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில், சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் திரு ஏ நாராயணசாமி இளைஞர்களுடன் உரையாடி, மாநில ஒருங்கிணைப்பாளர்களாக அவர்கள் பணியாற்றவுள்ள காலத்தில் அவர்களது முழு திறமையையும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
அமைச்சகம் செயல்படுத்தி வரும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்த தகவல்கள் அதிகமானோரை சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை குறித்தும் திரு ஏ நாராயணசாமி வலியுறுத்தினார்.
“பல்வேறு நலத் திட்டங்களை அமைச்சகம் செயல்படுத்தி வந்தாலும், நிறைய பேருக்கு அவை குறித்து தெரிவதில்லை. மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நீங்கள் களத்தில் பணியாற்றவிருப்பதால், திட்டங்கள் குறித்த தகவல்கள் அதிகமானோரை சென்றடைவதற்கு நீங்கள் உதவலாம்,” என்று கூறிய திரு ஏ நாராயணசாமி, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோரை வாழ்த்தினார்.
சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக இணை செயலாளர் திருமிகு கல்யாணி சத்தா, பவர் பாயிண்ட் விளக்கக் காட்சி ஒன்றின் மூலம் அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்து புதிய உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார்.
கருத்துகள்