திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியுடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் சந்தித்துப் பேசினார்
ஈழத்தமிழர்களின் நல்வாழ்வு குறித்து இலங்கைத் தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை அமைச்சருமான ஜீவன் தொண்டைமான் திமுகவின் மகளிர் அணிச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியை அவரது சென்னை மயிலாப்பூர் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக 2020 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அரசில் தோட்ட வீட்டமைப்பு, சமூக உட்கட்டமைப்புத் துறை இராசாங்க அமைச்சராக பதவி வகிக்கிறார்.
அரசு முறைப்பயணமாக தமிழகம் வந்துள்ள இலங்கை அமைச்சர் இந்த சந்திப்பின் போது இலங்கையிலுள்ள ஈழத்தமிழர்களின் வாழ்வாதார மேம்பாடு, பொருளாதார முன்னேற்றம், அரசியல் உரிமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தாகவும். சந்திப்பு குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
கருத்துகள்