முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விழாவில் நடனமாடும் பெண்ணுக்கு காவலர் உதவியோடு தொல்லை தந்த நபர் கைது விசாரணை நடக்கிறது

மது குடிக்க வைத்து, தகாத முறையில் வீடியோ எடுத்து திருமண வரவேற்பு நடன பெண்களை பாலியல் தொழிலில் தள்ளி துன்புறுத்தல் போலீசுடன் சேர்ந்து களியாட்டம் நடத்தியவர் கைது


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மற்றும் திருச்சிராப்பள்ளியில் கலக்கல் ஈவண்ட் மேனேஜ்மென்ட் எனும் பெயரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து தரும் நிறுவனம் நடத்தி வரும் ராஜா. திருமண வரவேற்பில்  நடனமாட 30 பெண்களை வைத்து நிகழ்வுகளில்‘வெல்கம் கேர்ள்ஸ்' என்ற பெயரில் இயங்கி வருகிறார். இதில் பணியாற்றும் பெண்களை மது குடிக்கவைத்து ஆபாச வீடீயோ எடுத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக புகார் எழுந்தது.  வீடியோவை இணையதளத்தில் விடுவதாகவும், உறவினர்களிடம் காட்டுவதாகவும் கூறி மிரட்டி சிலருக்கு பாலியல் டார்ச்சர் செய்ததாக தெரிகிறது.

இந்தநிலையில், இவரது நிறுவனத்தில் பணியாற்றிய தஞ்சாவூர் இளம்பெண்ணிடம் ரூபாய்.50 ஆயிரம் தருவதாகக் கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றார். அவர் மறுப்பு தெரிவித்தும் ராஜா தொடர்ந்து வற்புறுத்தி வந்ததனால் மனமுடைந்த அந்தப் பெண் தனது நண்பர்களிடம் தெரிவிக்க அவர்கள் திருமண நிகழ்ச்சி உள்ளதாகக் கூறி ராஜாவை சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூருக்கு வரவழைத்து. அங்கு வந்த ராஜாவை, நடனக்குழு பெண்கள்‘பாலியல் தொழிலுக்கா கூப்பிடுகிறாய்" என்று கூறி சரமாரியாக சுற்றி வளைத்து அடித்தனர். அந்தக் காணொளிக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

பெண்களிடம் அடிவாங்கிய ராஜா



சாக்கோட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரில், தன்னை அடித்து பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டதாக கூறியதைத் தொடர்ந்து, காவல்நிலையத்தில் எழுத்தராகப் பணியாற்றும் மாயவதன், என்பவர் அந்தப் பெண்ணிடம் பேசும் பதிவு ஆடியோவும் வைரலானது. இதுதொடர்பாக தஞ்சாவூர் பெண் மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பி வைத்த புகார்கள் மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்கும் காரைக்குடியை சேர்ந்த ராஜ்குமாருக்கும் திருமணம் நடந்தது. சென்னையில் வசித்து வந்த நாங்கள், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டோம்.

கும்பகோணத்தில் வசிக்கும் என் பெற்றோர் வீட்டிற்கு வந்து ஹோட்டலில் கணக்காளராகவும்  விசேஷ நிகழ்ச்சிகளில் ‘வெல்கம் கேர்ள்ஸ்' ஆகவும் பணியாற்றுகிறேன்.  2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதுவயலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் வரவேற்பாளராகப் பணியாற்றினேன்.  ராஜா ஏற்பாட்டில் அந்த நிகழ்ச்சி நடந்ததை அறிந்தேன். அப்போது, அவர் நிறைய நிகழ்ச்சிக்கு ஆள் தேவை எனக் கூறி எனது செல்போன் எண்ணைப் பெற்றுக்கொண்டார். மேலும் நிகழ்ச்சியில்  சாக்கோட்டை காவல்நிலைய எழுத்தர் மாயவதனை நண்பர் என அறிமுகப்படுத்தினார்.  அடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு என்னைத் தொடர்பு கொண்ட ராஜா,‘பெரிய வி.ஐ.பி.க்கள் எல்லாம் இருக்காங்க, எங்களுடன் ஒரு அக்ரிமென்ட் போட்டு 1 அல்லது 2 மாதம் தங்கினால் இலட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்’’ எனக் கூறி பாலியல் தொழிலுக்கு அழைத்தார்.

 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சாக்கோட்டை காவல் நிலைய எழுத்தர் மாயவதன் பேசினார். ராஜா புகார் கொடுத்திருப்பதால் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கூறினார்.  தவிர என்னிடம் அடிக்கடி போன் செய்து தகாத முறையில் பேசினார். ராஜா சொல்வதுபோல் நடக்காவிட்டால் ஆட்களை வைத்து ராஜாவைக் கடத்தி மிரட்டியதாக வழக்கு போடுவதாகவும் அச்சுறுத்தினார். காவல் துறையில் பணி புரியும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாயவதன், ராஜாவுடன் சேர்ந்து சட்டவிரோதமான செயல்களைச் செய்து வருகிறார். இவர்களைக் கைது செய்து விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.   

இந்த விவகாரத்தில், முதல்வர் தனிப்பிரிவுக்கு அளித்த புகாரின் அடிப்படையில் சாக்கோட்டை காவல்நிலையத்தில் மனு அளித்த பெண்ணிடம்  விசாரணை நடத்தியதில், விஸ்வநாதன் (எ) ராஜா தன்னை நடன நிகழ்ச்சிக்கு அழைத்து, தனது பெண்மையை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாகவும், முறைகேடான செயல்களுக்குத் தூண்டியதாகவும் தெரிவித்தார். அதனடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354, 506 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து ராஜாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...