முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மைக்ரோவேவ் அடுப்பில் வைக்கத் தகுந்த சமையல் பாத்திரங்கள் தயாரிக்க ஐஐடி உதவுகிறது

ஐஐடி மெட்ராஸ் தமிழகத்தைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர்களுக்கு, நவீன காலத் தேவையான மைக்ரோவேவ் அடுப்பில் வைக்கத் தகுந்த சமையல் பாத்திரங்கள் தயாரிக்க உதவுகிறது



ஐ ஐ டி மெட்ராஸின் ஊரகத் தொழில்நுட்பச் செயற்குழு(RuTAG), மாறி வரும் நுகர்வோர் தேவைகளுக்கேற்ப உற்பத்தியை மேம்படுத்தும் வகையில், தமிழகக் குயவர்களுக்கு உதவ, மைக்ரோவேவ் அடுப்பில் பயன்படுத்தக்கூடிய வகையில் பாண்டங்களைத் தயாரிக்க பொது ஆலையை நிறுவ உதவியுள்ளது. சந்தையில் இந்தப் பொருட்களின் மதிப்பு கூடியிருப்பதால், இது பாரம்பரியக் குயவர்களுக்கு நிலையான வருவாய் ஈட்ட உதவும்.

பல பாரம்பரிய குயவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய நிலையில்,  வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றன. கைவினைஞர்களின் வருவாயை அதிகரிக்க, உற்பத்தித் திறனை மட்டுமல்லாமல் கைவினைஞர்களின் ஊதியத்தையும் மேம்படுத்த கூடுதல்திறன் மற்றும் தயாரிப்புப் பயிற்சியுடன் நவீன இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம் பெருமுடிவாக்கத்தில் பொது ஆலை ஒன்றைச் செயல்படுத்த  ஐஐடி மெட்ராஸ் உதவுகிறது.


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தென்மண்டல பைப்லைன்ஸ் (ஐஓசிஎல்-எஸ்ஆர்பிஎல்) பிரிவின்  சிஎஸ்ஆர் நிதியுதவியுடன்  நாகர்கோவிலில் உள்ள அரசு சாரா அமைப்பான சமூக மேம்பாட்டு மையத்தைச் செயல்பாட்டுக் கூட்டாளியாகக் கொண்டு, கொல்கத்தாவைச் சேர்ந்த மத்திய கண்ணாடி மற்றும் பீங்கான் நிறுவனத்துடன் இணைந்து ஐஐடி மெட்ராஸ்,  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்   குயவர்களுக்கு உதவுகிறது

இந்த முன்னெடுப்பில் ஐஐடி மெட்ராஸின் பங்களிப்பு குறித்து வலியுறுத்திப் பேசிய RuTAG-யின் பொறுப்பாளர் பேராசிரியர் அபிஜித் பி தேஷ்பாண்டே, “ஒரு நிறுவனத்தின் உள்ளே உருவாகும் தொழில்நுட்ப மேம்பாடு, பல்துறைகளுடனும் தொடர்பு கொண்ட ஒரு முன்னெடுப்பாக உருவெடுப்பது அவசியம். அந்த வகையில், RuTAG, CGCRI, CSD, IOCL, அரசு அமைப்புகள், உள்ளூர்க் கைவினைஞர்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து பயன்களைப் பகிர்ந்தளிக்கிறது. இது மேலும் மேம்பட, அந்தக் கைவினைஞர்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் சென்று சேர்த்து, அதற்கேற்பத் தொழில்நுட்பத்தில் மேம்பாட்டைக் கொண்டு வரலாம்” என்று கூறினார்.

மேலும், இந்த மையத்தின்  நன்மைகளைப் பற்றி விரிவாகப் பேராசிரியர் அபிஜித் பி.தேஷ்பாண்டே, “களிமண் உற்பத்தித்திறனையும், தரத்தையும் அதிகரிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. CFC மூலம் ஒரு பரவலாக்கப்பட்ட உள்கட்டமைப்பால், சம்பந்தப்பட்ட அனைவருக்குமான  உரிமை அதிகரிக்கிறது. மேலும்,மையத்தின் செயல்பாடுகளைச் சுற்றி வேலை வாய்ப்புகளும் பெருகுகின்றன.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஐஓசிஎல் நிர்வாக இயக்குனர் திரு. எஸ்.எஸ். சாவந்த், RuTAG-IIT மெட்ராஸ் பொறுப்பாளர்,  பேராசிரியர் அபிஜித் தேஷ்பாண்டே, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலர் திருமதி. பி. மல்லிகா, சமூக மேம்பாட்டு மையத்தின்  இயக்குனர் (கன்னியாகுமரி) டாக்டர் பகவதீஸ்வரன் மற்றும் பெருமுடிவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி பாலலட்சுமி வெங்கடேசன்  ஆகியோர் முன்னிலையில் 2021 ஆகஸ்ட் 11 அன்று இந்த மையம் தொடங்கப்பட்டது

இந்த மையத்தின் மூலம் பெறப்படக்கூடிய முக்கிய விளைவுகள்:

குயவர்களின் வருவாய் மூன்றிலிருந்து நான்கு மடங்கு உயரும்.

பாரம்பரிய மண் பாண்டப் பொருட்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் மூலம் நான்கு மடங்கு சந்தை மதிப்பு கூடும்.

பெருமளவு சந்தை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதித் தரம்

பயிற்சி பெறுவோர் நேரடிப் பயிற்சி மற்றும் வழிகாட்டல் மூலம் தொழில் முனைவோராகவும் வாய்ப்பு

மாநிலத்திலுள்ள மற்ற மண்பாண்டத் தொழில் மையங்களிலும் இம்முறை தழுவப்படும் வாய்ப்பு

பல்வேறு வகையான களிமண் பொருட்களின் உற்பத்தி தொடர்பான வன் திறன், மென் திறன்களில் இதுவரை மொத்தம் 82 நபர்கள் இந்த மையத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) நிர்வாக இயக்குனர்  திரு.எஸ்.எஸ். சாவந்த், ஐஓசிஎல் பல்வேறு கிளஸ்டர்களில் இதுபோன்ற வாழ்வாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை ஆதரிக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறினார்.

பயிற்றுவிக்கப்பட்ட குயவர்கள் வீட்டு உபகரணங்கள், அதிக சந்தை மதிப்புகள் கொண்ட நுண்ணலை அடுப்பில் பயன்படுத்தக்கூடிய களிமண் பாண்டங்கள்,  கலைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள் மற்றும் சேமிப்பு கொள்கலன்களை உள்ளடக்கிய பல்வகைப்பட்ட களிமண் பொருட்களைக் காட்சிப்படுத்தினர். ஒருங்கிணைந்த மட்பாண்ட உற்பத்தி அலகு மூலம் மைக்ரோவேவ் மட்பாண்டங்கள் உட்பட களிமண் பொருட்கள் தயாரிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சித் திட்டங்கள், புதிய பயிற்சி பெற்ற CFC யின் ஆதரவைப் பெற்று பயிற்சி பெறுவோர் தங்கள் சொந்த மட்பாண்ட அலகுகளை அமைக்க ஊக்குவிக்கும் அளவுக்கு முக்கிய கவனத்தைப் பெற்றன.

சமூக மேம்பாட்டு மையம், சி.எஸ்.டி., கன்னியாகுமரியின் இயக்குநர் டாக்டர் பகவதீஸ்வரன், இந்த மையத்தின்  செயல்பாட்டு மாதிரியை விவரித்தார் மற்றும் இந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய குயவர்களுக்கான கையேடு ஒன்றையும் மாவட்ட ஆட்சியர் வெளியிட, ஐஓசிஎல் நிர்வாக இயக்குநர் திரு. எஸ்.எஸ்.சாவந்த் பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (டிஎன்எஸ்ஆர்எல்எம்) திட்ட அலுவலர் திருமதி பி. மல்லிகா, இந்த மையத்தைத் தொடங்கி வைத்ததுடன், மேலும் புதிய கிளஸ்டர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களிலும் இந்தத்  தொழில்நுட்ப பரவலை மேம்படுத்துவதில் ஆர்வம் வெளியிட்டார்.

இந்தத் தகவல், சென்னை, ஐ.ஐ.டி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த