தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் திருமதி ரேகா சர்மாவின் பதவிக்காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு
பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் திருமதி ரேகா சர்மாவின் பதவிக்காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு
தேசிய மகளிர் ஆணைய சட்டம், 1990 (1990-ன் 20) படி, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவியாக 2021 ஆகஸ்ட் 7 முதல் இன்னுமொரு மூன்று வருடங்களுக்கோ அல்லது 65 வயது ஆகும் வரையோ அல்லது மேற்கொண்டு உத்தரவுகள் வரும் வரையோ இவற்றில் எது முன்னதாக நடக்கிறதோ அது வரை, திருமதி ரேகா சர்மாவை அரசு நியமிக்கிறது.
ரேகா சர்மா இந்தியாவில் தேசிய மகளிர் ஆணையத்தின் தற்போதைய தலைவராவார்
1964 ஆம் ஆண்டு உத்தராகண்டம் மாநில தேராதூன் டி.ஏ.வி கல்லூரியில் அரசியல் அறிவியல், வரலாறு மற்றும் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரத்தில் பட்டயப் படிப்பும் முடித்தவர்.
ஆகஸ்ட் மாதம் 2015 ஆம் ஆண்டில் தேசிய மகளிர் ஆணையத்தில் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன் ஹரியானாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டச் செயலாளராகவும், ஊடகப் பிரிவு பொறுப்பாளராக இருந்து ஹரியானா அரசின் மாவட்ட நுகர்வோர் மற்றும் நிவாரண மன்றத்தின் உறுப்பினராக இருந்தார்.
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக, பெண்கள் மற்றும் கட்சியின் உரிமைக்குக் குரல் கொடுக்கும் ஆதரவாளராக இருக்கிறார். இவர் தேவாலயங்களில் பாவமன்னிப்பு கேட்கும் பெண்களைத் துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் அச்சுறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காகத் தேவாலயங்களில் ஒப்புதல் வாக்குமூலத்தை இரத்து செய்யுமாறு கூறியதால் சர்ச்சைக்குரியவரானார். கேரள மாநில இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கை பதிவுச் செய்யக் காரணமானார். ஆனால் கேரள அரசு இது கட்சி தொடர்பான விஷயம் என்பதால் கேரள மாநில மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியாது என்றது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களைத் தேசிய மகளிர் ஆணையம் பதிவுசெய்ய வலியுறுத்தியது.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும், தலைவராகவும், சர்மா மனநல நிறுவனங்கள், சிறைச்சாலைகள் மற்றும் காவலில் உள்ள வீடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். பெண் கைதிகளின் நிலைமைகளை மேம்படுத்த வேண்டும் என வாதிட்டார். பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார்களை இவர் விசாரிக்கிறார். வெளிநாடுகளில் வசிக்கும் கணவர்களால் கைவிடப்பட்ட இந்தியப் பெண்கள், குழந்தைக் காவல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மூடப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் உள்ள பெண் தொழிலாளர்கள் குறித்து கவலை தெரிவித்து அவர்கள் வாழ்வு ஏற்றம் பெறத் திட்டங்களை வகுக்கிறார். அரசியலில் நுழையப் பெண்களை ஊக்கப்படுத்தும் இவர், முன்மொழியப்பட்ட ஒதுக்கீடு முறை குறித்து கவலையினை வெளிப்படுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் மகளிர் மக்கள் சன்வைஸ்/பொது விசாரணைகளுக்குத் தலைமை தாங்கினார். பல புகார்களைக் கேட்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினருக்கான பயிற்சி மற்றும் உணர்திறன் திட்டங்களைச் சர்மா ஆதரிக்கிறார்.மேலும் காவலருக்கு எதிரான புகார்களையும் விசாரிக்கிறார். தேசிய மகளிர் ஆணைய விசாரணையில் கலந்து கொள்ளாத காவல்துறையினருக்கு அபராதம் விதிக்கும் அதிகாரங்களையும் இவர் அரசிடம் கோரியுள்ளார். இராணுவ அதிகாரியை மணந்தவர், இராணுவ வீரர்களின் துணைவர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் குழந்தைகளுக்கான குடும்ப நலத் திட்டங்களை ஊக்குவித்துள்ளார்.
கருத்துகள்