ஆகஸ்ட் 9 ஆம் தேதி தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியீடு
தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார்
120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையில் கடன் விபரங்கள் சென்னை மெட்ரோ வாட்டர் வரவு, செலவு விவரங்கள் இடம்பெறுகிறது
முன்னாள் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் IAS உடனான சந்திப்பில் GST கவுன்சில் மற்றும் ஒன்றிய அரசுடனான பணி அனுபவம் பற்றி கலந்து பேசினார்.அதிமுக அரசின் பந்து ஆண்டு செயல்பாடுகள், நிதி ஆதாரங்கள், கடன்கள், கஜானா நிலவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தமிழக நிதி நிலை தொடர்பான "வெள்ளை அறிக்கை" தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார்.
தமிழகத்தின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பல்வறு பொருளாதார நிபுணர்களுடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த ஒரு மாதமாக ஆலோசித்து வந்தார்.
அவர்கள் ஆலோசனையுடன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை ஏற்று நிதி நிலையை பொருக்க அறிக்கையில் முக்கிய திட்டங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தேர்தல் வாக்குறுதிகளான, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, சமையல் எரிவாயு மானியம், மாணவர்களுக்கு கல்விக் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் இடம் பெறுமா என எதிர்பார்ப்பு உள்ளது. அரசின் நிதி நிலைமைகளைக் கொண்டே முடிவு செய்யப்படும். மூத்த பத்திரிகையாளர் மணி அவர்கள் கருத்து இது வெளிவரப்போகும் வெள்ளை அறிக்கை திமுகவை எதிர்காலத்தில் தற்காத்துக்கொள்ள உதவும் அதிமுகவின் பத்தாண்டுகளில் நடந்த ஊழல்கள் அவலங்களை அம்பலப் படுத்தும்.
முந்தைய அதிமுக ஆட்சியில் இருந்த காலம் தொட்டே தமிழகம் கடுமையான நிதி நிலை நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் அதிமுக ஆட்சியின் முடிவில் கடன் அளவு 5 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. சரியாக கடன் எவ்வளவு எத்தனை கோடியை வட்டியாக அரசு செலுத்துகிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியமாக எவ்வளவு செல்கிறது. திட்டங்களுக்ச்கு செலவு செய்ய அரசிடம் உள்ள இருப்புத்தொகை எவ்வளவு, மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகை எவ்வளவு போன்ற விவரங்கள் வெள்ளை அறிக்கை மூலம் வெளியாகும் எந்தெந்தத் நலத்திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கப்போகிறது என்பதும், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது தர வேண்டிய நிலுவைத் தொகை எப்படித் தரப்படும் என்பது குறித்தும் நிதிநிலை அறிக்கையில் அரசு அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
அதேநேரம் அதற்கு முனனதாக தமிழக நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை- ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நிதி நிலை தொடர்பான 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட உள்ளார்,
நிதி ஆதாரங்கள் மற்றும் கடன் விவரங்கள் தமிழக அரசின் கடன், செலுத்தும் வட்டி, வருவாய் இழப்பு உள்ளிட்ட விவரங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. மேலும் வெள்ளை அறிக்கையில், கடன் விபரங்களுடன் சென்னை மெட்ரோ வாட்டர் வரவு, செலவு விவரங்களும் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. வெள்ளை அறிக்கையில் முந்தைய அதிமுக அரசின் செயல்பாடுகள், நிதித் ஆதாரங்கள், கடன்கள், கஜானா நிலவரம் ஆகியவை அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வரப்போகிறது. நிதி ஆதாரம் குறித்த வெள்ளை அறிக்கை அதிமுக ஊழல்களை அம்பலமாக்கும்.
கருத்துகள்