மதுரை நத்தம் சாலையில் செட்டிகுளமிடையே பிரம்மாண்ட பறக்கும் பாலம் கட்டப்படுகிறது.
ஊழியர்கள் அங்கு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல். அவர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
விபத்து குறித்துத் தகவலறிந்ததும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க காவல்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர். பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் கட்டுமான பணியாளர்களைத் தவிர வேறு யாருமில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்காதெனத் தெரிகிறது, விபத்தின் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து மீட்புக்குழுவினர் ஆய்வு செய்கின்றனர்
இந்த மேம்பாலம் 7 கிலோமீட்டர் நீளமுடையது. மத்திய மாநில அரசு கூட்டாக மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகள் மூன்றாண்டுகளாக நடக்கிறது. மேம்பாலத்தின் ஒரு பகுதியை இணைக்கும் பணியின் போது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கட்டுமானப் பொறியாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இயந்திரங்கள் மூலம் செய்யப்படும் பணிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் பேசப்படுகிறது
புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலம், கட்டும் போதே, ஹைட்ராலிக் பழுது காரணமாக கூறப்படுகிறது இடிந்து விழுந்துள்ள சம்பவம் மதுரை நகராட்சி ஊழியர்களும் ஆய்வு செய்கின்றனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரும் விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தார். ஊழல் பெறுகியதால் விபத்து நிகழ்வும் தொடரும் நிலை. பாலம் இடிந்தது குறித்து பேசிய தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், கூறுகையில்‘பாலம் இடிந்து விழவில்லை. ஹைட்ராலிக் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. பெரிய பணியில் 2 ஊழியர்களை மட்டுமே ஏன் ஈடுபடுத்தினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படாமல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பணிக்கு பயன்படுத்தும் இயந்திரங்களை முறையாக ஆய்வு செய்யாமல் இருந்ததும் விபத்துக்கு காரணமாக இருந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மூலம் ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தப்படும். பணியை தொடர்ந்து மேற்கொள்வது குறித்து ஆட்சியர் முடிவு செய்வார்’ எனத் தெரிவித்தார்.
கருத்துகள்