முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஐகானிக் வாரக் கொண்டாட்டங்கள்

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஐகானிக் வாரக் கொண்டாட்டங்கள்



கருத்துக் கோர்வையை மெருகேற்றும் புகைப்படக்கருவி என்ற தலைப்பில் ஒளிப்பதிவாளர் திரு அல்ஃபோன்ஸ் ராய் உரையாற்றுகிறார்

கருத்துக் கோர்வையை மெருகேற்றும் புகைப்படக்கருவி என்ற தலைப்பில் ஒளிப்பதிவாளர் திரு அல்ஃபோன்ஸ் ராய் உரையாற்றும் நிகழ்ச்சியை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் நாளை (ஆகஸ்ட் 25, 2021) காலை 10 மணிக்கு நடத்தவிருக்கிறது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பாக நடைபெறும் ஐகானிக் வாரம் 2021 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 23-ஆம் தேதி, 'படத்தொகுப்பில் தொழில்நுட்பம்- அன்றும், இன்றும்’ என்ற தலைப்பில் திரைப்படத் தொகுப்பாளர் திரு. அக்கினேனி ஸ்ரீகர் பிரசாத் கலந்து கொண்ட இணையவழி நிகழ்ச்சியில், முன்பதிவு செய்திருந்த தமிழ்நாட்டில் உள்ள திறன் மேம்பாட்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 120 மாணவர்கள் இந்த அமர்வில் பங்கேற்றார்கள். தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி, படத்தொகுப்பில் உள்ள நடைமுறைகள் மற்றும் படைப்பம்சங்கள், கதையைத் திறம்பட எடுத்துரைப்பதில் அவற்றின் தாக்கம் குறித்து திரு. ஸ்ரீகர் பிரசாத் உரையாற்றினார். மின்னணு வாயிலாக அவருடன்  கலந்துரையாடிய மாணவர்கள், இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளப்பட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் உத்திகள் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டனர்.

www.cinemasofindia.com என்ற தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஓடிடி தளத்தில், ‘திரைப்படத் தயாரிப்பில் நவீன இந்தியா மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்' என்ற கருப்பொருளில் பல்வேறு விருதுகளைப் பெற்ற திரைப்படங்கள் ஒரு வார காலத்திற்கு இலவசமாக ஒளிபரப்பப்படும்.

ஐகானிக் வாரம் 2021 கொண்டாட்டங்கள் குறித்துப் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் திரைப்படங்கள் பிரிவு இயக்குநரும், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநருமான திருமதி. தன்பிரீத் கௌர், “இந்தியாவின் 75-ஆவது சுதந்திர ஆண்டை முன்னிட்டு நடைபெறும் ஐகானிக் வாரக் கொண்டாட்டங்களின் போது, திரைப்படத் திறன் சார்ந்த நிகழ்ச்சிகளை இணையவழி வாயிலாக நடத்துவதற்கும், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஓடிடி தளத்தில் திரைப்படங்களை திரையிடுவதற்கும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். திறன் மேம்பாட்டிற்கு முன்னுரிமை வழங்கப்படுவதோடு சர்வதேச நிலவரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் இளைஞர்கள் தங்களது தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்”, என்று கூறினார்.

ஆகஸ்ட் 23 முதல் 29 வரை நடைபெறும் ஐகானிக் வாரம் 2021, இந்திய அரசின் விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவ முன்முயற்சியின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் பொதுமேலாளர் திரு. டி. ராமகிருஷ்ணன் பேசுகையில், “திரைப்படத் தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு குறித்த அமர்வுகளில், புகழ்பெற்ற மற்றும் விருதுகள் வென்ற சிறப்பு அழைப்பாளர்களிடமிருந்து   பல்வேறு திறன்களை  மாணவர்கள் பெறுவதற்கு இது ஒரு மிகச்சிறந்த தருணமாக விளங்கும்”, என்று தெரிவித்தார்.

“பல்வேறு திரைப்படத் திருவிழாக்களுக்கு உகந்த தளமாக இது உருவாகி வருகிறது. ஐகானிக் வாரத்தை முன்னிட்டு, இந்தத் தளத்தில் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் பல்வேறு படைப்புகளை ஒளிபரப்புவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். திரைப்பட அறிவை மேம்படுத்தி புதிய தலைமுறை திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இதன் மூலம் ஊக்கமளிக்கப்படும்”, என்று சிண்டிகேஷன் அண்ட் மார்க்கெட்டிங்கின் விநியோகப் பிரிவு தலைவர் திருமிகு தீப்தி சாவ்லா கூறினார்.

சிறப்பு அழைப்பாளர்கள் பற்றி:

திரு அக்கினேனி ஸ்ரீகர் பிரசாத்-

திரு அக்கினேனி ஸ்ரீகர் பிரசாத், இந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ், இந்தி ஆகிய மொழிப் படங்களில் அதிகமாகப் பணியாற்றி வருகிறார். எட்டு தேசிய திரைப்பட விருதுகளையும், 5 கேரள மாநிலத் திரைப்பட விருதுகளையும், 2 நந்தி விருதுகளையும், 2 ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இந்தியத் திரைப்படத்துறையில் பல்வேறு மொழிகளில் பங்களித்ததற்காக 2013-ஆம் ஆண்டின் லிம்கா சாதனைப் புத்தகத்தில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. “அதிக எண்ணிக்கையிலான மொழிகளில் தொகுக்கப்பட்ட திரைப்படங்களுக்கான” சாதனையையும் படைத்து,  லிம்கா சாதனைப் புத்தகத்தில் திரு பிரசாத் இடம்பெற்றுள்ளார். இதுவரை 17 வெவ்வேறு மொழிகளின் படங்களுக்கு அவர் திரைப்படத் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

திரு அல்ஃபோன்ஸ் ராய்-

திரு அல்ஃபோன்ஸ் ராய், இந்திய ஒளிப்பதிவாளராவார். அடிப்படையில் அவர் ஓர் வன உயிரின ஒளிப்பதிவாளர். டிரெஷர் சீகர்ஸ்: டிபெட்’ஸ் ஹிட்டன் கிங்டம், கிங்டம் ஆஃப் கோப்ரா, டெம்பிள் டவர், எலிபன்ட் மௌண்டைன் மற்றும் டைகர் பை நைட் போன்ற வன உயிரின ஆவணங்களில் தமது பங்களிப்பை இவர் வழங்கியுள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு தனது முதல் திரைப்படமான ஆமீர்க்கு அவர் விருது பெற்றார். ரெய்ட், மே கட், ஆமீர், குலாபி கேங், மும்பை கட்டிங் உள்ளிடிட்ட திரைப்படங்களில் அவர் பணியாற்றியுள்ளார்.

சினிமாஸ் ஆஃப் இந்தியா:

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஓடிடி தளமான www.cinemasofindia.com இல்  ‘திரைப்படத் தயாரிப்பில் நவீன இந்தியா மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள்' என்ற கருப்பொருளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும். ஐலண்ட் சிட்டி, பயாஸ்கோப், கிராசிங் பிரிட்ஜஸ், பங்கர்வாடி, வீஸ் மஞ்சி வீஸ், மிஸ் பீட்டீ’ஸ் சில்ரன் மற்றும் ஏக் கர் ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும்.

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் பற்றி:

கடந்த 1985-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், இந்தியாவில் சிறந்த திரைப்பட இயக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் (இந்திய அரசு) உருவாக்கப்பட்டது. பல்வேறு இந்திய மொழிகளின் தனிநபர் திரைப்படங்களுக்கு நிதி, விநியோகம் மற்றும் வளர்ச்சி சார்ந்த ஆதரவை அளிப்பதற்கான சூழலை உருவாக்குவதில் இந்த அமைப்பு முக்கிய பங்காற்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த