முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காந்தி தான் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார் - எழுத்தாளர் பாவண்ணன் தகவல்

பெண்களும் எதிர்ப்புக் குரல் எழுப்பலாம் என்று தன்னம்பிக்கை ஊட்டியவர் மகாத்மா காந்தி-எழுத்தாளர் பாவண்ணன் தகவல்


தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி இந்தியா திரும்பி விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த பிறகுதான் பெண்கள் பங்கேற்பு அதிகரித்தது. காந்தியின் கருத்துக்களும் முழக்கங்களும் அழைப்புகளும் பெண்களுக்கு அரசியல் போராட்டங்களில் ஈடுபட பல வாய்ப்புகளை வழங்கின. தங்களின் உரிமைகளுக்காக தாங்களும் உரிமைக் குரல் எழுப்பலாம் என்று காந்திதான் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார். கடலூர் அஞ்சலையம்மாள் மற்றும் எழுத்தாளரும் மேடைப் பேச்சாளருமான கோதைநாயகி அம்மாள் இருவரையும் உதாரணங்களாகச் சொல்லலாம். இதுபோன்ற எண்ணற்ற பெண்களின் தியாகங்கள் ஏடுகளில் மறைந்துள்ளன, எழுத்துகளில் புதைந்துள்ளன.  இன்றைய தலைமுறையினர் விடுதலைப் போராட்ட வீர்ர்களின் வாழ்க்கையையும் தியாகங்களையும் தெரிந்து கொள்ளவேண்டும்.  அப்போதுதான் சுதந்திரத்தின் அருமை அவர்களுக்குத் தெரியும் என்று சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.பாவண்ணன் தெரிவித்தார்.


புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகமும் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப் பணித் திட்டமும் இணைந்து நேற்று பிற்பகல்(28.8.2021) நடத்திய இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு சிறப்பு காணொலி கருத்தரங்கில் துவக்கவுரை ஆற்றியபோது பாவண்ணன் இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் முதல்வர் டாக்டர் கே.விவேகானந்தன் தலைமை வகித்தார். உழைப்புதான் என்றும் நிலைத்திருக்கும். அயராது நம் முன்னோர் உழைத்ததால்தான் நாம் இன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம்.  இன்றைய மாணவர்கள் உழைப்புக்கு மரியாதை கொடுப்பதோடு உழைக்கவும் தயங்கக் கூடாது என்று திரு. விவேகானந்தன் குறிப்பிட்டார்.

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மின்னணுவியல் & கணிப்பொறி அறிவியல் துறைப்பேராசிரியர் டாக்டர் க.நாகராஜன் சிறப்புரை வழங்கினார். வெளிநாட்டினர் நம் நாட்டை காந்தியின் நாடாகத்தான் பார்க்கின்றனர்.  நம்மை காந்தியின் வாரிசுகளாகத்தான் உலகம் பார்க்கின்றது.  ஆனால் நாம்தான் காந்தியின் கொள்கைகளைத் தெரிந்து கொள்வதோ கடைபிடிப்பதோ இல்லை. குறைந்தபட்சம் காந்தி வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தையாவது இன்றைய தலைமுறையினர் பாதுகாக்க  வேண்டும் என்று திரு. நாகராஜன் தனது உரையில் குறிப்பிட்டார்.


புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான டாக்டர் எஸ்.ராஜேந்திரன் கருத்துரை வழங்கினார்.

உரையரங்கத்துக்குப் பிறகு மாணவ மாணவிகளுக்கான ஆன்லைன் பேச்சுப் போட்டி நடந்தது.  விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பிலான இந்த பேச்சுப் போட்டியில் 10 பேர் கலந்து கொண்டனர். எழுத்தாளர் திரு.பாவண்ணன் மற்றும் பேராசிரியர் க. நாகராஜன் இருவரும் நடுவர்களாக இருந்து பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்தனர். முதல் பரிசுக்கு ஏபி. நிவேதிதா, இரண்டாம் பரிசுக்கு சி.தாமரைச்செல்வி மற்றும் மூன்றாம் பரிசுக்கு எஸ். ஸ்ரீமதி, எஸ்.சந்தியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முன்னதாக புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் வரவேற்பு ஆற்றினார்.  வரலாற்றில் ஆவணப்படுத்தாமல் விடப்பட்டுள்ள மற்றும் பிரபலமாகாத விடுதலைப் போராட்ட வீர்ர்களின் வாழ்க்கையையும் தியாகங்களையும் வெளிப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது என்று சிவக்குமார் தெரிவித்தார். மாணவர்கள் தங்கள் பகுதிகளில் யாராவது இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்களா எனத் தேடிக் கண்டறிந்து அவர்களை வெளி உலகிற்கு தெரியப்படுத்த முன்வர வேண்டும் என்று சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.

நிறைவில் கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நன்றி கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...