முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காந்தி தான் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார் - எழுத்தாளர் பாவண்ணன் தகவல்

பெண்களும் எதிர்ப்புக் குரல் எழுப்பலாம் என்று தன்னம்பிக்கை ஊட்டியவர் மகாத்மா காந்தி-எழுத்தாளர் பாவண்ணன் தகவல்


தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி இந்தியா திரும்பி விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த பிறகுதான் பெண்கள் பங்கேற்பு அதிகரித்தது. காந்தியின் கருத்துக்களும் முழக்கங்களும் அழைப்புகளும் பெண்களுக்கு அரசியல் போராட்டங்களில் ஈடுபட பல வாய்ப்புகளை வழங்கின. தங்களின் உரிமைகளுக்காக தாங்களும் உரிமைக் குரல் எழுப்பலாம் என்று காந்திதான் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார். கடலூர் அஞ்சலையம்மாள் மற்றும் எழுத்தாளரும் மேடைப் பேச்சாளருமான கோதைநாயகி அம்மாள் இருவரையும் உதாரணங்களாகச் சொல்லலாம். இதுபோன்ற எண்ணற்ற பெண்களின் தியாகங்கள் ஏடுகளில் மறைந்துள்ளன, எழுத்துகளில் புதைந்துள்ளன.  இன்றைய தலைமுறையினர் விடுதலைப் போராட்ட வீர்ர்களின் வாழ்க்கையையும் தியாகங்களையும் தெரிந்து கொள்ளவேண்டும்.  அப்போதுதான் சுதந்திரத்தின் அருமை அவர்களுக்குத் தெரியும் என்று சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.பாவண்ணன் தெரிவித்தார்.


புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகமும் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப் பணித் திட்டமும் இணைந்து நேற்று பிற்பகல்(28.8.2021) நடத்திய இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு சிறப்பு காணொலி கருத்தரங்கில் துவக்கவுரை ஆற்றியபோது பாவண்ணன் இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் முதல்வர் டாக்டர் கே.விவேகானந்தன் தலைமை வகித்தார். உழைப்புதான் என்றும் நிலைத்திருக்கும். அயராது நம் முன்னோர் உழைத்ததால்தான் நாம் இன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம்.  இன்றைய மாணவர்கள் உழைப்புக்கு மரியாதை கொடுப்பதோடு உழைக்கவும் தயங்கக் கூடாது என்று திரு. விவேகானந்தன் குறிப்பிட்டார்.

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மின்னணுவியல் & கணிப்பொறி அறிவியல் துறைப்பேராசிரியர் டாக்டர் க.நாகராஜன் சிறப்புரை வழங்கினார். வெளிநாட்டினர் நம் நாட்டை காந்தியின் நாடாகத்தான் பார்க்கின்றனர்.  நம்மை காந்தியின் வாரிசுகளாகத்தான் உலகம் பார்க்கின்றது.  ஆனால் நாம்தான் காந்தியின் கொள்கைகளைத் தெரிந்து கொள்வதோ கடைபிடிப்பதோ இல்லை. குறைந்தபட்சம் காந்தி வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தையாவது இன்றைய தலைமுறையினர் பாதுகாக்க  வேண்டும் என்று திரு. நாகராஜன் தனது உரையில் குறிப்பிட்டார்.


புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான டாக்டர் எஸ்.ராஜேந்திரன் கருத்துரை வழங்கினார்.

உரையரங்கத்துக்குப் பிறகு மாணவ மாணவிகளுக்கான ஆன்லைன் பேச்சுப் போட்டி நடந்தது.  விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பிலான இந்த பேச்சுப் போட்டியில் 10 பேர் கலந்து கொண்டனர். எழுத்தாளர் திரு.பாவண்ணன் மற்றும் பேராசிரியர் க. நாகராஜன் இருவரும் நடுவர்களாக இருந்து பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்தனர். முதல் பரிசுக்கு ஏபி. நிவேதிதா, இரண்டாம் பரிசுக்கு சி.தாமரைச்செல்வி மற்றும் மூன்றாம் பரிசுக்கு எஸ். ஸ்ரீமதி, எஸ்.சந்தியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முன்னதாக புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் வரவேற்பு ஆற்றினார்.  வரலாற்றில் ஆவணப்படுத்தாமல் விடப்பட்டுள்ள மற்றும் பிரபலமாகாத விடுதலைப் போராட்ட வீர்ர்களின் வாழ்க்கையையும் தியாகங்களையும் வெளிப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது என்று சிவக்குமார் தெரிவித்தார். மாணவர்கள் தங்கள் பகுதிகளில் யாராவது இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்களா எனத் தேடிக் கண்டறிந்து அவர்களை வெளி உலகிற்கு தெரியப்படுத்த முன்வர வேண்டும் என்று சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.

நிறைவில் கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நன்றி கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...