முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதி நிலை வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதி நிலை வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.


20 ஆண்டுகளுக்கு முன் 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சரானபோது வெள்ளை அறிக்கை சட்டசபையில் தாக்கலானது. இப்போது பொதுவெளி பத்திரிக்கையாளர்கள் முன்பு வெளியிடப்பட்டது.


தமிழகத்தின் கடன் சுமை எவ்வளவு என்ற தகவலை, பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில், "வெள்ளை அறிக்கை" தாக்கல் செய்யப்பட்டது





மின் துறையும் போக்குவரத்து துறையும் ரூபாய் 2 லட்சம் கோடி கடன் வைத்துள்ளது


தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையாக வராமலிருக்கிறது


10 ஆண்டுகளில் மாநில வருவாய் வளர்ச்சி 4.4 சதவீதமாகச் சரிவு ஒரு குடும்பத்தின் மீதும் ரூபாய் 2.63 லட்சம் ரூபாய் கடனுள்ளது உள்ளாட்சித் தேர்தலை சரியான தருணத்தில் நடத்தாததால் 2 ஆயிரத்து 577 கோடி அரசுக்கு இழப்பு 27 31 கோடி ரூபாயை வாங்கிய கடனுக்காக தமிழ்நாடரசு, நாள் ஒன்றுக்கு செலுத்தி வருகிறது .


தமிழ்நாடு அரசுக்கு வருமானம் மிகவும் சரிந்துள்ளது .


மாநிலத்தின் வளர்ச்சி, மற்றும் வேலை வாய்ப்பு ம் குறைவாக இருப்டதை அறிகையில் நிதியமைச்சர்  அறிவித்தார்.

தமிழ்நாடு அரசின் தற்போதைய மொத்த கடன் சுமை ரூபாய் 5.70 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது


மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களை கூட்டி ஒரு குழு ஏற்படுத்தியிருக்கிறார் தற்போதைய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அவருடைய திறமையான நிர்வாகத்தின் மூலமாக தமிழக அரசு சிறந்த இடத்திற்கு வருமென்ற நம்பிக்கையுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.


சர்வதேச அளவில் பொருளாதார "மந்தம்" ஏற்பட்டால், தற்போதைய சூழ்நிலையில், தமிழ்நாட்டிற்கு சற்று பாதிப்பு அதிகமாகவே இருக்குமென பயத்தையும் நிதியமைச்சர் விளக்கிளார்.


கொரோனா, பணமதிப்பிழப்பு, போன்றவற்றைச் சமாளிக்க கூடிய அளவிற்கு தமிழ்நாட்டில் வங்கிகள், மருத்துவமனைகள் கட்டமைப்பு,ச் செயல்பாடு சரியானதாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் சமூகநீதியை,  நீதிக் கட்சி ;தி.மு.க. ;ஆகியவை தொடர்ந்து முனைப்புடன் செயல்படுத்தியதால், பொருளாதார ஏற்றத்தாழ்வு இடைவெளி குறைவாக உள்ளது.


தமிழக அரசினுடைய நிதிநிலை அதலபாதாளத்திற்கு சென்று விட்டதாக வெள்ளை அறிக்கையின் மூலமாக தமிழக அரசு ஒத்துக் கொண்டிருப்பது கடந்த ஆட்சியில் நடைபெற்ற சீர்கேடுகளாகும்.


75000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி வருவாய் அரசுக்கு வராமலேயே இருக்கும் நிலையில், 

தமிழக அரசினுடைய நிதிச்சுமை அதல பாதாளத்திற்கு சென்று விட்ட அதே தருணத்தில் 


வரிச்சுமை இல்லாத அரசு ,

சிறந்த அரசாக இருக்க முடியாது என்றும் , 


வரியில்லாத பட்ஜெட் என்பது கண்துடைப்பு வேலை என்றும்  கூறியிருக்கிறார். இப்படி பல புரட்சிகரமாக கருத்துக்களை வெள்ளை அறிக்கையில் பதிவு செய்த நிதியமைச்சர், தமிழக அரசின் செலவினங்களை குறைப்பதையும், அவர் சுட்டிக் காட்டி இருக்கலாம், 


தமிழக அரசின் தற்போதைய கடன் 5,70,189 கோடியாக உயர்ந்துள்ளதென

வெள்ளை அறிக்கை சொல்கிறது.

ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வெள்ளை அறிக்கையை ஆய்வு செய்து இந்த அறிக்கையை 

அமைச்சர் வெளியிட்டார்.


இதற்கு முன்னால் 2001 ஆம் ஆண்டில் அதிமுக வெளியிட்ட அறிக்கையில் வெளியிட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் வருமானம் மிகவும் சரிந்துள்ளது.

2020-21ம் நிதி ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாகுறை 61 ஆயிரத்து 320 கோடியாக உள்ளது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வருவாய் பற்றாக்குறை இவ்வளவு சரிவு ஏற்பட்டது இல்லை.

வருமானம் சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கி, நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் மீதான கடன் சுமை 2,63,976 ரூபாயாக உள்ளது. நன்று

2011-16 இல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 17 கோடி; 2016 -21 அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடி.

அந்தத் தருணத்தில் வாங்கிய 3 லட்சம் கோடி ரூபாய் கடனில் 50 சதவீதம் இந்தப் பற்றாக்குறையை சமாளிக்கச் செலவிடப்பட்டது.

அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம், அரசாங்க அலுவலகங்களை நிர்வகிப்பது, மின் கட்டணம் கட்டுவது ஆகியவற்றுக்கே கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்.

தமிழக அரசின் தற்போதைய கடன் 5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை 5.24 லட்சம் கோடியாக உள்ளது.

தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் , வட்டி அதிகரித்து விட்டது

கடன் சுமை அதிகரித்து வந்த பாதை

1999-2000 - 18,989 கோடி

2000-2001 - 28,685 கோடி

2001-2002 - 34,540 கோடி

2005-2006 - 50,625 கோடி

2011-2012 - 1,03,999 கோடி

2015-2016 - 2,11,483 கோடி

2017-2018 - 3,14,366 கோடி

2020-2021 - 4,56,660 கோடி

2021 - 4,85,502 கோடிவெள்ளை அறிக்கையில்  சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் உயர்த்தியே ஆகவேண்டுமென்ற அம்சங்கள் இடம்பெற்றிருப்பது கவலை அளிக்கிறது. 

கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சூழல்களால் மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவை சந்தித்திருக்கும் மக்கள், அதிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் வரி உயர்வு, கட்டண உயர்வு மக்களின் பாதிப்பதாக அமைந்துவிடும்.

அதற்குப்  பதிலாக முந்தைய ஆட்சியாளர்கள் முறைகேடாகவும் தவறாகவும் செலவழித்ததாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூபாய் ஒரு லட்சம் கோடியை,

அதற்குக் காரணமானவர்களிடமிருந்து மீட்டெடுக்கும் வேலையை தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்க்கின்றனர் 

அப்படிச் செய்யாமல் வெறுமனே  அறிக்கை கொடுத்ததோடு மட்டும் நின்றுவிட்டால், பழைய 60:40 பங்கீட்டு பாசத்தில் தி.மு.க அரசு இப்படி நடந்து கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது. 

பழைய ஆட்சியில் சிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் தலையிலும் நிதிச்சுமையை ஏற்ற தமிழக அரசு முயற்சிக்கக்கூடாது. என பல தலைவர்கள்  வேண்டுகோளாகும். 

மக்களுக்கு பாதிப்பில்லாமல் நிதி நிலையைச்  சீரமைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த