முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதி நிலை வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.

தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதி நிலை வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.


20 ஆண்டுகளுக்கு முன் 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சரானபோது வெள்ளை அறிக்கை சட்டசபையில் தாக்கலானது. இப்போது பொதுவெளி பத்திரிக்கையாளர்கள் முன்பு வெளியிடப்பட்டது.


தமிழகத்தின் கடன் சுமை எவ்வளவு என்ற தகவலை, பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில், "வெள்ளை அறிக்கை" தாக்கல் செய்யப்பட்டது





மின் துறையும் போக்குவரத்து துறையும் ரூபாய் 2 லட்சம் கோடி கடன் வைத்துள்ளது


தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையாக வராமலிருக்கிறது


10 ஆண்டுகளில் மாநில வருவாய் வளர்ச்சி 4.4 சதவீதமாகச் சரிவு ஒரு குடும்பத்தின் மீதும் ரூபாய் 2.63 லட்சம் ரூபாய் கடனுள்ளது உள்ளாட்சித் தேர்தலை சரியான தருணத்தில் நடத்தாததால் 2 ஆயிரத்து 577 கோடி அரசுக்கு இழப்பு 27 31 கோடி ரூபாயை வாங்கிய கடனுக்காக தமிழ்நாடரசு, நாள் ஒன்றுக்கு செலுத்தி வருகிறது .


தமிழ்நாடு அரசுக்கு வருமானம் மிகவும் சரிந்துள்ளது .


மாநிலத்தின் வளர்ச்சி, மற்றும் வேலை வாய்ப்பு ம் குறைவாக இருப்டதை அறிகையில் நிதியமைச்சர்  அறிவித்தார்.

தமிழ்நாடு அரசின் தற்போதைய மொத்த கடன் சுமை ரூபாய் 5.70 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது


மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களை கூட்டி ஒரு குழு ஏற்படுத்தியிருக்கிறார் தற்போதைய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அவருடைய திறமையான நிர்வாகத்தின் மூலமாக தமிழக அரசு சிறந்த இடத்திற்கு வருமென்ற நம்பிக்கையுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.


சர்வதேச அளவில் பொருளாதார "மந்தம்" ஏற்பட்டால், தற்போதைய சூழ்நிலையில், தமிழ்நாட்டிற்கு சற்று பாதிப்பு அதிகமாகவே இருக்குமென பயத்தையும் நிதியமைச்சர் விளக்கிளார்.


கொரோனா, பணமதிப்பிழப்பு, போன்றவற்றைச் சமாளிக்க கூடிய அளவிற்கு தமிழ்நாட்டில் வங்கிகள், மருத்துவமனைகள் கட்டமைப்பு,ச் செயல்பாடு சரியானதாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் சமூகநீதியை,  நீதிக் கட்சி ;தி.மு.க. ;ஆகியவை தொடர்ந்து முனைப்புடன் செயல்படுத்தியதால், பொருளாதார ஏற்றத்தாழ்வு இடைவெளி குறைவாக உள்ளது.


தமிழக அரசினுடைய நிதிநிலை அதலபாதாளத்திற்கு சென்று விட்டதாக வெள்ளை அறிக்கையின் மூலமாக தமிழக அரசு ஒத்துக் கொண்டிருப்பது கடந்த ஆட்சியில் நடைபெற்ற சீர்கேடுகளாகும்.


75000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி வருவாய் அரசுக்கு வராமலேயே இருக்கும் நிலையில், 

தமிழக அரசினுடைய நிதிச்சுமை அதல பாதாளத்திற்கு சென்று விட்ட அதே தருணத்தில் 


வரிச்சுமை இல்லாத அரசு ,

சிறந்த அரசாக இருக்க முடியாது என்றும் , 


வரியில்லாத பட்ஜெட் என்பது கண்துடைப்பு வேலை என்றும்  கூறியிருக்கிறார். இப்படி பல புரட்சிகரமாக கருத்துக்களை வெள்ளை அறிக்கையில் பதிவு செய்த நிதியமைச்சர், தமிழக அரசின் செலவினங்களை குறைப்பதையும், அவர் சுட்டிக் காட்டி இருக்கலாம், 


தமிழக அரசின் தற்போதைய கடன் 5,70,189 கோடியாக உயர்ந்துள்ளதென

வெள்ளை அறிக்கை சொல்கிறது.

ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வெள்ளை அறிக்கையை ஆய்வு செய்து இந்த அறிக்கையை 

அமைச்சர் வெளியிட்டார்.


இதற்கு முன்னால் 2001 ஆம் ஆண்டில் அதிமுக வெளியிட்ட அறிக்கையில் வெளியிட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் வருமானம் மிகவும் சரிந்துள்ளது.

2020-21ம் நிதி ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாகுறை 61 ஆயிரத்து 320 கோடியாக உள்ளது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வருவாய் பற்றாக்குறை இவ்வளவு சரிவு ஏற்பட்டது இல்லை.

வருமானம் சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கி, நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் மீதான கடன் சுமை 2,63,976 ரூபாயாக உள்ளது. நன்று

2011-16 இல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 17 கோடி; 2016 -21 அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடி.

அந்தத் தருணத்தில் வாங்கிய 3 லட்சம் கோடி ரூபாய் கடனில் 50 சதவீதம் இந்தப் பற்றாக்குறையை சமாளிக்கச் செலவிடப்பட்டது.

அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம், அரசாங்க அலுவலகங்களை நிர்வகிப்பது, மின் கட்டணம் கட்டுவது ஆகியவற்றுக்கே கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்.

தமிழக அரசின் தற்போதைய கடன் 5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை 5.24 லட்சம் கோடியாக உள்ளது.

தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் , வட்டி அதிகரித்து விட்டது

கடன் சுமை அதிகரித்து வந்த பாதை

1999-2000 - 18,989 கோடி

2000-2001 - 28,685 கோடி

2001-2002 - 34,540 கோடி

2005-2006 - 50,625 கோடி

2011-2012 - 1,03,999 கோடி

2015-2016 - 2,11,483 கோடி

2017-2018 - 3,14,366 கோடி

2020-2021 - 4,56,660 கோடி

2021 - 4,85,502 கோடிவெள்ளை அறிக்கையில்  சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் உயர்த்தியே ஆகவேண்டுமென்ற அம்சங்கள் இடம்பெற்றிருப்பது கவலை அளிக்கிறது. 

கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சூழல்களால் மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவை சந்தித்திருக்கும் மக்கள், அதிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் வரி உயர்வு, கட்டண உயர்வு மக்களின் பாதிப்பதாக அமைந்துவிடும்.

அதற்குப்  பதிலாக முந்தைய ஆட்சியாளர்கள் முறைகேடாகவும் தவறாகவும் செலவழித்ததாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூபாய் ஒரு லட்சம் கோடியை,

அதற்குக் காரணமானவர்களிடமிருந்து மீட்டெடுக்கும் வேலையை தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்க்கின்றனர் 

அப்படிச் செய்யாமல் வெறுமனே  அறிக்கை கொடுத்ததோடு மட்டும் நின்றுவிட்டால், பழைய 60:40 பங்கீட்டு பாசத்தில் தி.மு.க அரசு இப்படி நடந்து கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது. 

பழைய ஆட்சியில் சிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் தலையிலும் நிதிச்சுமையை ஏற்ற தமிழக அரசு முயற்சிக்கக்கூடாது. என பல தலைவர்கள்  வேண்டுகோளாகும். 

மக்களுக்கு பாதிப்பில்லாமல் நிதி நிலையைச்  சீரமைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...