தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதி நிலை வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.
20 ஆண்டுகளுக்கு முன் 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சரானபோது வெள்ளை அறிக்கை சட்டசபையில் தாக்கலானது. இப்போது பொதுவெளி பத்திரிக்கையாளர்கள் முன்பு வெளியிடப்பட்டது.
தமிழகத்தின் கடன் சுமை எவ்வளவு என்ற தகவலை, பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில், "வெள்ளை அறிக்கை" தாக்கல் செய்யப்பட்டது
மின் துறையும் போக்குவரத்து துறையும் ரூபாய் 2 லட்சம் கோடி கடன் வைத்துள்ளது
தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையாக வராமலிருக்கிறது
10 ஆண்டுகளில் மாநில வருவாய் வளர்ச்சி 4.4 சதவீதமாகச் சரிவு ஒரு குடும்பத்தின் மீதும் ரூபாய் 2.63 லட்சம் ரூபாய் கடனுள்ளது உள்ளாட்சித் தேர்தலை சரியான தருணத்தில் நடத்தாததால் 2 ஆயிரத்து 577 கோடி அரசுக்கு இழப்பு 27 31 கோடி ரூபாயை வாங்கிய கடனுக்காக தமிழ்நாடரசு, நாள் ஒன்றுக்கு செலுத்தி வருகிறது .
தமிழ்நாடு அரசுக்கு வருமானம் மிகவும் சரிந்துள்ளது .
மாநிலத்தின் வளர்ச்சி, மற்றும் வேலை வாய்ப்பு ம் குறைவாக இருப்டதை அறிகையில் நிதியமைச்சர் அறிவித்தார்.
தமிழ்நாடு அரசின் தற்போதைய மொத்த கடன் சுமை ரூபாய் 5.70 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது
மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களை கூட்டி ஒரு குழு ஏற்படுத்தியிருக்கிறார் தற்போதைய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அவருடைய திறமையான நிர்வாகத்தின் மூலமாக தமிழக அரசு சிறந்த இடத்திற்கு வருமென்ற நம்பிக்கையுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.
சர்வதேச அளவில் பொருளாதார "மந்தம்" ஏற்பட்டால், தற்போதைய சூழ்நிலையில், தமிழ்நாட்டிற்கு சற்று பாதிப்பு அதிகமாகவே இருக்குமென பயத்தையும் நிதியமைச்சர் விளக்கிளார்.
கொரோனா, பணமதிப்பிழப்பு, போன்றவற்றைச் சமாளிக்க கூடிய அளவிற்கு தமிழ்நாட்டில் வங்கிகள், மருத்துவமனைகள் கட்டமைப்பு,ச் செயல்பாடு சரியானதாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் சமூகநீதியை, நீதிக் கட்சி ;தி.மு.க. ;ஆகியவை தொடர்ந்து முனைப்புடன் செயல்படுத்தியதால், பொருளாதார ஏற்றத்தாழ்வு இடைவெளி குறைவாக உள்ளது.
தமிழக அரசினுடைய நிதிநிலை அதலபாதாளத்திற்கு சென்று விட்டதாக வெள்ளை அறிக்கையின் மூலமாக தமிழக அரசு ஒத்துக் கொண்டிருப்பது கடந்த ஆட்சியில் நடைபெற்ற சீர்கேடுகளாகும்.
75000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி வருவாய் அரசுக்கு வராமலேயே இருக்கும் நிலையில்,
தமிழக அரசினுடைய நிதிச்சுமை அதல பாதாளத்திற்கு சென்று விட்ட அதே தருணத்தில்
வரிச்சுமை இல்லாத அரசு ,
சிறந்த அரசாக இருக்க முடியாது என்றும் ,
வரியில்லாத பட்ஜெட் என்பது கண்துடைப்பு வேலை என்றும் கூறியிருக்கிறார். இப்படி பல புரட்சிகரமாக கருத்துக்களை வெள்ளை அறிக்கையில் பதிவு செய்த நிதியமைச்சர், தமிழக அரசின் செலவினங்களை குறைப்பதையும், அவர் சுட்டிக் காட்டி இருக்கலாம்,
தமிழக அரசின் தற்போதைய கடன் 5,70,189 கோடியாக உயர்ந்துள்ளதென
வெள்ளை அறிக்கை சொல்கிறது.
ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வெள்ளை அறிக்கையை ஆய்வு செய்து இந்த அறிக்கையை
அமைச்சர் வெளியிட்டார்.
இதற்கு முன்னால் 2001 ஆம் ஆண்டில் அதிமுக வெளியிட்ட அறிக்கையில் வெளியிட்டது.
கடந்த 10 ஆண்டுகளில் வருமானம் மிகவும் சரிந்துள்ளது.
2020-21ம் நிதி ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாகுறை 61 ஆயிரத்து 320 கோடியாக உள்ளது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வருவாய் பற்றாக்குறை இவ்வளவு சரிவு ஏற்பட்டது இல்லை.
வருமானம் சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கி, நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் மீதான கடன் சுமை 2,63,976 ரூபாயாக உள்ளது. நன்று
2011-16 இல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 17 கோடி; 2016 -21 அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடி.
அந்தத் தருணத்தில் வாங்கிய 3 லட்சம் கோடி ரூபாய் கடனில் 50 சதவீதம் இந்தப் பற்றாக்குறையை சமாளிக்கச் செலவிடப்பட்டது.
அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம், அரசாங்க அலுவலகங்களை நிர்வகிப்பது, மின் கட்டணம் கட்டுவது ஆகியவற்றுக்கே கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்.
தமிழக அரசின் தற்போதைய கடன் 5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது.
தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை 5.24 லட்சம் கோடியாக உள்ளது.
தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் , வட்டி அதிகரித்து விட்டது
கடன் சுமை அதிகரித்து வந்த பாதை
1999-2000 - 18,989 கோடி
2000-2001 - 28,685 கோடி
2001-2002 - 34,540 கோடி
2005-2006 - 50,625 கோடி
2011-2012 - 1,03,999 கோடி
2015-2016 - 2,11,483 கோடி
2017-2018 - 3,14,366 கோடி
2020-2021 - 4,56,660 கோடி
2021 - 4,85,502 கோடிவெள்ளை அறிக்கையில் சொத்து வரி, வாகன வரி, மின் கட்டணம் உயர்த்தியே ஆகவேண்டுமென்ற அம்சங்கள் இடம்பெற்றிருப்பது கவலை அளிக்கிறது.
கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சூழல்களால் மிகப்பெரிய பொருளாதாரப் பின்னடைவை சந்தித்திருக்கும் மக்கள், அதிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் வரி உயர்வு, கட்டண உயர்வு மக்களின் பாதிப்பதாக அமைந்துவிடும்.
அதற்குப் பதிலாக முந்தைய ஆட்சியாளர்கள் முறைகேடாகவும் தவறாகவும் செலவழித்ததாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூபாய் ஒரு லட்சம் கோடியை,
அதற்குக் காரணமானவர்களிடமிருந்து மீட்டெடுக்கும் வேலையை தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்க்கின்றனர்
அப்படிச் செய்யாமல் வெறுமனே அறிக்கை கொடுத்ததோடு மட்டும் நின்றுவிட்டால், பழைய 60:40 பங்கீட்டு பாசத்தில் தி.மு.க அரசு இப்படி நடந்து கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது.
பழைய ஆட்சியில் சிலர் செய்த தவறுகளுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் தலையிலும் நிதிச்சுமையை ஏற்ற தமிழக அரசு முயற்சிக்கக்கூடாது. என பல தலைவர்கள் வேண்டுகோளாகும்.
மக்களுக்கு பாதிப்பில்லாமல் நிதி நிலையைச் சீரமைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்
கருத்துகள்