முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்புடைய தமிழ்நாடு முழுவதும் 52 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர்.


கோயமுத்தூரிலுள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் 10 க்கும் மேற்பட்ட விஜிலென்ஸ் அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உட்பட பி.அன்பரசன், பி. சந்திரசேகர், உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.




கோயமுத்தூர் மாநகராட்சித் திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தத்தில் ரூபாய். 346 கோடி ஊழல் செய்துள்ளதாகப் புகார்.திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதியின் கொடுத்த ஊழல் புகாரில் உயர்நீதிமன்ற சட்ட வழிகாட்டுதல் வழியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 09 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியில் எஸ்.பி.வேலுமணி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதில்







 புகார் பதிவில் கூறப்பட்டதாவது: 2014 ஆம் ஆண்டு தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்பி வேலுமணி பொறுப்பேற்று. இவரது நிர்வாகத்தின் கீழ் வரும் சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் கோயமுத்தூர் மாநகராட்சி ஆகியவற்றில் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் சென்னை மாநகராட்சிக்கான ஒப்பந்தங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு முறைகேடாகத் தர அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார். இதேபோல் கோயமுத்தூர் மாநகராட்சிக்கான அரசு ஒப்பந்தங்களையும் நெருக்கமானவர்களுக்குத் தருவதற்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்.


ரூபாய் 464 கோடி முறைகேடுகள்

2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 464.02 கோடி ரூபாய் அளவிற்கு சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களும், 346,81 கோடி மதிப்பிலான கோயமுத்தூர் மாநகராட்சி ஒப்பந்தங்களும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கியுள்ளார்.







தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மைச் சட்டம் 1998 ன் படி இது தவறாகும். 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒப்பந்தங்கள் விதிப்படியும் தவறாகும். இந்த விவகாரத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணி உள்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் மனுவில் கூறப்பட்டிருந்ததன் 







பேரில் எஸ்பி வேலுமணியுடன், பி.அன்பரசன், கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட், , கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ், , கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் பங்குதாரர் சந்திரசேகர், எஸ்பி பில்டர்ஸ் நிறுவனர் முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, தி ஏக டெக் மெசினரி காம்பணன்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட், கான்ஸ்ட்ரானிக்ஸ் இன்ப்ரா லிமிடெட், கான்ஸ்ட்ரோமலி குட் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ மகா கணபதி ஜூவல்லர்ஸ், ஆலயம் பவுண்டேசன்ஸ் பிரைவேட் லிமிடெட், வைதுர்யா ஹோட்டல்ஸ், ரத்னா லக்ஷமி ஹோட்டல்ஸ் பி லிமிடெட், ஆலம் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ், ஏசூர் இஎஸ பிஇ இன்ப்ரா , கு ராஜன் உள்பட 17 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.








இதனிடையே நேற்று எஸ்பி வேலுமணி உள்பட 17 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில்,இன்று காலை சென்னை, கோயமுத்தூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில்  ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த வழக்கில் ஆதாரங்கள் சிக்கிய விபரம் சோதனையின் முடிவில் தெரியவரும். அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா உயிருடன் இருந்த போது இவர் நாளாம்கட்டத் தலைவராகத் தான் இருந்தார். அவர் மரணமடைந்த பின்னர் அப் பகுதியில் முன்னால் அமைச்சர் செ.மா.வேலுச்சாமியை பின் தள்ளி வசதி படைத்த உயர் தட்டு மக்களின்  சாமியார் ஜக்கி வாசுதேவ் ஆதரவுடன்  முக்கியத் தலைவராக மாறியவர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான இந்த நடவடிக்கை காலதாமதமாக எடுக்கப்பட்ட போதும் எப்போதோ எதிர்பார்க்கப்பட்டது தான.2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சியில் ரூபாய். 464.02 கோடியும், அதே காலகட்டத்தில் கோயமுத்தூர் மாநகராட்சியில் ரூபாயா.346.81 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களைத் தனக்கு நெருக்கமானவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  வழங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் குற்றச்சாட்டாகும் இதுபோல பல இனிமேல் வரும்.                             தமிழ் நாட்டில் நிறைய  அப்பாக்கள், பிள்ளைகளுக்கு பொம்மை ஹெலிக்காப்டர் கூட வாங்கிக் கொடுக்க முடியாத கொரானா கால ஏக்கத்தைப் போக்க இவர் தன் பிள்ளைக்கு நிஜத்தில் ஹெலிக் காப்டர் வாங்கிக் கொடுத்திருக்காரு இது ஒரு குத்தமாய்யா? இவர் வீட்டில் தொண்டர்களா, அல்லது கொண்டு வந்த குண்டர்களா?

அரசியலை எத்தகைய இழி நிலைக்கு இட்டுச் சென்றது யார்?

1990-க்குப் பிறகான ஆட்சிகள் தானே 

மேற்கு மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இல்லையா அல்லது இவர்கள் மீது இனிமேல் தான் நடவடிக்கை வருமா இது நாம் கேட்கும் கேள்விகள் அல்ல மிஸ்டர் பொதுஜனமாகும்                   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்? என்ற நிலையில்.நடைபெற்ற ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை முடிவடைந்தது.


பாதுகாப்புப் பெட்டகச் சாவி தவிர வேறு எதுவும் கைப்பற்றப்படவில்லை என ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புத்துறையினர் அறிக்கை வழங்கியுள்ளனர்.                                குறுக்கு வழியில் வந்தவனுக்கும் வரிசையில் காத்திருந்து தரிசித்த    வனுக்குமான வித்தியாசம் தெரியும் -சாமிக்கு! ஊழல் வாதிகள் தண்டனை பெறுவது மக்கள் மகிழ்ச்சி. இந்த நடவடிக்கை இன்னும் பலர் மீது தொடரவேண்டும் என்பது நம் எதிர்பார்ப்புமாகும் ஜனநாயகத்தின் மூலம் மக்களிடம் ஓட்டு வாங்கி வென்று ஊழல் செய்த திருடர்கள் அரசு இயந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்தியதால் பணம் காய்க்கிற மரம் இருந்தாகூட, இத்தனை சதவீதம்

வளர முடியுமா என்பது நமக்கு சந்தேகமே!

இந்த நிறுவணங்களின் வளர்ச்சியைப் பாருங்கள் வாசகர்களே

வர்தன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ்  நிறுவனம் - 6 ஆண்டுகளில் 3202.9 சதம் வளர்ச்சி.

சி.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் - 6 ஆண்டுகளில் 11363.15 சதம் வளர்ச்சி.

கேசிபி இன்ஜினியர்ஸ் லிமிட்டெட்  நிறுவனம் - 6 ஆண்டுகளில் 967.04 சதம் வளர்ச்சி.

ஆலயம் ஃபவுண்டேசன்ஸ் நிறுவனம் - 6 ஆண்டுகளில் 2636.36% வளர்ச்சி.

ஒசூர் பில்டர்ஸ்  நிறுவனம் - 6 ஆண்டுகளில் 2008.60 சதம் வளர்ச்சி.

கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியா நிறுவனம் - 6 ஆண்டுகளில் 4796.50 சதம் வளர்ச்சி.

அதில் ஒரு நிறுவனம் - 11,363 சதம் வளர்ந்துள்ளது, அதுவும் 6 ஆண்டுகளில்

பவாரியா கும்பல்போல கொள்ளை அடிச்சிருந்தா மட்டுந்தான்டா இப்படி ஒரு வளர்ச்சி பெற முடியும்.

அந்த ஊழலுக்கு முட்டு கொடுக்கிற சிலருக்கு மக்கள் கேள்வி உங்க குடும்பம் கடந்த ஆறாண்டுகளில் கண்ட வளர்ச்சி என்ன கூறுங்களேன் !. முடியாது மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளில்   இவர்கள் ஆட்சியில் மிகவும் மோசமான நிலையைச் சந்தித்த கசப்பான அனுபவங்கள் மட்டுமே மிஞ்சும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த