முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி

பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி விபரம் மற்றும் தமிழகத்தில் திறன்பேசிகளை பெற்றுள்ள அங்கன்வாடி பணியாளர்களின் எண்ணிக்கை; திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம்


நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி ஸ்மிரிதி சுபின் இரானி கீழ்காணும் தகவல்களை அளித்தார். 

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு 2016-17-ம் ஆண்டில் ரூ 1442970 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 1252709.79 லட்சம் பயன்படுத்தப்பட்ட நிலையில், 2017-18-ம் ஆண்டு ரூ 1509431.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 1215425.33 லட்சம் பயன்படுத்தப்பட்டு, 2018-19-ம் ஆண்டு ரூ 1675018.08 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 1515082.56 லட்சம் பயன்படுத்தப்பட்டு, 2019-20-ம் ஆண்டு ரூ 1681376.26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 1730432.26 லட்சம் பயன்படுத்தப்பட்டு, 2020-21-ம் ஆண்டு ரூ 1579754.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 2016-17-ம் ஆண்டில் ரூ 47085.82 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 37076.77 லட்சம் பயன்படுத்தப்பட்ட நிலையில், 2017-18-ம் ஆண்டு ரூ 49336.98 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 47550.75 லட்சம் பயன்படுத்தப்பட்டு, 2018-19-ம் ஆண்டு ரூ 65197.17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 54239.48 லட்சம் பயன்படுத்தப்பட்டு, 2019-20-ம் ஆண்டு ரூ

64868.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 65280.11 லட்சம் பயன்படுத்தப்பட்டு, 2020-21-ம் ஆண்டு ரூ 61071.19 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அங்கன்வாடி பணியாளர்களின் சிறப்பான சேவை வழங்கலுக்காக அரசு மின்னணு-சந்தை மூலம் திறன்பேசிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

மொத்தம் 865577 திறன்பேசிகள் கொள்முதல் செய்யப்பட்டு இது வரை வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்காக 59488 திறன்பேசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

போஷன் திட்டத்தின் கீழ் திறன்பேசி கொள்முதல் உள்ளிட்டவற்றுக்காக 2019-20-ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதியாக ரூ 11509 லட்சமும், 2020-21-ம் ஆண்டு ரூ 871.02 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. 2021 மார்ச் 31 வரை ரூ 19476.85 மத்திய நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. 

அங்கன்வாடி சேவைகள் மத்திய அரசு நிதியுதவி வழங்கும் திட்டம் என்கிற போதிலும், அவற்றின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பு மாநிலங்களின் பொறுப்பாகும்.

எனவே, அங்கன்வாடி சேவைகள் குறித்த புகார்கள் வரும் போது, தொடர்புடைய மாநிலம்/யூனியன் பிரதேசத்திற்கு முறையான நடவடிக்கைக்காக அவை அனுப்பி வைக்கப்படுகின்றன. ஊட்டச்சத்து உதவிகள் குறித்த தரவுகளை உடனுக்குடன் கண்காணிப்பதற்காக போஷன் டிராக்கர் எனும் டிஜிட்டல் தளத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் 2021 மார்ச்சில் தொடங்கியுள்ளது.

ஒற்றை நிறுத்த மையங்கள், பெண்கள் உதவி எண்கள் (181), உஜ்வாலா இல்லங்கள், ஸ்வதார் கிரஹங்கள், குழந்தைகள் நல நிறுவனங்கள் குழந்தைகள் உதவி எண் (1098), அவசரகால எதிர்வினை ஆதரவு அமைப்பு (112) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தெருக்களில் சுற்றித்திரியும் கைவிடப்பட்ட குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து தேவையான நடவடிக்கையை எடுக்க குழந்தைகள் நல காவல் அலுவலர்களை நியமிக்குமாறு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு குழந்தைகளின் உரிமைகளுக்கான தேசிய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில், 2021 ஏப்ரல் முதல் 2021 மே 28 வரை நாடு முழுவதும் 645 குழந்தைகள் கொரோனோ பெருந்தொற்றுக்கு தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். 

2021 ஏப்ரல் முதல் 2021 மே 28 வரை தமிழ்நாட்டில் மட்டும் எட்டு குழந்தைகள் கொரோனோ பெருந்தொற்றுக்கு தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர்.

கொவிட்டுக்கு பெற்றோரை இழந்துள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ 10 லட்சம் நிதியுதவியை பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் மாண்புமிகு பிரதமர் அறிவித்துள்ளார். மேலும் பல்வேறு உதவிகளை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

2022 மார்ச் 31-க்குள் ஒரு வீட்டுக்கு ஒருவர் என மொத்தம் 6 கோடி வீடுகளை சென்றடைந்து ஊரக இந்தியாவில் டிஜிட்டல் எழுத்தறிவை உருவாக்கும் விதத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமரின் ஜி திஷா எனும் திட்டத்தை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

2021 ஆகஸ்ட் 2 நிலவரப்படி, சுமார் 5.01 கோடி பயனாளிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். 4.21 கோடி நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2.59 கோடிக்கும் அதிகமான (52 சதவீதம்) பேர் இது வரை தங்களை இதில் பதிவு செய்துக்கொண்டுள்ளனர்.

அங்கன்வாடி மையங்களின் நடவடிக்கைகள், அங்கன்வாடி பணியாளர்களின் சேவை வழங்கல், பயன்பெற்ற கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் விவரம் ஆகிய அனைத்தையும் கண்காணிக்கும் விதத்தில் போஷன் டிராக்கர் செயல்பட்டு வருகிறது.

அங்கன்வாடி பணியாளர்களின் சிறப்பான சேவை வழங்கலுக்காக அரசு மின்னணு-சந்தை மூலம் திறன்பேசிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 865577 திறன்பேசிகள் 32 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் இது வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

ஊட்டச்சத்து குறைபாடில்லா இந்தியாவை உருவாக்குவதற்காக போஷன் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தையின் முதல் 1000 நாட்களில் 18 அமைச்சகங்கள்/துறைகள் ஆற்றக்கூடிய உயர் தாக்க பங்களிப்புகள் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளன.

மாநில அளவில் சிறப்பான செயல்படுத்தலுக்காக, காலாண்டுக்கு ஒரு முறை செயல் திட்ட கூட்டத்திற்கு தலைமை செயலாளர் தலைமை வகிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம்-பொது பயன்பாட்டு மென்பொருளை செயல்படுத்துதலில் குழு 2-ல் உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தையும், திறன் வளர்த்தல், ஒருங்கிணைப்பு, நடத்தைமுறை மாற்றம் மற்றும் சமூகத்தை திரட்டுதல் ஆகியவற்றில் குழு 2-ல் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த சிறப்பான செயல்படுத்துதலிலும் குழு 2-ல் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8910790 குழந்தைகளின் வளர்ச்சி அங்கன்வாடி மையங்களின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த குழந்தைகள் 2039800 பேர்.

தமிழ்நாட்டில் உள்ள 43739 அங்கன்வாடி மையங்களில் குடிநீர் வசதிகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 43214 அங்கன்வாடி மையங்களில் கழிவறை வசதிகள் உள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த