முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி

பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி விபரம் மற்றும் தமிழகத்தில் திறன்பேசிகளை பெற்றுள்ள அங்கன்வாடி பணியாளர்களின் எண்ணிக்கை; திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம்


நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி ஸ்மிரிதி சுபின் இரானி கீழ்காணும் தகவல்களை அளித்தார். 

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு 2016-17-ம் ஆண்டில் ரூ 1442970 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 1252709.79 லட்சம் பயன்படுத்தப்பட்ட நிலையில், 2017-18-ம் ஆண்டு ரூ 1509431.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 1215425.33 லட்சம் பயன்படுத்தப்பட்டு, 2018-19-ம் ஆண்டு ரூ 1675018.08 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 1515082.56 லட்சம் பயன்படுத்தப்பட்டு, 2019-20-ம் ஆண்டு ரூ 1681376.26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 1730432.26 லட்சம் பயன்படுத்தப்பட்டு, 2020-21-ம் ஆண்டு ரூ 1579754.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 2016-17-ம் ஆண்டில் ரூ 47085.82 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 37076.77 லட்சம் பயன்படுத்தப்பட்ட நிலையில், 2017-18-ம் ஆண்டு ரூ 49336.98 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 47550.75 லட்சம் பயன்படுத்தப்பட்டு, 2018-19-ம் ஆண்டு ரூ 65197.17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 54239.48 லட்சம் பயன்படுத்தப்பட்டு, 2019-20-ம் ஆண்டு ரூ

64868.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ 65280.11 லட்சம் பயன்படுத்தப்பட்டு, 2020-21-ம் ஆண்டு ரூ 61071.19 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அங்கன்வாடி பணியாளர்களின் சிறப்பான சேவை வழங்கலுக்காக அரசு மின்னணு-சந்தை மூலம் திறன்பேசிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

மொத்தம் 865577 திறன்பேசிகள் கொள்முதல் செய்யப்பட்டு இது வரை வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்காக 59488 திறன்பேசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

போஷன் திட்டத்தின் கீழ் திறன்பேசி கொள்முதல் உள்ளிட்டவற்றுக்காக 2019-20-ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதியாக ரூ 11509 லட்சமும், 2020-21-ம் ஆண்டு ரூ 871.02 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. 2021 மார்ச் 31 வரை ரூ 19476.85 மத்திய நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. 

அங்கன்வாடி சேவைகள் மத்திய அரசு நிதியுதவி வழங்கும் திட்டம் என்கிற போதிலும், அவற்றின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பு மாநிலங்களின் பொறுப்பாகும்.

எனவே, அங்கன்வாடி சேவைகள் குறித்த புகார்கள் வரும் போது, தொடர்புடைய மாநிலம்/யூனியன் பிரதேசத்திற்கு முறையான நடவடிக்கைக்காக அவை அனுப்பி வைக்கப்படுகின்றன. ஊட்டச்சத்து உதவிகள் குறித்த தரவுகளை உடனுக்குடன் கண்காணிப்பதற்காக போஷன் டிராக்கர் எனும் டிஜிட்டல் தளத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் 2021 மார்ச்சில் தொடங்கியுள்ளது.

ஒற்றை நிறுத்த மையங்கள், பெண்கள் உதவி எண்கள் (181), உஜ்வாலா இல்லங்கள், ஸ்வதார் கிரஹங்கள், குழந்தைகள் நல நிறுவனங்கள் குழந்தைகள் உதவி எண் (1098), அவசரகால எதிர்வினை ஆதரவு அமைப்பு (112) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தெருக்களில் சுற்றித்திரியும் கைவிடப்பட்ட குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து தேவையான நடவடிக்கையை எடுக்க குழந்தைகள் நல காவல் அலுவலர்களை நியமிக்குமாறு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு குழந்தைகளின் உரிமைகளுக்கான தேசிய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில், 2021 ஏப்ரல் முதல் 2021 மே 28 வரை நாடு முழுவதும் 645 குழந்தைகள் கொரோனோ பெருந்தொற்றுக்கு தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். 

2021 ஏப்ரல் முதல் 2021 மே 28 வரை தமிழ்நாட்டில் மட்டும் எட்டு குழந்தைகள் கொரோனோ பெருந்தொற்றுக்கு தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர்.

கொவிட்டுக்கு பெற்றோரை இழந்துள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ 10 லட்சம் நிதியுதவியை பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் மாண்புமிகு பிரதமர் அறிவித்துள்ளார். மேலும் பல்வேறு உதவிகளை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

2022 மார்ச் 31-க்குள் ஒரு வீட்டுக்கு ஒருவர் என மொத்தம் 6 கோடி வீடுகளை சென்றடைந்து ஊரக இந்தியாவில் டிஜிட்டல் எழுத்தறிவை உருவாக்கும் விதத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமரின் ஜி திஷா எனும் திட்டத்தை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

2021 ஆகஸ்ட் 2 நிலவரப்படி, சுமார் 5.01 கோடி பயனாளிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். 4.21 கோடி நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2.59 கோடிக்கும் அதிகமான (52 சதவீதம்) பேர் இது வரை தங்களை இதில் பதிவு செய்துக்கொண்டுள்ளனர்.

அங்கன்வாடி மையங்களின் நடவடிக்கைகள், அங்கன்வாடி பணியாளர்களின் சேவை வழங்கல், பயன்பெற்ற கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் விவரம் ஆகிய அனைத்தையும் கண்காணிக்கும் விதத்தில் போஷன் டிராக்கர் செயல்பட்டு வருகிறது.

அங்கன்வாடி பணியாளர்களின் சிறப்பான சேவை வழங்கலுக்காக அரசு மின்னணு-சந்தை மூலம் திறன்பேசிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 865577 திறன்பேசிகள் 32 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் இது வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

ஊட்டச்சத்து குறைபாடில்லா இந்தியாவை உருவாக்குவதற்காக போஷன் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தையின் முதல் 1000 நாட்களில் 18 அமைச்சகங்கள்/துறைகள் ஆற்றக்கூடிய உயர் தாக்க பங்களிப்புகள் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளன.

மாநில அளவில் சிறப்பான செயல்படுத்தலுக்காக, காலாண்டுக்கு ஒரு முறை செயல் திட்ட கூட்டத்திற்கு தலைமை செயலாளர் தலைமை வகிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம்-பொது பயன்பாட்டு மென்பொருளை செயல்படுத்துதலில் குழு 2-ல் உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தையும், திறன் வளர்த்தல், ஒருங்கிணைப்பு, நடத்தைமுறை மாற்றம் மற்றும் சமூகத்தை திரட்டுதல் ஆகியவற்றில் குழு 2-ல் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த சிறப்பான செயல்படுத்துதலிலும் குழு 2-ல் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 8910790 குழந்தைகளின் வளர்ச்சி அங்கன்வாடி மையங்களின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த குழந்தைகள் 2039800 பேர்.

தமிழ்நாட்டில் உள்ள 43739 அங்கன்வாடி மையங்களில் குடிநீர் வசதிகள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 43214 அங்கன்வாடி மையங்களில் கழிவறை வசதிகள் உள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...