மகாபாரத இதிகாச காலத்தில் கௌரவரகளுக்கு மாற்றாக பாண்டவர்களால் உருவாக்கப்பட்ட ஐந்து நகரங்களில் தற்போது ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிப்பட்டும் ஒன்று. வரலாற்றுப் பெயர் பாண்டுப்பிரஸ்தம்.
இடைக்காலத்தில் மொகலாய படையெடுப்பு
முதலாம் பானிபட் யுத்தம் 1526 ஆம் ஆண்டு பாபர் படைக்கும், டில்லியை ஆண்ட இப்ராகிம் லோடி படைக்கும் 21 ஏப்ரல் 1526 ஆம் ஆண்டில் நடைபெற. பாபர் வென்று டில்லியில் முகலாயப் பேரரசை நிறுவினார்.
இரண்டாவதாக 1556 ஆம் ஆண்டு- வட இந்தியப் பகுதியில் ஆட்சி செய்த டில்லி பேரரசின் சுல்தான் ஹெமுவின் படைக்கும், அக்பரின் படைக்கிடையே 5 நவம்பர் 1556 ஆம் ஆண்டில் பானிபட்டில் நடந்த யுத்தம் அக்பர் வென்று டில்லி முகலாயப் பேரரசர் ஆனார்.
மூன்றாம் பானிபட் போர் 1761 ஆம் ஆண்டு மராட்டியப் பேரரசின் படைக்கும், ஆப்கானிஸ்தான் மன்னர் அகமது ஷா அப்தாலிக்குமிடையே 14 ஜனவரி 1761 ஆம் ஆண்டில் நடந்த யுத்தத்தில் அகமது ஷா துரானியை, ரோகில்லாக்கள் மற்றும் அவத் நவாப் சுஜா-உத்-தௌ ஆதரித்தில் இரஜபுத்திரப் படைகளும், சீக்கியப் படைகளும் மராட்டியப் படைகளுக்கு உதவ முன் வராததால்.
மராத்தியப் படைகள் தோல்வி கண்டது. தற்போதய பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், டில்லிப் பகுதிகள் ஆப்கானியர்களுக்கு விட்டுத்தரப்பட்டதால் ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் திருப்புமுனையானது.. இந்தியாவில் இந்தியாவில் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி வளர்ச்சிக்குக் காரணமாகும்.இப்போது சுதந்திரம் பெற்று இந்தியாவில் 75 ஆம் ஆண்டு கொண்டாட உள்ள நிலையில் பானிபட்டில் பிறந்த இரஜபுத் படைப்பிரிவின் சுபேதார் நீரஜ் சோப்ரா
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் India’s 🇮🇳 Olympics Medals
1896🥈🥈
1928🥇
1932🥇
1936🥇
1948🥇
1952🥇🥉
1956🥇
1960🥈
1964🥇
1968🥉
1972🥉
1980🥇
1996🥉
2000🥉
2004🥈
2008🥇🥉🥉
2012🥈🥈🥉🥉🥉🥉
2016🥈🥉
2021🥇🥈🥈🥉🥉🥉🥉
This is highest Olympics tally we ever got in any single edition
முற்காலப் போர் கருவிகளில் ஒன்றான ஈட்டி எறிதலில் வெற்றி கண்டதும் தங்கப்பதக்கம் பெற்றதும் புதிய வரலாற்று நிகழ்வுகளாகும்.
தங்க மகன் நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளரான ஜெர்மனியைச் சேர்ந்த ஹோஹன் இந்தியாவின் Sports Development Authority யும், தடகள சம்மேளனமும் தங்களுக்கு சரியான உதவியும் செய்யவில்லை எனக் குறை கூறியுள்ளார்.
ஒலிம்பிக்கில் பங்கேற்க முறையான திட்டமிடல்கள் எதுமில்லை எனவும்..
விளையாட்டு வீரர்களுக்கு உயர்தர உணவுகளையும் அதிகாரிகள் ஏற்பாடு செய்யவில்லையெனவும்.
தமக்கு ஒத்துவராத விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு அதிகாரிகளால் தாம் மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்..
மேலும் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் பங்கேற்க அரசுத் தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை JSW நிறுவனமே நீரஜ் சோப்ராவிற்கு ஸ்பான்சர்ஷிப் அளித்து உதவியது என்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இராணுவ வீரரான நீரஜ் சோப்ரா கடந்த 2016-ம் ஆண்டில் விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டில் நாயக் சுபேதார் பதவியில் அமர்த்தப்பட்டார். இந்த அமைப்பின் தலைமைதான் 4 ராஜ்புத்னா ரைஃபிள் பிரிவாகும்.
ராணுவத்திலிருந்து ஒலிம்பிக்கிற்கு வீரர்களைத் தயார் செய்யும் மிஷன் ஒலிம்பிக் விங்கிற்கு சோப்ரா தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு ராணுவம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது
2010-ம் ஆண்டு காமென்வெல்த் போட்டியில் ஈட்டி எறிதலில் வெண்கலம் வென்ற ராணுவ வீரர் சுபேதார் காசிநாத் நாயக்தான் ராணுவத்தில் நீரஜ் சோப்ராவுக்குப் பயிற்சியாளராக இருந்தார்.
அதன்பின் ஜெர்மன் பயிற்சியாளர் வி ஹார்ன் பயிற்சிக்கு நீரஜ் சோப்ரா மாற்றப்பட்டு, 2018 ஆம் ஆண்டு காமென்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார்.
இதைத் தொடர்ந்து நாயக் சுபேதார் பதவியிலிருந்து பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சுபேதாராக சோப்ரா உயர்ந்தார். 2018 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதும், ராணுவம் சார்பில் விஷிசித் சேவா விருதும் சோப்ராவுக்கு வழங்கப்பட்டது.
கருத்துகள்