முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு மகத்தானது – சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம் தகவல்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு மகத்தானது – சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம்


இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு மகத்தானது என்றும் ஆண்களுக்கு இணையாக அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தாலும் அது சரிவர வெளியுலகிற்கு அறியப்படவில்லை என்றும் சென்னைப் பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம் கூறியுள்ளார்.


நாட்டின் “75-ஆவது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டத்தை (ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்)” ஒட்டி “அறியப்படாத தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள்” என்ற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மக்கள் தொடர்பு கள அலுவலகம் – தஞ்சாவூர் மற்றும் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம்: அலகு – 2-ம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த சிறப்புக் கருத்தரங்கில் பேராசிரியர் எஸ். எஸ். சுந்தரம் சிறப்புரையாற்றினார்

அப்போது பேசிய அவர், இன்று நாம் 75-வது ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடி வரும் வேளையில் இந்த சுதந்திரத்தை நாம் எளிதில் பெறவில்லை. பல்வேறு வீரர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்ததன் மூலமே கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக தமிழகத்தில் இருந்து பங்கேற்ற வா.உ.சிதம்பரம், சுப்பிரமணிய சிவா, கொடிக்காத்தக் குமரன், சுப்பிரமணிய பாரதி, ராஜாஜி, காமராஜரையும், தேசிய அளவில் சர்தார் வல்லபாய் பட்டேல், கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நவரோஜி, சுபாஷ் சந்திரபோஸ் போன்றோரை இந்த தருணத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் தன்னலம் பாராமல் ஆண்களுக்கு இணையாக பெண்களும் இந்த சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களின் பங்கு மகத்தானது. குறிப்பாக தேசிய அளவில் ஜான்சிராணி, அன்னிபெசன்ட் அம்மையார் போன்றோரும்,  தமிழகத்தில் வேலு நாச்சியார்  தில்லையாடி வள்ளியம்மை போன்றோரைத் தவிர கடலூர் அஞ்சலையம்மாள், லட்சுமிகௌல், லீலாவதி அம்மையார் போன்ற பல பெண் போராட்ட வீரர்கள் வெளியில் அறியப்படாமல் உள்ளனர். விடுதலைப் போராட்ட வீரரும் சமூகப் போராளியுமான லீலாவதி அம்மையார் சுதேசி இயக்கம் என்ற கொள்கையைக் கொண்டு ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு தெரிவித்து கதர் ஆடை அணிந்ததற்காக மூன்று முறை சிறை சென்றார்.

குறிப்பாக 1941-டிசம்பர்-1-இல் சென்னை எழும்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் குறித்த எந்த தகவலும் 4 மாதங்களுக்கும் மேல் தெரியாமல் இருந்தது. இதுபோன்ற பல வீரர்களின் விடுதலைப் போராட்ட விவரங்கள் சென்னை எழும்பூரில் உள்ள ஆவணக் காப்பகத்தில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. எனவே இத்தகைய பெருமைமிகு இந்திய சுதந்திரச் சுடரை வரும் காலங்களில் போற்றிப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் ஜெ.காமராஜ், நாம் பெற்றுள்ள இந்த சுதந்திரம் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. நமக்காக போராடிய அத்தகைய தன்னலமற்ற போராட்ட வீரர்கள் சுதந்திரத்திற்காக தங்கள் வாழ்வை மிகத் தெளிவாக வகுத்துப் போராடினர் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய வரலாற்றை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு தேசத்திற்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

கருத்தரங்கில் தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள அலுவலர் கே. ஆனந்த பிரபு வரவேற்புரையாற்றினார். குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் – அலகு -2 ஒருங்கிணைப்பாளர் எம்.ஐடா ரோஸ் வாழ்த்துரை மற்றும் நன்றியுரையாற்றினார்.

முன்னதாக “75-ஆவது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டத்தை (ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்)” ஒட்டி “இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு” என்ற தலைப்பில் சிறப்புப் பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...