தமிழ்நாட்டிவ் 1970 ஆம் ஆண்டில் முதல்வராக டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் அனைத்துச் சாதியினரும் ஆகம விதிப்படி பயின்றால் ஆலயத்தில் அர்ச்சகராகா நியமிக்க சட்டத்திருத்த முன்வரைவைக் கொண்டு வந்தார்.
சட்டம் நடைமுறைக்கு வந்தபோதிலும், அதனை முடக்குவதற்கு மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் பட்டர்களில் சேஷம்மாள் உள்ளிட்ட 12 நபர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்
இந்த வழக்கு நீதித்துறையில் 'சேஷம்மாள் வழக்கு' என பிரபலமாக நிலைபெற்றுள்ளது. அப்போது, 'வாரிசு அடிப்படையில் அந்தணர்களே அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்திருத்தம் செல்லும். ஆனால், ஆகம விதிப்படி, குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களை மட்டுமே அர்ச்சகராக நியமிக்க வேண்டும்' என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில்.
தீர்ப்பை விமர்சித்த பெரியார் ஈ.வே.ராமசாமி “ஆபரேசன் வெற்றி... நோயாளி மரணம்” எனக் கூறினார்.
அச்சட்டமும் அப்படியே முடங்கியது. இச்சட்டம் நிறைவேறாமலேயே காலம் ஓடியது. பெரியார் ஈ.வே.ராமசாமி 1973 ஆம் ஆண்டில் மறைந்தபோது முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி “அய்யாவின் நெஞ்சில் தைத்த முள்ளுடன் அவரைப் புதைக்கிறோம்” என்று கூறினார்..
தமிழ்நாட்டில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால், நீண்ட நாள்களாகக் கிடப்பிலிருந்த இச்சட்டம் 2006 ஆம் ஆண்டில் மீண்டும் உயிர் பெற்றது.
அப்போதும் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநதி தான் "சாதியப் பாகுபாடு இல்லாமல், தகுதியும் பயிற்சியும் பெற்ற எவரும் அர்ச்சகராகலாம்" என்ற அவசரச் சட்டத்தை சட்டமன்ற த்தில் நிறைவேற்றி சட்டமாக்கினார்.
பின் அதனை முறைப்படி, ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி தனிச்சட்டமாகப் பிறப்பித்து சட்டப்பேரவையில் சூளுரைத்ததன் தொடர்ச்சியாக 2007 ஆம் ஆண்டில் சைவ முறைப்படி திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, மதுரை திருவரங்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட ஊர்ககளில் ஆகமப் பயிற்சி நிலையங்களையும் உருவாக்கி, அனைத்துச் சாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர் பயிற்சி பெற்றனர்.
இருப்பினும், இச்சட்டத்தை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 2015 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 14 ஆம் தேதியில் இவ்வழக்கின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழங்கியது.
"ஆகமப் பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்" என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு வெளியான பின், 3 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் கண்டுகொள்ளவில்லை தற்போது 2018 ஆம் ஆண்டில் மதுரை மாரிச்சாமி என்பவர், மதுரை அருள்மிகு அழகர் கோவிலின் உப கோவிலான தல்லாகுளம் ஐயப்பன் கோவில் அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டவர், 2007-08 ஆம் ஆண்டில் செயல்பட்ட அர்ச்சகர் பயிற்சி நிலையங்களில், பயிற்சி பெற்று தேர்வான 206 பேரில் இவருமொருவர்.
இதையடுத்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 2021 ஜூலை மாதம் 1 ஆம் தேதி இரண்டாவதாக தியாகராஜன் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்.
அவர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் உப கோவிலான நாகமலை சித்தி விநாயகர் கோவில் அர்ச்சகராகப் பணியமர்த்தப்பட்டார்.
இருப்பினும் இதில் ஒரு சிக்கலிருக்கிறது. 'பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராகப் பணிபுரியும் பட்சத்தில், அவர் ஆகம விதிகளில் தவறு செய்தால், அதைச் சுட்டிக்காட்டி அர்ச்சகர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கலாம்' என்று நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு வழங்கிய தீர்ப்பின் 43 ஆம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத் தக்கது.
இந்த நிலையில், இன்று நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது நியமனம் வழங்கப்பட்டது நல்ல முன் முயற்சி மேலும் இந்து அறநிலையத்துறை கீழுள்ள பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் புதியதாக துவக்கப்பட உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சிறந்த முறையில் நடத்தப்பட 12 முக்கிய பிரமுகர்களை கொண்ட ஆலோசனை குழுவை தமிழக ஆளுநர் நியமித்து உள்ளார்.
கருத்துகள்