முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அனைத்துச் சாதியினரும் ஆகம விதிப்படி பயின்றால் ஆலயத்தில் அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டார்கள்

தமிழ்நாட்டிவ் 1970 ஆம் ஆண்டில்  முதல்வராக டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்  அனைத்துச் சாதியினரும் ஆகம விதிப்படி பயின்றால் ஆலயத்தில் அர்ச்சகராகா நியமிக்க சட்டத்திருத்த முன்வரைவைக் கொண்டு வந்தார். 






சட்டம்  நடைமுறைக்கு வந்தபோதிலும், அதனை முடக்குவதற்கு மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் பட்டர்களில் சேஷம்மாள் உள்ளிட்ட 12 நபர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் 

இந்த வழக்கு நீதித்துறையில் 'சேஷம்மாள் வழக்கு' என பிரபலமாக  நிலைபெற்றுள்ளது. அப்போது, 'வாரிசு அடிப்படையில் அந்தணர்களே அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்திருத்தம் செல்லும். ஆனால், ஆகம விதிப்படி, குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களை மட்டுமே அர்ச்சகராக நியமிக்க வேண்டும்' என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில். 


தீர்ப்பை விமர்சித்த பெரியார் ஈ.வே.ராமசாமி  “ஆபரேசன் வெற்றி... நோயாளி மரணம்” எனக் கூறினார்.

 அச்சட்டமும் அப்படியே முடங்கியது.  இச்சட்டம் நிறைவேறாமலேயே காலம் ஓடியது.  பெரியார் ஈ.வே.ராமசாமி 1973 ஆம் ஆண்டில் மறைந்தபோது  முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி “அய்யாவின் நெஞ்சில் தைத்த முள்ளுடன் அவரைப் புதைக்கிறோம்” என்று கூறினார்..

தமிழ்நாட்டில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால், நீண்ட நாள்களாகக் கிடப்பிலிருந்த  இச்சட்டம் 2006 ஆம் ஆண்டில் மீண்டும் உயிர் பெற்றது. 


அப்போதும் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநதி தான் "சாதியப் பாகுபாடு இல்லாமல், தகுதியும் பயிற்சியும் பெற்ற எவரும் அர்ச்சகராகலாம்" என்ற அவசரச் சட்டத்தை சட்டமன்ற த்தில்  நிறைவேற்றி சட்டமாக்கினார். 

பின் அதனை முறைப்படி, ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி தனிச்சட்டமாகப் பிறப்பித்து சட்டப்பேரவையில் சூளுரைத்ததன் தொடர்ச்சியாக 2007 ஆம் ஆண்டில் சைவ முறைப்படி திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, மதுரை  திருவரங்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட ஊர்ககளில் ஆகமப் பயிற்சி நிலையங்களையும்  உருவாக்கி, அனைத்துச் சாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர் பயிற்சி பெற்றனர்.

இருப்பினும், இச்சட்டத்தை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 2015 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம்  14 ஆம் தேதியில் இவ்வழக்கின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழங்கியது. 

"ஆகமப் பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்" என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு வெளியான பின், 3 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் கண்டுகொள்ளவில்லை  தற்போது  2018 ஆம் ஆண்டில் மதுரை மாரிச்சாமி என்பவர், மதுரை அருள்மிகு அழகர் கோவிலின் உப கோவிலான தல்லாகுளம் ஐயப்பன் கோவில் அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டவர், 2007-08 ஆம் ஆண்டில் செயல்பட்ட அர்ச்சகர் பயிற்சி நிலையங்களில், பயிற்சி பெற்று தேர்வான 206 பேரில் இவருமொருவர்.

இதையடுத்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 2021 ஜூலை மாதம் 1 ஆம் தேதி இரண்டாவதாக தியாகராஜன் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். 

அவர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் உப கோவிலான நாகமலை சித்தி விநாயகர் கோவில் அர்ச்சகராகப் பணியமர்த்தப்பட்டார்.

இருப்பினும் இதில் ஒரு சிக்கலிருக்கிறது. 'பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராகப் பணிபுரியும் பட்சத்தில், அவர் ஆகம விதிகளில் தவறு செய்தால், அதைச் சுட்டிக்காட்டி அர்ச்சகர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கலாம்'  என்று நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு வழங்கிய தீர்ப்பின் 43 ஆம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத் தக்கது.  

இந்த நிலையில், இன்று நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது நியமனம் வழங்கப்பட்டது நல்ல முன் முயற்சி மேலும்   இந்து அறநிலையத்துறை கீழுள்ள பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் புதியதாக துவக்கப்பட உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சிறந்த முறையில் நடத்தப்பட 12 முக்கிய பிரமுகர்களை கொண்ட ஆலோசனை குழுவை தமிழக ஆளுநர் நியமித்து உள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த