முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அனைத்துச் சாதியினரும் ஆகம விதிப்படி பயின்றால் ஆலயத்தில் அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டார்கள்

தமிழ்நாட்டிவ் 1970 ஆம் ஆண்டில்  முதல்வராக டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்  அனைத்துச் சாதியினரும் ஆகம விதிப்படி பயின்றால் ஆலயத்தில் அர்ச்சகராகா நியமிக்க சட்டத்திருத்த முன்வரைவைக் கொண்டு வந்தார். 






சட்டம்  நடைமுறைக்கு வந்தபோதிலும், அதனை முடக்குவதற்கு மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் பட்டர்களில் சேஷம்மாள் உள்ளிட்ட 12 நபர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் 

இந்த வழக்கு நீதித்துறையில் 'சேஷம்மாள் வழக்கு' என பிரபலமாக  நிலைபெற்றுள்ளது. அப்போது, 'வாரிசு அடிப்படையில் அந்தணர்களே அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்திருத்தம் செல்லும். ஆனால், ஆகம விதிப்படி, குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களை மட்டுமே அர்ச்சகராக நியமிக்க வேண்டும்' என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில். 


தீர்ப்பை விமர்சித்த பெரியார் ஈ.வே.ராமசாமி  “ஆபரேசன் வெற்றி... நோயாளி மரணம்” எனக் கூறினார்.

 அச்சட்டமும் அப்படியே முடங்கியது.  இச்சட்டம் நிறைவேறாமலேயே காலம் ஓடியது.  பெரியார் ஈ.வே.ராமசாமி 1973 ஆம் ஆண்டில் மறைந்தபோது  முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி “அய்யாவின் நெஞ்சில் தைத்த முள்ளுடன் அவரைப் புதைக்கிறோம்” என்று கூறினார்..

தமிழ்நாட்டில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால், நீண்ட நாள்களாகக் கிடப்பிலிருந்த  இச்சட்டம் 2006 ஆம் ஆண்டில் மீண்டும் உயிர் பெற்றது. 


அப்போதும் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநதி தான் "சாதியப் பாகுபாடு இல்லாமல், தகுதியும் பயிற்சியும் பெற்ற எவரும் அர்ச்சகராகலாம்" என்ற அவசரச் சட்டத்தை சட்டமன்ற த்தில்  நிறைவேற்றி சட்டமாக்கினார். 

பின் அதனை முறைப்படி, ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி தனிச்சட்டமாகப் பிறப்பித்து சட்டப்பேரவையில் சூளுரைத்ததன் தொடர்ச்சியாக 2007 ஆம் ஆண்டில் சைவ முறைப்படி திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி, மதுரை  திருவரங்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட ஊர்ககளில் ஆகமப் பயிற்சி நிலையங்களையும்  உருவாக்கி, அனைத்துச் சாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர் பயிற்சி பெற்றனர்.

இருப்பினும், இச்சட்டத்தை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 2015 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம்  14 ஆம் தேதியில் இவ்வழக்கின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழங்கியது. 

"ஆகமப் பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்" என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு வெளியான பின், 3 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் கண்டுகொள்ளவில்லை  தற்போது  2018 ஆம் ஆண்டில் மதுரை மாரிச்சாமி என்பவர், மதுரை அருள்மிகு அழகர் கோவிலின் உப கோவிலான தல்லாகுளம் ஐயப்பன் கோவில் அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டவர், 2007-08 ஆம் ஆண்டில் செயல்பட்ட அர்ச்சகர் பயிற்சி நிலையங்களில், பயிற்சி பெற்று தேர்வான 206 பேரில் இவருமொருவர்.

இதையடுத்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 2021 ஜூலை மாதம் 1 ஆம் தேதி இரண்டாவதாக தியாகராஜன் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். 

அவர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் உப கோவிலான நாகமலை சித்தி விநாயகர் கோவில் அர்ச்சகராகப் பணியமர்த்தப்பட்டார்.

இருப்பினும் இதில் ஒரு சிக்கலிருக்கிறது. 'பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராகப் பணிபுரியும் பட்சத்தில், அவர் ஆகம விதிகளில் தவறு செய்தால், அதைச் சுட்டிக்காட்டி அர்ச்சகர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கலாம்'  என்று நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு வழங்கிய தீர்ப்பின் 43 ஆம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத் தக்கது.  

இந்த நிலையில், இன்று நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது நியமனம் வழங்கப்பட்டது நல்ல முன் முயற்சி மேலும்   இந்து அறநிலையத்துறை கீழுள்ள பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் புதியதாக துவக்கப்பட உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சிறந்த முறையில் நடத்தப்பட 12 முக்கிய பிரமுகர்களை கொண்ட ஆலோசனை குழுவை தமிழக ஆளுநர் நியமித்து உள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...