என்.பி.சதீஷ்குமரன் செய்தியாளர்: இராமாயணத்தில் சுமந்திரன் பாத்திரம் சிறப்பு வாய்ந்தது. தசரதச் சக்கரவர்த்தியின் இட்ட பணியை செயல் படுத்திய எட்டுப் பேர் மந்திரியாக இருந்தாலும் சுமந்திரன் பணி மட்டுமே நினைவில் நிற்கும் அதுபோலவே காவல்துறையில் உயர் அதிகாரிகளின் உத்தியோக உத்தரவுகளுக்கு கட்டுப்படும் பணியாளர்கள் காவல்துறையில் பாராட்டப்படுவார்கள்
அது அவர்களின் பணி மாறுதல் மற்றும் அரசின் விருதுகள் பெறும் நிகழ்வுகள் மூலம் வெளிப்படும் . திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை உட்கோட்டம் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் பணிசெய்து பணி மாறுதல் பெற்று சிவகங்கை மாவட்டத்ற்கு மாறுதல் பெற்றுச் செல்லும் காவலர் எம்.விக்னேஷ்
மற்றும் காவல்துறை நண்பர்கள் பணிசெய்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டது குறித்து காவல் நிலையத்தில் வாழ்த்தி கதராடை அணிவித்துச் சிறப்பித்தனர். நிகழ்வில் கலந்து கொண்டு சார்பு ஆய்வாளர் சரவணன் புதுக்கோட்டை மாவட்டம் பாலாஜி ஆய்வாளர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் ராஜு சார்பு ஆய்வாளர் புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட காவல்துறையினர் வாழ்த்துக்கள் கூறினார்.ஒருவரை விட்டுப் பிரிதொருவர் ஒன்றை விட்டு மற்றொன்று நீங்குவதே பிரிவு.
கொல்கத்தாவிற்கு வந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி அடிமைப்படுத்தியபோது கையாண்டயுத்தி, பிரித்தாளும் நடவடிக்கை சூழ்ச்சி எனப்பட்டது.
இளமையைப் பிரிவதால் வருவது முதுமை. இல்லறத்தைப் பிரிவதால் துறவறம். தாயிடம் குழந்தை பிரிவது பிரசவம். உடலை விட்டு உயிர் பிரிவது மரணம். அதுபோலவே கூட்டணிகள் பிரிந்தால் முறிவு. அறுவை சிகிச்சையால் உறுப்புகளைப் பிரித்தல் ஆப்ரேஷனாகிறது. பள்ளி இறுதி வகுப்பு மாணாக்கர் பிரிவு போல பல நிகழ்வுகளை மாற்றங்கள் வாழ்வில் உண்டு.
தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு வகையான பிரித்தெடுத்தலாம் ? சில வகை இனங்கள் மட்டும் மற்றவைகளிலிருந்து பிரிந்து, தொடர்ந்து உயிர் வாழும் கோட்பாட்டை Natural Selection எனலாம் இது பரிணாம வளர்ச்சி. ஓருடலிலிருந்து பிரிந்து இன்னோர் உடலுக்குத் தாவுவதைக் ‘கூடு விட்டுக் கூடு பாய்தல்’ என்பார்கள்.
அணு உலைகளில் அணுவிலிருந்து எலக்ட்ரான், ப்ரோட்டான், நியூட்ரான் போன்றவற்றைப் பிரிப்பதை ‘அணுவைப் பிளத்தல்’ என்பார்கள். ஓர் உலோகத்தின் மூலப் பொருளான தாதுவிலிருந்து அந்த உலோகத்தைப் பிரித்தெடுப்பது எக்ஸ்ட்ராக்ஷன்.
ஒரு நாட்டில் இருந்து தனியே பிரிந்து வேறு பல நாடுகள் உதயமாகியிருக்கின்றன. 1947 ல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது. 1972 ல் பாகிஸ்தானிடமிருந்து வங்க தேசம் பிரிந்தது. அமெரிக்க தேசமே பிரிந்து உருவான13 ஐரோப்பியக் குடியேற்றம் தான்.
இந்தியாவின் சட்டீஸ்கர், ஜார்கண்ட், உத்தராஞ்சல் மாநிலங்கள் இப்படி உதயமானது. ஆந்திராவிலிருந்து தெலுங்கானாவை பிரித்து தனி மாநிலம் ஆக்கியதும். மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது சென்னை, திருத்தணி போன்ற பகுதிகள் தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து பலர் முயற்சியால் பிரிந்து போகவில்லை. சொத்துகளை விரும்பியவர்களுக்கு உயில் எழுதிக் கொடுப்பதை, சொத்து பிரிப்பது என்றே அறியலாம்.
தலைவனும் தலைவியும் குறித்து இலக்கிய நடை ‘செம்புலப் பெயல் நீர்’ என உவமை கொண்ட சங்கப் பாடலுண்டு
உயிரியல் வளர்ச்சிக்கு செல்கள் முறையாகப் பிரிதல் அவசியமாகும்.
யானைகளின் முகாம்களில் குட்டியை, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தாய் யானையிடமிருந்து பிரித்து விடுவார்கள். இது வீனிங் எனப்படும்.
மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்வு இது. பழக்கப்பட்ட இரண்டு முகாம் யானைகள் மூலம், பிரிக்க வேண்டிய தாய் யானையைக் குட்டியிடம் இருந்து மெல்ல அப்புறப்படுத்துவார்கள். குட்டி யானைக்குப் பிடித்த கரும்பு, வெல்ல உருண்டைகள், வாழைத்தண்டு போன்றவற்றை ஒரு கூண்டில் வைத்து அந்தக் கூண்டின் சட்டங்களை இலைதழைகளால் மறைத்து வைப்பார்கள். குட்டி ஏமாந்து கூண்டுக்குள் வந்ததும் கதவு மூடப்படும். ஒருபுறம் குட்டியைக் காணாமல் தாய் யானை ரகளையில் ஈடுபடும்; இன்னொருபுறம் குட்டி யானை கூண்டின் மரச் சட்டங்களில் மண்டையால் மோதி ஆர்ப்பாட்டம் பண்ணும். அந்த கூண்டின் மரச் சட்டங்களில் ஏற்கனவே எண்ணெய் பூசி வைத்திருப்பார்கள். இப்படியே சில நாட்கள் சென்றதும் தாய் யானை சகஜநிலைக்கு வரும். குட்டியின் சப்தம் கேட்காத தூரம் அப்புறப்படுத்தப்படும்.
பணியில் இருப்பவர்கள் பிரிவு என்பதை இரண்டு கட்டங்களில் சந்திப்பார்கள். இட மாறுதல் அடைந்து வேறு அலுவலகம் செல்லும்போதும், பணியில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும்போதும் பிரிவினைச் சந்திப்பார்கள். பொதுவாக மிக அதிகமாகப் பொய் பேசப்படும் சந்தர்ப்பங்களாக இந்த இரண்டும் சிலருக்கு அமைவது விடும் வழக்கம் அதை மீறி சில சமயங்களில் உண்மை வரும். அப்படி ஒரு நிகழ்வு தான் துவரங்குறிச்சி காவல்நிலையத்தில் நேற்று நிகழ்வாகும் அங்கு பணிசெய்த காலத்தில் அணைத்து பணிகளையும் முறையாக செய்து அணைவரிடமும் நன்மதிப்பு பெற்ற காவலராக பணிசெய்து விருப்ப மாறுதல் மூலம் அங்கு விடைபெறும் காவலர் விக்னேஷ் பாராட்டப்பட்டதும்.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ‘ஃபேர்வெல் டே’ இறுதி வகுப்பில் கொண்டாடுவார்கள். திரைப்படத்தில்‘பசுமை நிறைந்த நினைவுகளே’ பாடல் முன்பு பாடிய காலமும் உண்டு பிரிவின் போது ஆட்டோகிராப் வாங்குவதும், முகவரி, தொலைபேசி எண்களைப் பரிமாறிக் கொள்ளுவதும் இது தொடரும் நட்பின் வாடிக்கை
திருவிளையாடல திரைப்படத்தில் ‘பிரிக்க முடியாதது எது?’ என்ற கேள்விக்கு ‘தமிழும் சுவையும்’ என்று பதில் வரும்
‘பிரிவு’ பற்றிய ரவீந்திரநாத் தாகூரின் கவிதையை, கனடாவைச் சேர்ந்த ஜெயபாரதன் கூறும் கருத்து.
‘மரணத் துயர் போல ஏனையப் பிரிவுத் துன்பந்தான் பரவி வருகிற திப்போது, தரணி எங்கணும்!’ கொரானா வடிவில்
எனப்படுவதிலிருந்து இப்போது பிரிவோம்... பணிசெய்து மாறுதல் காரணமாக அதே பணி அதே துறையில் எப்போதோ! எங்கோ ? மீண்டும் சந்திப்போம். என்பது அந்த நிகழ்ச்சியில் கண்ட நெகிழ்வான நிகழ்வாகும்.
கருத்துகள்