முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் பணிசெய்து மாறுதல் பெற்றுச் செல்லும் காவலருக்குப் பாராட்டு நிகழ்வு

என்.பி.சதீஷ்குமரன் செய்தியாளர்:      இராமாயணத்தில் சுமந்திரன் பாத்திரம் சிறப்பு வாய்ந்தது. தசரதச் சக்கரவர்த்தியின் இட்ட பணியை செயல் படுத்திய எட்டுப் பேர் மந்திரியாக இருந்தாலும் சுமந்திரன் பணி மட்டுமே நினைவில் நிற்கும் அதுபோலவே காவல்துறையில் உயர் அதிகாரிகளின் உத்தியோக உத்தரவுகளுக்கு கட்டுப்படும் பணியாளர்கள் காவல்துறையில் பாராட்டப்படுவார்கள்


அது அவர்களின் பணி மாறுதல் மற்றும் அரசின் விருதுகள் பெறும் நிகழ்வுகள் மூலம் வெளிப்படும் .    திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை உட்கோட்டம் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் பணிசெய்து பணி மாறுதல் பெற்று சிவகங்கை மாவட்டத்ற்கு மாறுதல் பெற்றுச் செல்லும் காவலர் எம்.விக்னேஷ் 

மற்றும் காவல்துறை நண்பர்கள் பணிசெய்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டது குறித்து காவல் நிலையத்தில் வாழ்த்தி கதராடை அணிவித்துச் சிறப்பித்தனர். நிகழ்வில் கலந்து கொண்டு சார்பு ஆய்வாளர் சரவணன்  புதுக்கோட்டை மாவட்டம் பாலாஜி ஆய்வாளர் திருச்சிராப்பள்ளி  மாவட்டம் ராஜு சார்பு ஆய்வாளர் புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட காவல்துறையினர் வாழ்த்துக்கள் கூறினார்.ஒருவரை விட்டுப் பிரிதொருவர் ஒன்றை விட்டு மற்றொன்று நீங்குவதே பிரிவு.

கொல்கத்தாவிற்கு வந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி அடிமைப்படுத்தியபோது கையாண்டயுத்தி, பிரித்தாளும் நடவடிக்கை சூழ்ச்சி எனப்பட்டது.

இளமையைப் பிரிவதால் வருவது முதுமை. இல்லறத்தைப் பிரிவதால் துறவறம். தாயிடம் குழந்தை பிரிவது பிரசவம். உடலை விட்டு உயிர் பிரிவது மரணம். அதுபோலவே கூட்டணிகள் பிரிந்தால் முறிவு. அறுவை சிகிச்சையால் உறுப்புகளைப் பிரித்தல் ஆப்ரேஷனாகிறது. பள்ளி இறுதி வகுப்பு மாணாக்கர் பிரிவு போல பல நிகழ்வுகளை மாற்றங்கள் வாழ்வில் உண்டு.

தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு வகையான பிரித்தெடுத்தலாம் ?  சில வகை இனங்கள் மட்டும் மற்றவைகளிலிருந்து பிரிந்து, தொடர்ந்து உயிர் வாழும் கோட்பாட்டை Natural Selection   எனலாம் இது பரிணாம வளர்ச்சி. ஓருடலிலிருந்து பிரிந்து இன்னோர் உடலுக்குத் தாவுவதைக் ‘கூடு விட்டுக் கூடு பாய்தல்’ என்பார்கள்.


அணு உலைகளில் அணுவிலிருந்து எலக்ட்ரான், ப்ரோட்டான், நியூட்ரான் போன்றவற்றைப் பிரிப்பதை ‘அணுவைப் பிளத்தல்’ என்பார்கள். ஓர் உலோகத்தின் மூலப் பொருளான தாதுவிலிருந்து அந்த உலோகத்தைப் பிரித்தெடுப்பது எக்ஸ்ட்ராக்ஷன்.

ஒரு நாட்டில் இருந்து தனியே பிரிந்து வேறு பல நாடுகள் உதயமாகியிருக்கின்றன. 1947 ல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது. 1972 ல் பாகிஸ்தானிடமிருந்து வங்க தேசம் பிரிந்தது. அமெரிக்க தேசமே பிரிந்து உருவான13 ஐரோப்பியக் குடியேற்றம் தான்.

இந்தியாவின்  சட்டீஸ்கர், ஜார்கண்ட், உத்தராஞ்சல் மாநிலங்கள் இப்படி உதயமானது. ஆந்திராவிலிருந்து தெலுங்கானாவை பிரித்து தனி மாநிலம் ஆக்கியதும். மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது சென்னை, திருத்தணி போன்ற பகுதிகள் தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து பலர் முயற்சியால் பிரிந்து போகவில்லை. சொத்துகளை விரும்பியவர்களுக்கு உயில் எழுதிக் கொடுப்பதை, சொத்து பிரிப்பது என்றே அறியலாம்.

தலைவனும் தலைவியும் குறித்து இலக்கிய நடை ‘செம்புலப் பெயல் நீர்’ என உவமை கொண்ட சங்கப் பாடலுண்டு

உயிரியல் வளர்ச்சிக்கு செல்கள் முறையாகப் பிரிதல் அவசியமாகும்.

யானைகளின் முகாம்களில்‌ குட்டியை, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தாய் யானையிடமிருந்து பிரித்து விடுவார்கள். இது வீனிங் எனப்படும்.

மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்வு இது. பழக்கப்பட்ட இரண்டு முகாம் யானைகள் மூலம், பிரிக்க வேண்டிய தாய் யானையைக் குட்டியிடம் இருந்து மெல்ல அப்புறப்படுத்துவார்கள். குட்டி யானைக்குப் பிடித்த கரும்பு, வெல்ல உருண்டைகள், வாழைத்தண்டு போன்றவற்றை ஒரு கூண்டில் வைத்து அந்தக் கூண்டின் சட்டங்களை இலைதழைகளால் மறைத்து வைப்பார்கள். குட்டி ஏமாந்து கூண்டுக்குள் வந்ததும் கதவு மூடப்படும். ஒருபுறம் குட்டியைக் காணாமல் தாய் யானை ரகளையில் ஈடுபடும்; இன்னொருபுறம் குட்டி யானை கூண்டின் மரச் சட்டங்களில் மண்டையால் மோதி ஆர்ப்பாட்டம் பண்ணும். அந்த கூண்டின் மரச் சட்டங்களில் ஏற்கனவே எண்ணெய் பூசி வைத்திருப்பார்கள். இப்படியே சில நாட்கள் சென்றதும் தாய் யானை சகஜநிலைக்கு வரும். குட்டியின் சப்தம் கேட்காத தூரம் அப்புறப்படுத்தப்படும்.

பணியில் இருப்பவர்கள் பிரிவு என்பதை இரண்டு கட்டங்களில் சந்திப்பார்கள். இட மாறுதல் அடைந்து வேறு அலுவலகம் செல்லும்போதும், பணியில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும்போதும் பிரிவினைச் சந்திப்பார்கள். பொதுவாக மிக அதிகமாகப் பொய் பேசப்படும் சந்தர்ப்பங்களாக இந்த இரண்டும் சிலருக்கு அமைவது விடும் வழக்கம் அதை மீறி சில சமயங்களில் உண்மை வரும். அப்படி ஒரு நிகழ்வு தான் துவரங்குறிச்சி காவல்நிலையத்தில் நேற்று நிகழ்வாகும் அங்கு பணிசெய்த காலத்தில் அணைத்து பணிகளையும் முறையாக செய்து அணைவரிடமும் நன்மதிப்பு பெற்ற காவலராக பணிசெய்து விருப்ப மாறுதல் மூலம் அங்கு விடைபெறும் காவலர் விக்னேஷ் பாராட்டப்பட்டதும்.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ‘ஃபேர்வெல் டே’ இறுதி வகுப்பில் கொண்டாடுவார்கள். திரைப்படத்தில்‘பசுமை நிறைந்த நினைவுகளே’ பாடல் முன்பு பாடிய காலமும் உண்டு பிரிவின் போது ஆட்டோகிராப் வாங்குவதும், முகவரி, தொலைபேசி எண்களைப் பரிமாறிக் கொள்ளுவதும் இது தொடரும் நட்பின் வாடிக்கை 

திருவிளையாடல திரைப்படத்தில் ‘பிரிக்க முடியாதது எது?’ என்ற கேள்விக்கு ‘தமிழும் சுவையும்’ என்று பதில் வரும்

‘பிரிவு’ பற்றிய ரவீந்திரநாத் தாகூரின் கவிதையை, கனடாவைச் சேர்ந்த ஜெயபாரதன் கூறும் கருத்து.

‘மரணத் துயர் போல ஏனையப் பிரிவுத் துன்பந்தான் பரவி வருகிற திப்போது, தரணி எங்கணும்!’ கொரானா வடிவில் 

எனப்படுவதிலிருந்து இப்போது பிரிவோம்... பணிசெய்து மாறுதல் காரணமாக அதே பணி அதே துறையில் எப்போதோ! எங்கோ ? மீண்டும் சந்திப்போம். என்பது அந்த நிகழ்ச்சியில் கண்ட நெகிழ்வான நிகழ்வாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...