மைசூரில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் வன்புணர்வுக்கு ஆளாகி படுகொலையும் செய்யப்பட்ட வழக்கில் தமிழ்நாட்டில் திருப்பூரிருந்து வந்த 5 தினக்கூலிகள் கைது.கர்நாடகா மாநிலம் மைசூர் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட -குற்றத்தில் ஈடுபட்ட நபர்களில் ஐந்து பேர் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராவர்.
ஒருவர் சிறார் குற்றவாளி, மற்றொருவர் தலைமறைவு. கர்நாடக காவல்துறை அதிகாரி கூறுகையில் 5 people from Tirupur of Tamilnadu have been arrested by Karnataka police in connection to Mysore rape case.Karnataka DGP says that they are labour class workers including wiremen and carpenter.One is minor out of 5,6-thaccused is absconding".மைசூரு பலாத்கார வழக்கில் முதல்கட்டமாக 5 பேரை கைது செய்திருக்கிறோம். 5 பேரும் தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் 17 வயது சிறுவன்.ஐந்து பேரும் ஓட்டுநர், பெயின்டர், எலக்ட்ரீசியன், தச்சு வேலைகளை செய்பவர்கள். ஒருவர் தலைமறைவாகியுள்ளார்.அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீஸார் தமிழகத்துக்கு சென்றுள்ளனர். குற்றவாளிகளில் சிலர் மீது நிலுவையில் உள்ள
வழக்குகள் குறித்த விவரங்களை தமிழக காவல்துறையினரிடம் கேட்டுள்ளோம். அதே போல 17 வயதுச் சிறுவன் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களைச் சேகரிக்கிறோம். இந்த குற்றவாளிகள் பணி செய்ய அடிக்கடி மைசூருவுக்கு வந்து சென்றுள்ளனர். சம்பவத்தன்று சாமுண்டி மலை அடிவாரத்தில் அவர்கள் மது குடித்துள்ளனர். அதன் பின்னர் இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது.பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்த முடியவில்லை. அதே வேளையில் ஆண் நண்பரிடம் நடத்திய விசாரணையில் குற்றவாளிகளை நெருங்கினோம்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரிடம் ரூபாய். 3 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்கள் அங்கு வர தாமதமானதால் குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர். இவ்வழக்கில் விரைவில் கர்நாடக விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வோம். அதில் வழக்கு குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைக்கும். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறும்போது,"இதுபோன்ற பலாத்காரச் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாதவாறு, குற்றவாளிகளுக்கு உடனடியாகவும் கடுமையானதாகவும் தண்டனை வழங்க வேண்டும். பலாத்கார வழக்கில் தெலங்கானா காவல்துறையினர் நடந்து கொண்டதைப் போல அதாவது என்கவுன்ட்டர் கர்நாடக மாநிலத்தின் காவல்துறையினரும் நடந்து கொள்ள வேண்டும்" என்றார்.சம்பவம் நடைபெற்றதாக கூறப்பட்ட இடத்தில் தொலைபேசி டவர் வாயிலாக கர்நாடக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ஐந்து பேர் கொண்ட கும்பல் இந்தக் குற்ற செயலில் ஈடுபட்டது தெரிந்தது. அதில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி சூசைபுரம் கிராமம் பூபதி (வயது 28) என்பவரை மைசூர் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவரது தகவலின் படி 4 பேரை, திருப்பூர் மாவட்டம் சேவூரில் ஆகஸ்ட். 28 ஆம் தேதியில் கைது செய்தனர். கூட்டு பாலியல் பலாத்காரம் சாமுண்டி மலை பகுதியில் நடந்ததாகத் தெரியும் நிலையில், மைசூரு தனிப்படை காவல்துறையினர் சேவூர் பகுதியை சேர்ந்த 4 பேரையும் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் ஓட்டுநர் மற்றும் சுமை தொழிலாளர் பணிக்கு மைசூருக்கு சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்த நிலையில் தேடி வருவதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைசூர் மாணவி பாலியல் வழக்கில் கைதான 5 பேருக்கு 10 நாள் காவல் விசாரணை அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. கைதான 5 பேரும் மைசூர் முதன்மைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் நள்ளிரவில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கருத்துகள்