மதுரை மாவட்ட ஆசிரியர்கள் 13 பேருக்கு நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு
தமிழகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் செப்டம்பர் .5 ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படும் விழாவில் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணி செய்யும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா நாளை ஆசிரியர் தினமாக நடைபெற உள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் கர்ணன், அ.பூச்சிப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுப்பிரமணியன், லட்சுமிபுரம் டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் முரளிதரன், எம்.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சரவணன், பொய்கைகரைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அருள்ராஜ், நிலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விநாயகமூர்த்தி, மேலூர் தமிழரசி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சிவக்குமார், முண்டுவேலம்பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை முருகேஸ்வரி,
ஆண்டார்கொட்டாரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை லதா, திருமங்கலம் மேலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியை மகேஸ்வரி, மேலப்பொன்னகரம் முக்குலத்தோர் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை பரமேஸ்வரி, லட்சுமிபுரம் டிவிஎஸ் ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியை ஜெயந்தி, தபால்தந்தி நகர் புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மதிவதனன்
ஆகிய 13 ஆசிரியப் பெருமக்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
கருத்துகள்