வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்: செப்டம்பர் 13-ந் தேதி திங்கட்கிழமை அன்று குறை தீர்ப்பு
ஊழியர் வருங்கால வைப்பு நிதி சட்டம் 1952-ன் கீழ் பயன்பெறும் சந்தாதாரர்கள் மற்றும் ஊழியர்களின் குறைகளை விரைந்து தீர்ப்பதற்காக, மாதந்தோறும் 10-ந் தேதியன்று சென்னை பிராந்திய வருங்கால வைப்பு நிதி அலுவலகம் “வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்” (நிதி ஆப்கே நிகத்) என்ற குறை தீர்ப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
செப்டம்பர் 10-ந் தேதியன்று, விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பொது விடுமுறை ஆதலால், இந்த குறை தீர்ப்பு நிகழ்ச்சி செப்டம்பர் 13-ந் தேதி திங்கட்கிழமை அன்று, சென்னை (தெற்கு) வருங்கால வைப்பு நிதி பிராந்திய ஆணையர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அன்று சந்தாதாரர்கள், ஓய்வூதியர்கள், ஊழியர்கள், தொடர்புடைய ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து தமது குறைகளைத் தெரிவிக்கலாம் என்று பிராந்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் திரு.பி.ஹங்சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்