முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தலைவிக்கு வந்த சோதனை.ரிலீஸான 24 மணிநேரத்தில் சமூக வலைதளங்களில் வெளிவந்த நிலை

தலைவிக்கு வந்த சோதனை.ரிலீஸான 24 மணிநேரத்தில் சமூக வலைதளங்களில் வெளிவந்த நிலை

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று, உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியான திரைப்படம் 'தலைவி' இப்படம் வெளியான 24 மணி நேரத்தில், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது படக்குழுவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ‌.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 'தலைவி'. மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை பல இயக்குனர்கள் படமாக்க போட்டி போட்ட நிலையில், முதலில் படத்தை இயக்கி ரிலீஸ் செய்துள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய். 



ஒரு தற்கால வரலாற்றுக் காவியமாக மனதில் நின்று நிலைக்க வேண்டிய இந்தப் படம், இயக்குனரின் சில தவறுகளால் ஒரு திரைப்படமாகவே பார்க்கப்படுவதாக கருத்துக்கள் வெளியாகிறது.



செல்வி ஜெ.ஜெயலலிதா நடிக்கத் துவங்கியது முதல், அவர் 1991 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்து முதலமைச்சரானது வரையிலான இடைப்பட்ட சில சம்பவங்களில் வரலாறு திரிக்கப்பட்டிருப்பதாகவும், சில அரசியல் தலைவர்கள் தங்களது எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள்.

அதே போல் இது ஒரு வரலாற்று கதை கொண்ட படம் என்றால் கூட, ஜெயலலிதா பெயரை ஜெயா, என்றும் சிலரது பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டது, கட்சியின் பெயர்கள் மாற்றத்தால் மனதில் நிற்கும்படியாக இல்லை. முக்கியமாக நடிகை கங்கனா செவ்வி.ஜெ. ஜெயலலிதா போல மாறி நடிக்க முயற்சித்திருப்பது அப்பட்டமாக தெரிவதால் இவரது நடிப்பு எடுபடவில்லை என்ற கருத்துக்களும் நிலவி வருகிறது.



கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில், வெளியான 24 மணிநேரத்தில். தமிழ் ராக்கர்ஸ் போன்ற ஆன்லைன் தளங்களில் வெளியாகியுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைவி பட முதல் நாள் வசூல் குறைவு அதற்கு காரணம் பல  அரசியலில் ஜெ.ஜெயலலிதா மீதிருந்த ஈர்ப்பு கடந்த நான்கு ஆண்டுகளில் பழனிச்சாமி முதல்வராக இருந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆட்சியை மக்கள் விரும்பாத நிலையில் அவர்கள் நடத்திய ஊழல் நடவடிக்கை  அவர்கள் தலைவியான ஜெ.ஜெயலலிதாவை மறக்கச் செய்த நடவடிக்கைகளாகத் தான் அதன் பார்வை  ரசிகர்கள் குறைந்த நிலைக்கும் உண்மைக் காரணம். நடிகை கங்கனா ரனாவத் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் மறுநுழைவு கொடுத்துள்ள படம் தலைவி. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள கதைக்களம் சார்ந்த படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் முதலில் மிகவும் பிரம்மாண்டமாக எதிர்பார்க்கப்பட்டது. அந்த மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம்  வெளியானது. நாடு முழுவதும்  1500 திரையரங்குகளிலும், அயல் நாடுகளில்  200 திரையரங்குகளிலும்  வெளியான. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படம் என்பதாலும், பான் இந்தியா படம் என்பதாலும் தலைவி படம் முதல் நாளே 20 கோடி முதல் 25 கோடி ரூபாய் வரை வசூலாகுமென எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த அளவிற்கு தலைவி படம் குறைவான வசூல் அதுவும் திரையரங்குகள் வாயிலாக வந்திருப்பது தயாரிப்பு நிறுவனத்திற்கு பேரதிர்ச்சியாகும். நாடு முழுவதும் பல கோடிகளை வசூலாக தலைவி படம் வாரி குவிக்கும் என்ற நம்பிக்கையில் தான் தலைவி படத்தை ஓடிடியில் வெளியிடாமல் திரையரங்குகளில் வெளியிட்டார்கள்.

இவ்வாறு பல பிரச்சனைகளைக் கடந்து திரையரங்குகளில் வெளியான தலைவி படத்தின் முதல் நாள் வசூல் ரூபாய் 40 முதல் 50 லட்சம் வரை தானாம். குறைந்தது 20 கோடியாவது முதல் நாள் வசூலாகுமென எதிர்பார்க்கப்பட்ட படம் 50 லட்சத்தைக் கூட தாண்டாதது அவர்களின் அதிர்ச்சியாகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான படத்தின் வசூல் ஒரே அடியாக சரிந்திருப்பது குறித்து ஒரு ரசிகர் கருத்து இது அவர் வளர்த்த கட்சியே சரிந்துள்ளது இதில் வசூல் சரியாமல் உயருமா என்பதே மக்கள் விரும்புவது நல்லாட்சி தான் அது கிடைத்தால் மக்களுக்கு வேறு தேடல் இல்லை என்பதே நிதர்சனம்.

மறைந்த முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விடலாம் என நினைத்திருந்த கங்கனா ரனாவத்துக்கு தற்போது பெருத்த ஏமாற்றம் என்று தான் கூறவேண்டும்.

ஆயிரத்தில் ஒருவன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன்  போல


இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவு குறைவாக இருப்பது தயாரித்தவர்களுக்கும் வினியோகம் செய்தவர்களுக்கும் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகத் தகவல். இப்படத்திற்காக கங்கனா ரனாவத் தமிழகத்திற்கு வந்து படத்தை பிரமோட் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி வேறு செலுத்தினார்.அதோடு முதல் காட்சி பார்த்து முன்னால் அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்துக்கள் பல கூறினார் இருந்தும் அவர் கூறிய கருத்துக்களை அவரது கட்சியின் நபர்கள் கூட ஏற்காத நிலை தான் இருக்கிறது. தலைவி படத்தில் சசிகலா நடராஜன் கதாபாத்திரம் முழுமையாக இல்லாவிட்டாலும் மரியாதையாக காட்சி படுத்தப்பட்டிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...