பாதுகாப்பு அமைச்சகம் இராணுவத்தில் மல்யுத்த வீரர்கள் தேர்வு: செப்டம்பர் 27 முதல் 30 வரை நடக்கிறது
கர்நாடகா பெல்காம் மாவட்டத்தில் உள்ள மராத்தா காலாட்படைப்பிரிவு மையத்தின் பாய்ஸ் ஸ்போர்ட்ஸ் கம்பெனி, மல்யுத்த வீரர்களுக்கான தேர்வை, தனது மையத்தில் 2021 செப்டம்பர் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடத்துகிறது.
இதில் மைசூரு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். காலை 7 மணி முதல் 10 மணி வரை தேர்வு நடைபெறும். இந்த தேர்வை இந்திய விளையாட்டு ஆணையம், விளையாட்டுத்துறை மருத்துவ மையம் மற்றும் பாய்ஸ் கம்பெனியின் பணியாளர்கள் வெளிப்படையான முறையில் நடத்துவர்.
கருத்துகள்