முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜாதிவாரி இட ஒதுக்கீடு ரத்து செய்ய வலியுறுத்தி.சமூகநீதிக் கூட்டமைப்பின் சார்பாக சென்னையில் ஆர்ப்பாட்டம்.

சமூகநீதி கூட்டமைப்பின் சார்பாக  சென்னையில் ஆர்ப்பாட்டம்.


MBC உள்ஒதுக்கீடு சட்டம் 8/2021 கூறுவது என்ன?


2018 ஆம் ஆண்டில் அரசியல் அமைப்பு சட்ட திருத்தம் 102 க்கு பிறகு சரத்து 342-A ன்படி ஜனாதிபதி ஆளுனரை ஆலோசித்துவிட்டு ஒரு மாநிலத்தில் யார் யார் எந்தெந்தப் பிற்பட்ட பிரிவில் வருவார்கள் என அறிவிப்பாரெனச் சட்டமாக்கப்பட்டுள்ளது. எனவே ஆளுநர் 26.2.2021 அன்று சட்ட எண் 8/2021 க்கு ஒப்புதல் அளித்தது சரியா தவறா என்பதே இப்போதைய விவாதமாகியுள்ள நிலை . தமிழகத்தில் முக்கிய சட்ட வல்லுநர்கள் தெரிவித்த கருத்தானது இதேபோன்ற மராத்தியர் இடஒதுக்கீட்டுச் சட்டம் 2018 ஐ உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கு எண் 3123/2020 ன் படி 09 செப்டம்பர் 2020 அன்று  மஹாராஷ்ட்ரா சட்டமன்றத்திற்கு இதுபோன்ற சட்டம் இயற்ற அதிகாரமில்லை என்றும் இந்த


பிரச்சனையை அரசியல் அமைப்புச் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும் அதுவரை அச்சட்டத்தை  செயல் படுத்த தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு இப்படி ஒரு நிலை உள்ளதை அறியாமல் செய்துவிட்டது என்று நினைத்துவிடவேண்டாம் ஏனென்றால் உச்ச நீதிமன்றத்தில் 2012 ஆம் ஆண்டு முதல் நிலுவையிலுள்ள தமிழக இடஒதுக்கீட்டு வழக்கில் சிலர் தமிழக வழக்கையும் மேற்படி

மஹாராஷ்ர வழக்கோடு சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று 2020 டிசம்பர் மாதத்திலேயே வழக்குத் தொடுத்து அது நிலுவையில் இருக்கும் போது தான், நீதிமன்றங்களையும் மக்களையும் உலக ஜனநாயக வரலாற்றில் எங்குமில்லாத அளவில் மின்னல் வேகத்தில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது). என் தெரிவிக்கும் நிலையில்.


மேற்படி 102 வது திருத்தப்படி சரத்து 338-Bன்படி (உட்பிரிவு 7) தமிழக பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாடு சம்பந்தமாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மட்டுமே பரிந்துரை செய்ய முடியும். எனவே தமிழக அரசு தமிழக ஆணையத்தின் தலைவரின் பரிந்துரையின் அடிப்படையில் சட்டம் 8/2021 கொண்டுவரப்பட்டுள்ளது என்பது அதிகாரமான செயலா என்பது கவனிக்கத்தக்கது. 


1994 ஆம் ஆண்டில் அரசியல் அமைப்பு சட்ட திருத்தம் 76 ன் மூலம் தமிழக இடஒதுக்கீடு சட்டம் 45/1994 இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 9 வது அட்டவனையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் பிரிவு 4, மற்றும் 5ன்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு(MBC) 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. அச்சட்டத்தை திருத்தாமல் MBC இடஒதுக்கீட்டை 10.5 சதம் 7 சதம், 2.5 சதம் எனக் கூறுபோட சட்டத்தில் வாய்ப்பே இல்லை. சட்டம் 45/1994 தான் செல்லும், சட்டம் 8/2021 செல்லாது எனவும் சட்டம் 45/1994 ஐத் திருத்தினால் மட்டுமே உள் ஒதுக்கீடு வழங்க முடியும். என் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் தமிழக அரசு இப்போதுதான் இப்படி செய்கின்றது என்று நினைக்கவேண்டாம் 2007 ஆம் ஆண்டில் 30 சதம் BC இடஒதுக்கீட்டிலும், 2009 ஆம் ஆண்டில் 18 சதம் SC இடஒதுக்கீட்டிலும் இதுபோன்று  நிகழ்த்தப்பட்டுள்ளது. மக்களும் நீதிமன்றங்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர். என்பதே பிரபலமான வழக்கறிஞர்கள் கருத்து.



அரசியல் அமைப்புங் சட்டம் சரத்து 16(4) ன்படி வகுப்பு வாரி இடஒதுக்கீடு மட்டுமே சாத்தியம். சாதிவாரி இடஒதுக்கீடு செல்லாது. 1921 ஆம் ஆண்டு முதல் தமிழகத்திலிருந்த ஜாதிவாரி இடஒதுக்கீட்டை 1951 ஆம் ஆண்டில் சென்பகம் துரைராஜன் வழக்கில் செல்லாது என உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூறி 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜாதிவாரி இடஒதுக்கீடு கொண்டுவருவது சட்டப்படி செல்லுமா? செல்லாதா?. ஆக மறு சீராய்வு தேவை.


அம்பாசங்கர் அறிக்கை மோசடியானதென்று அந்த ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே அந்த அறிக்கையின் ஜாதிவாரி புள்ளிவிபரங்களை ஏற்றுக்கொள்ள சட்டத்தில்  இடமில்லை என்பதும், சாதிவாரி புள்ளிவிபரங்களைச் சேகரிக்க அரசாணை 99/ 2020 நாள்: 21 டிசம்பர் 2020 நியமித்து விட்டு அந்த ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு எல்லா சட்ட மரபுகளையும் மீறப்பட்டதாகவும் 115 ஜாதிக்கான சமூக மக்களின் உரிமைகளை பறித்தது குறித்து இந்த சமூக நீதிக் கூட்டமைப்பு இப்போது அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அனைத்து மறவர் நலக்கூட்டமைப்பும் கலந்து கொண்டுள்ளார்

திங்கள் கிழமை 06 செப்டம்பர் 2021 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர் ஜாதிக்கான 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கிய  தமிழக அரசுச் சட்டம் 8/2021 ஐ

இரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இராஜீவ் காந்தி சிலை அருகில், சின்னமலை, சைதாப்பேட்டை,சென்னையில் என அறிவிக்கப்பட்டது பின்னர் இடம் மாற்றம் செய்யப்பட்டது.

தமிழக மீனவர்களும் சமூகநீதி பாேராட்டத்தில் இணைந்தார்கள்.

சமூகநீதிக் கூட்டமைப்பின் சார்பாக காலை 11 மணியளவில் சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் மீனவர் சமூக தலைவர்களை சமூக நீதி கூட்டமைப்பின் சார்பாக மாநில போராட்டக் குழு உறுப்பினர் வழக்குரைஞர் திருநாவுக்கரசு வேட்டுவக் கவுண்டர் சமூக தலைவர் முனுசாமி கவுண்டர் வழக்குரைஞர் ரஜினி, தொட்டியத்து நாயக்கர் சமூக நிர்வாகி ராம்ராஜ் மற்றும் முத்தரையர் சமூக நிர்வாகிகள் தனுஷ்காேடி, ராசி ராம் ஆகியோர் சென்று சமூக நீதி கூட்டமைப்பில் இணைந்து ஒன்றுபட்டு செயல்பட அழைப்பு விடுத்த நிலையில் அழைப்பை ஏற்றுக் கொண்டு சமூக நீதி கூட்டமைப்பில் இணைந்து செயல்படுவதற்கும்  சென்னையில் நடைபெற்ற சமூக நீதிப் போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளனர். அமைப்புகளும் அதன் தலைவர்களும். அந்த நிகழ்ச்சியில்

ஜெ.கோசுமணி தலைவர் தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம், கு.பாரதி தலைவர் தென்னிந்திய மீனவர் நலச் சங்கம், கபடி பி மாறன். தலைவர் தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம். ச.ரூபேஷ்குமார் பொதுச்செயலாளர் மீனவர் மக்கள் முன்னணி கட்சி, ஏ ஜி ஆர் கோவிந்தராஜ் பொதுச் செயலாளர் தமிழ்நாடு பருவதராஜகுல மீனவர் சங்கம். வே சங்கர் தலைவர் மீனவர் மக்கள் முன்னணி கட்சி, க‌ ஜெகதீசன் தலைவர், தமிழ்நாடு மீனவர் முற்போக்கு சங்கம்,உள்ளிட்ட நபர்கள் இணைய வலுவடைந்து விரிவடைந்த சமூகநீதிக் கூட்டமைப்பின் மாநில போராட்டக்குழு

தமிழ்நாடு.வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் வழங்கிய விழுக்காடு இட ஒதுக்கீட்டை நீக்கிடக் கோரி சின்னமலையில் ஆர்ப்பாட்டம் நடத்த இடம் கொடுங்கள் என்ற போது 

அரசு சந்தில் இட ஒதுக்கீடு செய்கிறது என நிர்வாகிகள் குறை கூறிய போதும் ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.அதில் பேசியவர்கள் 

 "பல ஆண்டுகள் தொடர்ந்து செயல்படும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆணையத்தின் தலைவராக வன்னியர்கள் மட்டுமே 25 ஆண்டுகள் பதவி வகிக்கிறார்கள் என்றால் இது எப்படி சமூகநீதி ஆகும்?வாக்கு அரசியலுக்கு வழிவகுத்தது நடக்கிறது என்றனர்.

115/148 சாதிகளின் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தனி ஒரு சாதியான வன்னியர்கள் என்ற ஒரு ஜாதிக்கு வழங்கியது பெரும் சமூக அநீதி என் பலர் பேசினர். அணைத்து ஜாதிக்கான சமூக நீதிக் குரல் துவங்கிய நிலையில் அரசின் பார்வையில் பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த