ஜாதிவாரி இட ஒதுக்கீடு ரத்து செய்ய வலியுறுத்தி.சமூகநீதிக் கூட்டமைப்பின் சார்பாக சென்னையில் ஆர்ப்பாட்டம்.
சமூகநீதி கூட்டமைப்பின் சார்பாக சென்னையில் ஆர்ப்பாட்டம்.
MBC உள்ஒதுக்கீடு சட்டம் 8/2021 கூறுவது என்ன?
2018 ஆம் ஆண்டில் அரசியல் அமைப்பு சட்ட திருத்தம் 102 க்கு பிறகு சரத்து 342-A ன்படி ஜனாதிபதி ஆளுனரை ஆலோசித்துவிட்டு ஒரு மாநிலத்தில் யார் யார் எந்தெந்தப் பிற்பட்ட பிரிவில் வருவார்கள் என அறிவிப்பாரெனச் சட்டமாக்கப்பட்டுள்ளது. எனவே ஆளுநர் 26.2.2021 அன்று சட்ட எண் 8/2021 க்கு ஒப்புதல் அளித்தது சரியா தவறா என்பதே இப்போதைய விவாதமாகியுள்ள நிலை . தமிழகத்தில் முக்கிய சட்ட வல்லுநர்கள் தெரிவித்த கருத்தானது இதேபோன்ற மராத்தியர் இடஒதுக்கீட்டுச் சட்டம் 2018 ஐ உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கு எண் 3123/2020 ன் படி 09 செப்டம்பர் 2020 அன்று மஹாராஷ்ட்ரா சட்டமன்றத்திற்கு இதுபோன்ற சட்டம் இயற்ற அதிகாரமில்லை என்றும் இந்த
பிரச்சனையை அரசியல் அமைப்புச் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும் அதுவரை அச்சட்டத்தை செயல் படுத்த தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு இப்படி ஒரு நிலை உள்ளதை அறியாமல் செய்துவிட்டது என்று நினைத்துவிடவேண்டாம் ஏனென்றால் உச்ச நீதிமன்றத்தில் 2012 ஆம் ஆண்டு முதல் நிலுவையிலுள்ள தமிழக இடஒதுக்கீட்டு வழக்கில் சிலர் தமிழக வழக்கையும் மேற்படி
மஹாராஷ்ர வழக்கோடு சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று 2020 டிசம்பர் மாதத்திலேயே வழக்குத் தொடுத்து அது நிலுவையில் இருக்கும் போது தான், நீதிமன்றங்களையும் மக்களையும் உலக ஜனநாயக வரலாற்றில் எங்குமில்லாத அளவில் மின்னல் வேகத்தில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது). என் தெரிவிக்கும் நிலையில்.
மேற்படி 102 வது திருத்தப்படி சரத்து 338-Bன்படி (உட்பிரிவு 7) தமிழக பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாடு சம்பந்தமாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மட்டுமே பரிந்துரை செய்ய முடியும். எனவே தமிழக அரசு தமிழக ஆணையத்தின் தலைவரின் பரிந்துரையின் அடிப்படையில் சட்டம் 8/2021 கொண்டுவரப்பட்டுள்ளது என்பது அதிகாரமான செயலா என்பது கவனிக்கத்தக்கது.
1994 ஆம் ஆண்டில் அரசியல் அமைப்பு சட்ட திருத்தம் 76 ன் மூலம் தமிழக இடஒதுக்கீடு சட்டம் 45/1994 இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 9 வது அட்டவனையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் பிரிவு 4, மற்றும் 5ன்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு(MBC) 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. அச்சட்டத்தை திருத்தாமல் MBC இடஒதுக்கீட்டை 10.5 சதம் 7 சதம், 2.5 சதம் எனக் கூறுபோட சட்டத்தில் வாய்ப்பே இல்லை. சட்டம் 45/1994 தான் செல்லும், சட்டம் 8/2021 செல்லாது எனவும் சட்டம் 45/1994 ஐத் திருத்தினால் மட்டுமே உள் ஒதுக்கீடு வழங்க முடியும். என் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் தமிழக அரசு இப்போதுதான் இப்படி செய்கின்றது என்று நினைக்கவேண்டாம் 2007 ஆம் ஆண்டில் 30 சதம் BC இடஒதுக்கீட்டிலும், 2009 ஆம் ஆண்டில் 18 சதம் SC இடஒதுக்கீட்டிலும் இதுபோன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. மக்களும் நீதிமன்றங்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர். என்பதே பிரபலமான வழக்கறிஞர்கள் கருத்து.
அரசியல் அமைப்புங் சட்டம் சரத்து 16(4) ன்படி வகுப்பு வாரி இடஒதுக்கீடு மட்டுமே சாத்தியம். சாதிவாரி இடஒதுக்கீடு செல்லாது. 1921 ஆம் ஆண்டு முதல் தமிழகத்திலிருந்த ஜாதிவாரி இடஒதுக்கீட்டை 1951 ஆம் ஆண்டில் சென்பகம் துரைராஜன் வழக்கில் செல்லாது என உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூறி 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜாதிவாரி இடஒதுக்கீடு கொண்டுவருவது சட்டப்படி செல்லுமா? செல்லாதா?. ஆக மறு சீராய்வு தேவை.
அம்பாசங்கர் அறிக்கை மோசடியானதென்று அந்த ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே அந்த அறிக்கையின் ஜாதிவாரி புள்ளிவிபரங்களை ஏற்றுக்கொள்ள சட்டத்தில் இடமில்லை என்பதும், சாதிவாரி புள்ளிவிபரங்களைச் சேகரிக்க அரசாணை 99/ 2020 நாள்: 21 டிசம்பர் 2020 நியமித்து விட்டு அந்த ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு எல்லா சட்ட மரபுகளையும் மீறப்பட்டதாகவும் 115 ஜாதிக்கான சமூக மக்களின் உரிமைகளை பறித்தது குறித்து இந்த சமூக நீதிக் கூட்டமைப்பு இப்போது அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அனைத்து மறவர் நலக்கூட்டமைப்பும் கலந்து கொண்டுள்ளார்
திங்கள் கிழமை 06 செப்டம்பர் 2021 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர் ஜாதிக்கான 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுச் சட்டம் 8/2021 ஐ
இரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இராஜீவ் காந்தி சிலை அருகில், சின்னமலை, சைதாப்பேட்டை,சென்னையில் என அறிவிக்கப்பட்டது பின்னர் இடம் மாற்றம் செய்யப்பட்டது.
தமிழக மீனவர்களும் சமூகநீதி பாேராட்டத்தில் இணைந்தார்கள்.
சமூகநீதிக் கூட்டமைப்பின் சார்பாக காலை 11 மணியளவில் சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் மீனவர் சமூக தலைவர்களை சமூக நீதி கூட்டமைப்பின் சார்பாக மாநில போராட்டக் குழு உறுப்பினர் வழக்குரைஞர் திருநாவுக்கரசு வேட்டுவக் கவுண்டர் சமூக தலைவர் முனுசாமி கவுண்டர் வழக்குரைஞர் ரஜினி, தொட்டியத்து நாயக்கர் சமூக நிர்வாகி ராம்ராஜ் மற்றும் முத்தரையர் சமூக நிர்வாகிகள் தனுஷ்காேடி, ராசி ராம் ஆகியோர் சென்று சமூக நீதி கூட்டமைப்பில் இணைந்து ஒன்றுபட்டு செயல்பட அழைப்பு விடுத்த நிலையில் அழைப்பை ஏற்றுக் கொண்டு சமூக நீதி கூட்டமைப்பில் இணைந்து செயல்படுவதற்கும் சென்னையில் நடைபெற்ற சமூக நீதிப் போராட்டத்திலும் கலந்து கொண்டுள்ளனர். அமைப்புகளும் அதன் தலைவர்களும். அந்த நிகழ்ச்சியில்
ஜெ.கோசுமணி தலைவர் தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம், கு.பாரதி தலைவர் தென்னிந்திய மீனவர் நலச் சங்கம், கபடி பி மாறன். தலைவர் தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம். ச.ரூபேஷ்குமார் பொதுச்செயலாளர் மீனவர் மக்கள் முன்னணி கட்சி, ஏ ஜி ஆர் கோவிந்தராஜ் பொதுச் செயலாளர் தமிழ்நாடு பருவதராஜகுல மீனவர் சங்கம். வே சங்கர் தலைவர் மீனவர் மக்கள் முன்னணி கட்சி, க ஜெகதீசன் தலைவர், தமிழ்நாடு மீனவர் முற்போக்கு சங்கம்,உள்ளிட்ட நபர்கள் இணைய வலுவடைந்து விரிவடைந்த சமூகநீதிக் கூட்டமைப்பின் மாநில போராட்டக்குழு
தமிழ்நாடு.வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் வழங்கிய விழுக்காடு இட ஒதுக்கீட்டை நீக்கிடக் கோரி சின்னமலையில் ஆர்ப்பாட்டம் நடத்த இடம் கொடுங்கள் என்ற போது
அரசு சந்தில் இட ஒதுக்கீடு செய்கிறது என நிர்வாகிகள் குறை கூறிய போதும் ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.அதில் பேசியவர்கள்
"பல ஆண்டுகள் தொடர்ந்து செயல்படும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆணையத்தின் தலைவராக வன்னியர்கள் மட்டுமே 25 ஆண்டுகள் பதவி வகிக்கிறார்கள் என்றால் இது எப்படி சமூகநீதி ஆகும்?வாக்கு அரசியலுக்கு வழிவகுத்தது நடக்கிறது என்றனர்.
115/148 சாதிகளின் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தனி ஒரு சாதியான வன்னியர்கள் என்ற ஒரு ஜாதிக்கு வழங்கியது பெரும் சமூக அநீதி என் பலர் பேசினர். அணைத்து ஜாதிக்கான சமூக நீதிக் குரல் துவங்கிய நிலையில் அரசின் பார்வையில் பட்டது.
கருத்துகள்