மும்பை-அகமதாபாத் அதி வேக ரயில் திட்டத்தின் கட்டமைப்பை துரிதப்படுத்துவதற்காக காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட உபகரணம் அறிமுகம்
இரயில்வே அமைச்சகம்
மும்பை-அகமதாபாத் அதி வேக ரயில் திட்டத்தின் கட்டமைப்பை துரிதப்படுத்துவதற்காக காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட உபகரணம் அறிமுகம்
மும்பை-அகமதாபாத் அதி வேக ரயில் தட திட்டத்தின் கட்டமைப்பை துரிதப்படுத்துவதற்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஃபுல் ஸ்பேன் லான்ச்சிங் எக்யுப்மென்ட்- ஸ்ட்ராடில் காரியர் மற்றும் கிர்டர் டிரான்ஸ்போர்டரை மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு & தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் காணொலி மூலம் இன்று அறிமுகம் செய்தார்.
திரு மியாமோட்டொ ஷிங்கோ, மாண்புமிகு அமைச்சர், ஜப்பான் தூதரகம், திரு சுனீத் சர்மா, தலைவர் & தலைமை செயல் அதிகாரி, ரயில்வே வாரியம், திரு சதிஷ் அக்னிஹோத்ரி, நிர்வாக இயக்குநர், என் எச் எஸ் ஆர் சி எல், திரு அனுபம் குமார், திரு எஸ் என் சுப்பிரமணியன், தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர், எல் & டி கன்ஸ்ட்ரக்ஷன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மாண்புமிகு அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், தற்சார்பு இந்தியா இயக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக 1100 மெட்ரிக் டன் திறன் கொண்ட இந்த உபகரணத்தை சென்னைக்கு அருகிலுள்ள காஞ்சிபுரத்தில் லார்சன் & டூப்ரோ நிறுவனம் வடிவமைத்து தயாரித்ததாக கூறினார். இதற்காக 55 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் எல்&டி கூட்டு சேர்ந்தது.
இத்தகைய உபகரணத்தை வடிவமைத்து தயாரிக்கும் இத்தாலி, நார்வே, கொரியா மற்றும் சீனாவின் பட்டியலில் இந்தியாவும் தற்போது இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் அதி வேக ரயில்வே கட்டமைப்பை விரைந்து நிறுவ முடியும்.
கருத்துகள்