ஆரணி உணவகத்தில் கலப்படப் பிரியாணி விற்பனை சாப்பிட்ட பத்து வயதுச் சிறுமி உயிரிழப்பு மூவர் கவலைக்கிடம்
ஆரணியில் உணவகத்தில் நாய் கறி பிரியாணி விற்பனை சாப்பிட்ட பத்து வயதுச் சிறுமி உயிரிழப்பு மூவர் கவலைக்கிடம்
ஆரணியில் ஹோட்டல் உரிமையாளருடன் சமையல் மாஸ்டர் கைது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர் பழைய பேருந்து நிலையம் அருகில் 7 ஸ்டார் என்ற பெயரில் காதர் பாஷா அவரது மகன் அம்ஜத் பாஷா ஆகியோர் உணவகம் நடத்துகின்றனர். கடையில் துந்தரீகம் பட்டு ஆனந்த், அவர் மனைவி பிரியதர்ஷினி, மகள் லோசினி (வயது10), மகன் சரண் (வயது14), ஆகியோர் கடந்த புதன்கிழமை உணவு சாப்பிட்டுள்ளனர்.பிரியாணி, பரோட்டா, தந்தூரி சிக்கன் உள்ளிட்டவற்றை இவர்கள் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு சென்றனர். அப்போது அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதனால் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றவர்கள்
தொடர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் ஆனந்த், சரண், பிரியதர்ஷினி ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 10 வயதுச் சிறுமி லோசினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனடையே, இதே உணவகத்தில் சாப்பிட்ட 40 க்கும் மேற்பட்டவர்களுக்கும் இதே பிரச்னைகள் ஏற்பட்டு பலரும்
ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இச் சம்பவத்தை தொடர்ந்து, உணவகத்துக்கு ஆரணி கோட்டாட்சியர் சீல் வைத்தார்.
தொடர்ந்து, உணவகத்தை நடத்தி வரும் அம்ஜத் பாஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகியோரை ஆரணி நகர காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் மீது, உணவில் நச்சுப்பொருள் கலந்தது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் உணவுக் கலப்படம் தடுப்பு அலுவலர்கள் பல ஹோட்டல்களில் சோதனை நடத்தி நாய் கறிகளை பறிமுதல் செய்தனர். இந்தியாவில் கலப்பட தடைச்சட்டம் 1954 ஆம் ஆண்டு அமலாக்கப்பட்டு. இதன் பிரிவு 12 ன் படி நுகர்வோர், கலப்படம் உள்ளது என சந்தேகிக்கும் பொருளை மாதிரி எடுத்து வெளிப்படையாகவே ஆய்வகத்திற்கு அனுப்பலாம். குறைந்தது இரு நபர்கள் சாட்சியம் வேண்டும். பிரிவு 20 ன் படி நுகர்வோர் வழக்குத் தொடரவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கலப்படம் நிரூபிக்கப்பட்டால் நுகர்வோர் அனுப்பும் மாதிரிக்கான கட்டணத் தொகை ரூ.50 ஐ திரும்பப் பெறும் வசதியும் உள்ளது. மேலும் குற்றவாளிக்கு ஆறுமாதம் சிறைத் தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரையிலும் ரூபாய்.1000 - 5000 வரை அபராதமும் விதிக்கப்படும். இந்திய நாடாளுமன்றத்தில் விற்க தடை செய்த குளிர்பானங்கள் இந்தியா முழுவதும் விற்கப்படுகின்றன. இதில், உயிரைக் கொல்லும் 40 க்கும் மேற்பட்ட வீரியமுள்ள வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பீட்சா என்ற துரித உணவு, வெளிநாட்டு உணவகங்களின் பெயரில் இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது. அதில், அதிக சுவை மிகுந்த சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. இது நம் உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி பல நோய்களுக்கு வழியாக அமைந்துவிடுகிறது.உணவுப் பொருளில் கலப்படம் செய்வது, சாப்பாட்டில் மண்ணை அள்ளிப் போடுவதற்கு ஒப்பானதென்றால், இலஞ்சம் பெறுவது "தன்னையே விற்பதற்கு' ஒப்பானது என்று அறிய வேண்டும். முறைப்படி நடக்க வேண்டிய சமூகப் பணிகள், இலஞ்ச இலாவண்ய அரக்கனால் முடக்கப்படும் போது, அது தொடர்ந்து பரவி, தேசிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் லஞ்சத்தை தேசிய அவமானம் எனக் கூறலாம். தனிமனித ஒழுக்கமும், அறநெறி கருத்துக்களும் தற்கால மனிதர்களிடம் குறைந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் இலஞ்சப் பேய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாவிட்டால், வருங்கால சமூகம் இன்னும் வலுவிழந்து, வாழ்விழந்தும் போகும். இன்றைய இளைஞர் கூட்டம், இலஞ்சத்தை அடியோடு வெறுக்கிறது. இலஞ்சம், ஊழலுக்கு எதிராக மக்கள் மனநிலை உருவாகி விட்டது. இருந்தும் மக்கள் எளிதாக நடவடிக்கை எடுக்க வழி இல்லை. தமிழகம் முழுவதும் கலப்படம், சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனை அதிகரிப்பு தொடர்கிறது தொடர்பாக புகார் தெரிவிக்க 2017 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி 9444042322 என்ற வாட்ஸ்அப் எண் தொடங்கப்பட்டது. நுகர்வோரும் ஆர்வத்துடன் புகார்களை தெரிவித்தனர். ஆனால் இலஞ்சம் பெறும் சுகாதார அதிகாரிகள் கண்டும் காணாத நிலையில்
, 2017 ஆம் ஆண்டு 1,227 புகார்களும் 2018 ஆம் ஆண்டில் 5,345 மற்றும் 2019 ஆம் ஆண்டில் 5,109 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளில் மொத்தம் 11,681 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் தண்டனை கிடைத்ததா என்பதே நம் வினா ?
சுகாதரமற்ற உணவுகள், கெட்டுப்போன இறைச்சிகள், மீன் விற்பனை, நெய், தேயிலை தூள் உள்ளிட்டவற்றில் கலப்படம், தடை செய்யப்பட்ட குட்கா, பான் விற்பனை உள்ளிட்ட பல்வேறு வகையான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதகவல் படி: வாட்ஸ் அப் எண்ணில் பெறப்படும் புகார்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலகர்களுக்கு அனுப்பப்படுகிறது
.
அவர்கள், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களின் மூலம் கள ஆய்வு செய்கின்றனர். கலப்படம், சுகாதாரமற்ற உணவு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மாதிரிகளை பரிசோதனை செய்து கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டால் நோட்டீஸ் அனுப்பி சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம். நுகர்வோரும் ஆர்வமுடன் புகார்களை அளித்து வருகின்றனர். 24 மணி நேரத்தில் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இவ்வாறு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறினார். ஆனால் இதில் உண்மை உண்டா என்பது தான் எழு வினா? உயிரிழப்பு நடந்த பின்னர் நடவடிக்கை எடுப்பதில் பலனில்லை.
கருத்துகள்