பிரதமர் அலுவலகம் பஞ்சாப் முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ள சரண்ஜித் சிங் சன்னிக்கு பிரதமர் வாழ்த்து
பஞ்சாப் முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ள திரு சரண்ஜித் சிங் சன்னிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,
“பஞ்சாப் முதல்வராக பதவியேற்றுக் கொண்டதற்காக திரு சரண்ஜித் சிங் சன்னி அவர்களுக்கு வாழ்த்துகள். பஞ்சாப் மாநில மக்களின் நல்வாழ்விற்காக பஞ்சாப் அரசுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்”, என்று கூறியுள்ளார்.
கருத்துகள்