தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் - குடியரசு தலைவர்.உத்தரவு.
தமிழகத்தில் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இவர் முன்பே நாகலாந்து ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது பன்வாரிலால் புரோகிதர் ஆளுநராக பணியாற்றினார். இவருக்கு கடந்த வாரத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்ட. நிலையில், தற்போது,
பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனால் தமிழகத்திற்கு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆர்.என்.ரவி என்கிற ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி பிஹார் மாநிலத்தில் பாட்னாவில் பிறந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார் பத்திரிகை துறையிலும் பணியாற்றினார்.
1976 ஆம் ஆண்டில் இந்தியக் காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா மாநிலப் பிரிவு ஒதுக்கப்பட்டது. அங்கு அவர் பத்தாண்டுகளுக்கும் மேலாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், காவல் துறை துணைத் தலைவர் உள்ளிட்ட பல பதவிகளில் பணியாற்றினார். மத்தியப் புலனாய்வுத்துறை பணியின் போது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட குற்றக் கும்பல்களுக்கு எதிராக பல ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டார். இந்தியாவின் உளவுத்துறை இன்டலிஜென்ட் பிஃயூரோவிலும் பணியாற்றியுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு உளவு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக நியமிக்கப்பட்ட கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில். 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராகப் பணியாற்றி வந்த நிலையில்,
தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள்