முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழகத்தில் மாணவ மாணவியரிடையே தேசப்பற்றை வளர்க்க பாரதியாரின் பாடல்களை பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் தகவல்

பாரதியின் தேசப்பற்றையும் புகழையும் உலகறியச் செய்ய பனாராஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாரதியாருக்கு ஆய்வு இருக்கை


எட்டயபுரத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் மாணவ  மாணவியரிடையே  தேசப்பற்றை வளர்க்க பாரதியாரின் பாடல்களை பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணி மண்டபத்தில் நடைபெற்ற மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் மண்டல மக்கள் தொடர்பு  அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த சுதந்திரத்தின் 75வது ஆண்டு  கொண்டாட்ட  நிகழ்ச்சியில்  அவர்  பங்கேற்று  பேசினார்.
சுப்பிரமணிய பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 1908ம் ஆண்டு வாக்கிலேயே பெண்களுக்காக  தனியாக பத்திரிகையை நடத்தியவர் பாரதியார் என்றார், அவரது எழுத்தின் வலிமை  வைரத்திற்கு ஒப்பானது என்றும்  அவருடைய எழுத்துக்கள், வார்த்தைகளின் தாக்கம் மக்களிடையே விடுதலை வேட்கை உணர்வை ஏற்படுத்தியதாக  கூறினார்.
பாரதியின் தேசப்பற்றையும் புகழையும் உலகறியச் செய்யும் வகையில் காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் பாரதியார் பெயரில் சிறப்பு இருக்கை ஏற்படுத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  அறிவித்துள்ளதை  அமைச்சர்  சுட்டிக்காட்டினார்.
பாரதியார் கவிதைகளை புனையும்போது வார்த்தைகளை தெரிந்தெடுத்து அவற்றைப் பிரயோகம் செய்ய இசையோடு இயைந்து அமையும்படி எழுதி வடிக்க பட்ட துன்பம் பிரசவ ஈடானது என்றார். அதே சமயம்  என்றுமே நாடு தமக்கு என்ன செய்தது  என்பது  குறித்து  அவர்  எண்ணியதே இல்லை என்றும் நாடு விடுதலை அடைய தனது வாழ்நாள் முழுமையையும் அவர் கவிதை கட்டுரை மற்றும் பத்திரிகை பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள அர்ப்பணித்து  இருந்தார்.

எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபம் இன்னும் பொலிவுற அழகு படுத்தப்பட வேண்டும் என்று கூறியதோடு இதற்கு மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என்று குறிப்பிட்டார். 1946ல் இதே வாளாகத்தில் பாரதியாரின் பெருமையை அறிந்தவர்கள் அவரின் நினைவாக அவருக்கு மார்பளவு சிலை ஒன்றை நிறுவி அந்த வாளாகத்தினை மூதறிஞர் ராஜாஜி  திறந்து  வைத்ததாக  அமைச்சர்  கூறினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் ஏழ்மையை தவிர ஒன்றையும் பார்க்காதவர்  பாரதியார்.

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே கிடைத்த சுதந்திரத்தை எப்படி ஆனந்தமாக கொண்டாட வேண்டும் என்பதை அவர் உற்சாகமாக நூறு ஆண்டுகளுக்கு முன்பே அவர்  பாடியுள்ளார்.  வெள்ளைக்காரனை  கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியாத அவர் அப்போதே சுதந்தரத்தை ஒளி படைத்த கண்ணினாய் வா வா என்று சொல்லி வரவேற்று இருக்கிறார் என்று அவரது பெருமையை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் எடுத்துக் கூறினார்.

சில சரித்திர உணர்ச்சிமிக்க பாடலை பாடியவர் பாடல்கள் மனதில் சில தடங்கல்கள் ஏற்படும் போது பராசக்தி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். எரிமலை போன்றும் உணர்ச்சிமிகு எழுத்துக்களை அவர் கஷ்டப்பட்டு எழுதியுள்ளார்.

75-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும்  இந்த வேளையில் சுதந்திர போராட்ட வீரர்கள் அனைவரின் சிறப்பையும் நாடு முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும்.

பள்ளிக்கூடங்களில் சிறுபிள்ளைகளுக்கு பாரதியாரின் பாட்டை கற்றுக் கொடுக்க வேண்டும் அப்போதுதான் சிறுவயதிலேயே சிறுவர்களிடம் நாட்டுப்பற்று வளரும் என்று கூறினார்.  அவர்  எட்டயபுரத்தின்  சொத்து அவரை உலகிற்கு பகிர்ந்து கொடுங்கள் பாரதியை நீங்கள் மறக்காதீர்கள் நாங்களும் மறக்க  மாட்டோம் என்று அமைச்சர்  நிர்மலா  சீதாராமன் பேசினார்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் பாரதி வெறுமனே தேசபக்தி பாடல்களை மட்டுமே எழுதியவரல்ல என்றும் இளம் வயதிலேயே சமூக சீர்திருத்தவாத கருத்துக்கள் உடையவராக  இருந்தார்  என்று  அமைச்சர் புகழாரம் சூட்டினார்.

இந்த நாட்டுக்கு பாரதி ஆற்றிய பங்கு அளப்பரியது என்று அமைச்சர் எல். முருகன் பேசினார்.

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை கொண்டாடும் விதமாக அடுத்த இரண்டாண்டுகள் பல்வேறு அமைச்சகங்களின் சார்பில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.

முன்னதாக மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் வெளியீட்டு பிரிவு சார்பில் சுப்பிரமணிய  பாரதி  மற்றும்  வ.உ.  சிதம்பரம் பிள்ளை  நூல்களை வெளியிட மத்திய  இணையமச்சர் எல். முருகன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பல்வேறு முகமறிந்த மற்றும் முகமறியாத தியாகிகளின் புகைப்பக் கண்காட்சியை அமைச்சர்கள்  திறந்து  வைத்து  பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே.செந்தில்ராஜ் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின்  தென்மண்டல தலைமை இயக்குனர் எஸ். வெங்கடேஸ்வர்  உள்ளிட்டவர்கள்  கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...