முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழகத்தில் மாணவ மாணவியரிடையே தேசப்பற்றை வளர்க்க பாரதியாரின் பாடல்களை பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் தகவல்

பாரதியின் தேசப்பற்றையும் புகழையும் உலகறியச் செய்ய பனாராஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாரதியாருக்கு ஆய்வு இருக்கை


எட்டயபுரத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் மாணவ  மாணவியரிடையே  தேசப்பற்றை வளர்க்க பாரதியாரின் பாடல்களை பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணி மண்டபத்தில் நடைபெற்ற மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் மண்டல மக்கள் தொடர்பு  அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த சுதந்திரத்தின் 75வது ஆண்டு  கொண்டாட்ட  நிகழ்ச்சியில்  அவர்  பங்கேற்று  பேசினார்.
சுப்பிரமணிய பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 1908ம் ஆண்டு வாக்கிலேயே பெண்களுக்காக  தனியாக பத்திரிகையை நடத்தியவர் பாரதியார் என்றார், அவரது எழுத்தின் வலிமை  வைரத்திற்கு ஒப்பானது என்றும்  அவருடைய எழுத்துக்கள், வார்த்தைகளின் தாக்கம் மக்களிடையே விடுதலை வேட்கை உணர்வை ஏற்படுத்தியதாக  கூறினார்.
பாரதியின் தேசப்பற்றையும் புகழையும் உலகறியச் செய்யும் வகையில் காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் பாரதியார் பெயரில் சிறப்பு இருக்கை ஏற்படுத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  அறிவித்துள்ளதை  அமைச்சர்  சுட்டிக்காட்டினார்.
பாரதியார் கவிதைகளை புனையும்போது வார்த்தைகளை தெரிந்தெடுத்து அவற்றைப் பிரயோகம் செய்ய இசையோடு இயைந்து அமையும்படி எழுதி வடிக்க பட்ட துன்பம் பிரசவ ஈடானது என்றார். அதே சமயம்  என்றுமே நாடு தமக்கு என்ன செய்தது  என்பது  குறித்து  அவர்  எண்ணியதே இல்லை என்றும் நாடு விடுதலை அடைய தனது வாழ்நாள் முழுமையையும் அவர் கவிதை கட்டுரை மற்றும் பத்திரிகை பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள அர்ப்பணித்து  இருந்தார்.

எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபம் இன்னும் பொலிவுற அழகு படுத்தப்பட வேண்டும் என்று கூறியதோடு இதற்கு மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என்று குறிப்பிட்டார். 1946ல் இதே வாளாகத்தில் பாரதியாரின் பெருமையை அறிந்தவர்கள் அவரின் நினைவாக அவருக்கு மார்பளவு சிலை ஒன்றை நிறுவி அந்த வாளாகத்தினை மூதறிஞர் ராஜாஜி  திறந்து  வைத்ததாக  அமைச்சர்  கூறினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் ஏழ்மையை தவிர ஒன்றையும் பார்க்காதவர்  பாரதியார்.

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே கிடைத்த சுதந்திரத்தை எப்படி ஆனந்தமாக கொண்டாட வேண்டும் என்பதை அவர் உற்சாகமாக நூறு ஆண்டுகளுக்கு முன்பே அவர்  பாடியுள்ளார்.  வெள்ளைக்காரனை  கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியாத அவர் அப்போதே சுதந்தரத்தை ஒளி படைத்த கண்ணினாய் வா வா என்று சொல்லி வரவேற்று இருக்கிறார் என்று அவரது பெருமையை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் எடுத்துக் கூறினார்.

சில சரித்திர உணர்ச்சிமிக்க பாடலை பாடியவர் பாடல்கள் மனதில் சில தடங்கல்கள் ஏற்படும் போது பராசக்தி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். எரிமலை போன்றும் உணர்ச்சிமிகு எழுத்துக்களை அவர் கஷ்டப்பட்டு எழுதியுள்ளார்.

75-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும்  இந்த வேளையில் சுதந்திர போராட்ட வீரர்கள் அனைவரின் சிறப்பையும் நாடு முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும்.

பள்ளிக்கூடங்களில் சிறுபிள்ளைகளுக்கு பாரதியாரின் பாட்டை கற்றுக் கொடுக்க வேண்டும் அப்போதுதான் சிறுவயதிலேயே சிறுவர்களிடம் நாட்டுப்பற்று வளரும் என்று கூறினார்.  அவர்  எட்டயபுரத்தின்  சொத்து அவரை உலகிற்கு பகிர்ந்து கொடுங்கள் பாரதியை நீங்கள் மறக்காதீர்கள் நாங்களும் மறக்க  மாட்டோம் என்று அமைச்சர்  நிர்மலா  சீதாராமன் பேசினார்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் பாரதி வெறுமனே தேசபக்தி பாடல்களை மட்டுமே எழுதியவரல்ல என்றும் இளம் வயதிலேயே சமூக சீர்திருத்தவாத கருத்துக்கள் உடையவராக  இருந்தார்  என்று  அமைச்சர் புகழாரம் சூட்டினார்.

இந்த நாட்டுக்கு பாரதி ஆற்றிய பங்கு அளப்பரியது என்று அமைச்சர் எல். முருகன் பேசினார்.

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை கொண்டாடும் விதமாக அடுத்த இரண்டாண்டுகள் பல்வேறு அமைச்சகங்களின் சார்பில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.

முன்னதாக மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் வெளியீட்டு பிரிவு சார்பில் சுப்பிரமணிய  பாரதி  மற்றும்  வ.உ.  சிதம்பரம் பிள்ளை  நூல்களை வெளியிட மத்திய  இணையமச்சர் எல். முருகன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பல்வேறு முகமறிந்த மற்றும் முகமறியாத தியாகிகளின் புகைப்பக் கண்காட்சியை அமைச்சர்கள்  திறந்து  வைத்து  பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே.செந்தில்ராஜ் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின்  தென்மண்டல தலைமை இயக்குனர் எஸ். வெங்கடேஸ்வர்  உள்ளிட்டவர்கள்  கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த