வி.கே.சசிகலா நடராஜன் தொடர்புடையதாக கூறப்பட்ட பையனூர் பங்களா; முடக்கியதா பின்னணியின் உண்மை ?
எப்போதெல்லாம் ஸி.கே..சசிகலா நடராஜன் அரசியலில் மீண்டும் குதிக்கத் தயாராகிறாரோ, அப்போதெல்லாம் வருமானவரித்துறையின் சோதனைகளில் சிக்கிய ஆவணங்களில் ஒன்றை எடுத்து விடுவதே வாடிக்கையாகிறது சொத்தை முடக்கியதாக செய்திகள் வரும். ஒருமுறை முடங்கிய சொத்தை எத்தனை முறை முடக்குவது அப்படித்தான், தற்போது வி.கே.சசிகலா நடராஜன், கொடநாடு கொலை,கொள்ளை வழக்கின் விசாரணைக்கு வருவார். எடப்பாடி கே.பழனிசாமி மீது அவர் பகிரங்க சந்தேகத்தைக் கிளப்பப்போகிறாரென வி.கே. சசிகலா நடராஜன் தரப்பினர் சொல்ல ஆரம்பித்த நிலையில். செப்டம்பர் 8 ஆம் தேதி மத்திய அரசின் வருமானவரித்துறை அதிகாரிகள் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வி.கே.சசிகலா நடராஜன் தொடர்புடையய பையனூர் பங்களா வாசலில் நோட்டீஸ் ஒட்டி சொத்தை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த நிலத்தை தன்னிடமிருந்து மிரட்டி வாங்கியதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் சர்ச்சையைக் கிளப்பியிருந்த நிலை ஜெ.ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டு வி.கே.சசிகலா நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்த போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், சுமார் 1600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கினர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள 10 கிரவுண்ட் நிலம் உள்ளிட்ட ரூபாய். 300 கோடி சொத்துக்களைக் கண்டறிந்து பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கினர். அடுத்தகட்டமாக, ரூபாய்.100 கோடி மதிப்புள்ள பங்களாவை முடக்கியுள்ளனர். இதுவரை 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடக்கிறது. விசாரணை முடிவின் அடிப்படையில், முடக்கப்பட்ட சொத்துக்கள் உரிமையாளரிடம் திருப்பித்தரப்படும் அல்லது அரசு ஏலம் விடும். இந்த இரண்டில் ஒன்று தான்.
இது குறித்து வி.கே.சசிகலா நடராஜன் தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறும் போது ''அது வெறும் தகவல் அறிவிப்பு நோட்டீஸ் தான். தற்காலிக முடக்கம் தான். பங்களாவைப் பயன்படுத்தலாம். ஆனால், விற்கவோ, அடகு வைக்கவோ முடியாது. அவ்வளவு தான். 1994 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட இடமது. அப்போது 23 லட்சத்துக்கு வாங்கப்பட்ட சொத்தை இப்போது திடீரென்று 100 கோடி ரூபாய் அளவுக்குச் சொல்வதே தவறு. அதாவது, 27 வருடங்கள் கழித்து இப்போது பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்ததாகச் சொல்கிறது வருமானவரித்துறை. ஆனால், பினாமி தடுப்புச் சட்டத் திருத்தம் வந்ததே 2016 ஆம் ஆண்டு தான். பின்னோக்கி பல ஆண்டுகள் போய் இந்த புதிய சட்டத்தைப்
பயன்படுத்தியிருக்கிறார்கள. பையனூர் பங்களா பற்றி கர்நாடக நீதிமன்றம் நீதிபதி குன்ஹா தீர்ப்பிலோ, உச்சநீதிமன்ற தீர்ப்பிலோ அதை முடக்கும்படி குறிப்பிடப்படவில்லை. இருந்தும், வருமானவரித்துறையினர் இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்கள். முறைப்படி இதற்கு நாங்கள் பதில் தருவோம் '' என்றார். மேலும் பையனூர் பங்களா சசிகலா நடராஜன் தரப்பினரால் கை விடப்பட்டு 11 ஆண்டுகள் ஆகின்றன.மின்சாரக் கட்டணம் கூடக் கட்டவில்லௌ Property tax கட்டவில்லைனு ஸீஸ் பண்ணியிருக்காங்க
இதனால எங்க தரப்புக்கு எந்த நெருக்கடியும் இல்லை...Property Document ல் கூட சசிக்கலா நடராஜனின் பெயர் இல்லை.என்பது கட்சியினர் வாதம். இது அரசியல் கலந்த உண்மை
கருத்துகள்