அமமுக மாநில வழக்குரைஞர் பிரிவு துணை செயலாளர்.ராஜகம்பீரம் குரு.முருகானந்தம்.மீது கொலைவெறித் தாக்குதல்
மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தைச் சேர்ந்தவர் குரு.முருகானந்தம். இவர் அமமுக மாநில வழக்குரைஞர் பிரிவு துணை செயலாளர் பொறுப்பு வகிக்கிறார்.
மானாமதுரை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட நீதிமன்றங்களில் வழக்குகளில் ஆஜராகி வாதாடி வரும்
நிலையில், மானாமதுரை நீதிமன்றம் அருகே சிவகங்கைச் சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் குரு.முருகானந்தம் இருந்த போது, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கும்பல் அரிவாள்களுடன் அலுவலகத்திற்குள் கண்ணாடியை உடைத்து குரு.முருகானந்தத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தாங்கள் வந்த வாகனத்திலேயே தப்பிச் சென்றனர்.
இதில் முருகானந்தத்திற்கு தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்து ரத்தம் கொட்டியது. முருகானந்தம் தப்பிக்க முயன்றும் அக்கும்பல் அலுவலகத்திற்கு உள்ளேயே வைத்து அவரை வெட்டியுள்ளது.
இந்தச் சம்பவத்தை பார்த்த பகுதி மக்கள் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மானாமதுரையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பலத்த காயம் என்பதால் அங்கு முதலுதவி செய்யபட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மானாமதுரை காவல்துறையினர் வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட சிவகங்கை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அமமுக வழக்குரைஞர் சங்கச் செயலாளர் குரு முருகானந்தம் மீது அவரது அலுவலகத்திற்குள் நுழைந்து மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த வக்கில் முருகானந்தம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
மாநில வழக்குரைஞர் பிரிவு துணைச்செயலாளரான குரு.முருகாணந்தம் உடல்நிலை குறித்து கேட்டறிந்து அவர்களது மனைவிக்கு ஆறுதல் கூறிய சிவகங்கை மாவட்டச் செயலாளர் தேர்போகி வே.பாண்டி மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் கா.டேவிட்அண்ணாதுரை, மாநில வழக்குரைஞர் பிரிவு இணைச்செயலாளர் அரசனூர் கே.அன்பரசன், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் கே.வீரமணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எஸ்.ஆர்.வினோத்,மாவட்ட துணைச்செயலாளர்சோமசுந்தரம், திருப்புவனம் மேற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.எம்.பாலமுருகன் ஆகியோர் மருத்துவமனையில் பார்த்து ஆறுதல் கூறினர். வழக்குரைஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் குரு. முருகானந்தம் மீது மானாமதுரையில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும்
இதற்குக் காரணமான சமூக விரோதிகள் மீது காவல்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி. படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குரு.முருகாணந்தம்
விரைவில் முழு நலம் பெற்று வர பிரார்த்தனை செய்கிறேன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்:- என தகவல் தெரிவித்துள்ள நிலையில் மேலும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை குலாலர் சமுதாய பிரமுகரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில வழக்குரைஞர் பிரிவு துணைச் செயலாளர் குரு.முருகானந்தம் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை குலாலர் மக்கள் நல இயக்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். எனவும் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டது.அ ம மு க கழக வழக்குரைஞர் பிரிவு துணை செயலாளர் குரு முருகானந்தம் மீது மானாமதுரை அலுவலகத்தில் கொலைவெறிதாக்குதல் நடத்தியதற்கு கண்ணங்குடி ஒன்றிய அமமுக சார்பில் கடும் கண்டத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை காவல் துறை உடன் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க கேட்டும் அறிவிப்பு கொடுத்துள்ள நிலை.
கருத்துகள்