பணமோசடி குற்றம் செய்த தலைமறைவு மதுரை, நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வசந்தி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டு தனிப்படையினர் தேடி வந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வசந்தி மற்றும் அவரது உறவினர் பாண்டியராஜ் ஆகியோரைக் கைது செய்து, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் பரிசோதனைக்குப் பின், மதுரை மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு நிலக்கோட்டை கிளைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பாக அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு செய்ததன் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் வசந்தி நேற்று மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-1 ல் நேர் நிறுத்தப்பட்டு. ஒருநாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க, நீதித்துறை நடுவர் ராஜலிங்கம் உத்தரவிட்டதையடுத்து காவல்துறையினர், பாதுகாப்புடன் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
கருத்துகள்