முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத்தியப்பிரதேசத்தில் ராஜ்ய சபா உறுப்பினராகிறார் மத்திய அமைச்சர் எல்.முருகன்

மத்தியப்பிரதேசத்தில்  ராஜ்ய சபா உறுப்பினராகிறார் மத்திய அமைச்சர் எல்.முருகன்‌


தமிழக பா.ஜ.க தலைவராக  இருந்த எல்.முருகன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் கயல்விழியை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் மிகவும் குறைவான வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.

ஆளுநர் பதவியில் நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்தராஜனுக்கு பிறகு தமிழ்நாடு தலைவராக பதவியேற்ற எல்.முருகன், மாநிலத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.


காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகை குஷ்பு, தி.மு.க.வில் இருந்த கு.க.செல்வம், வி.பி.துரைசாமி உள்ளிட்டோரை பா.ஜ.க.வில் இணைப்பதில் எல்.முருகனின் பங்கு அதிகம். இது தவிர தமிழகத்தில் பாஜக கால்பதிக்கவே முடியாது என்று கூறப்பட்ட நிலையில் பா.ஜ.க 4 இடங்களில் வெற்றி பெற எல்,முருகன்  முக்கிய காரணமாக இருந்தார். எல்.முருகனின் , உழைப்பை பார்த்து அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க முடிவு செய்தது பா.ஜ.க தலைமை.


பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் பெற்றார் எல்.முருகன். மத்திய மீன்வளத் துறை இணையமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.  பதவியில் தொடர அவர் 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற நிலையில். தமிழகத்தில் வாய்ப்பு இல்லாததால் புதுச்சேரியிலிருந்து எல்.முருகனை தேர்வு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன


இதற்காக புதுவை பா.ஜ,க சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ராஜ்ய சபா சீட்டை பாஜகவுக்கு ஒதுக்கும்படி கேட்டனர். ஆனால் அங்கு தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து எல்.முருகன் தேர்வு செய்யப்படுவார் என்ற அறிவிப்பு வெளியாகியது. மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்துக்கு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில். மத்திய பிரதேசத்தில் இருந்து தமிழகத்தை சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்வு செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே காங்கிரஸில் திருநாவுக்கரசர், பா.ஜ.கவின் இல.கணேசன் ஆகியோர் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது                            தமிழகத்தில்  மத்திய இணை அமைச்சர் கலந்து கொண்டு தெரிவித்த விபரம்

ஆழ்கடல் மீனவர்களின் நலனுக்காகவே மத்திய மீன்வள சட்டம் கொண்டு வரப்படுகிறது: மத்திய இணை அமைச்சர் திரு எல். முருகன்

ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் நலனுக்காகவே மத்திய மீன்வள சட்டம் கொண்டு வரப்படுவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு,  மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு எல். முருகன் தெரிவித்துள்ளார்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களிடையே உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் திரு. எல். முருகன்,

புதிய மீன்வள சட்டத்தால்  மீனவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மீனவர்கள் நலனுக்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த மத்திய இணை அமைச்சர், இந்தத் திட்டம் ஆலோசனை  அளவிலேயே உள்ளது என்றார். மேலும், கடலோர நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்களுடன் இதுகுறித்து கூட்டம் நடத்தப்பட்டது என்று கூறிய அமைச்சர், மீனவர்களின் கருத்துக்களை கேட்ட பிறகே முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். மீனவர்களுக்கு கிசான் கிரடிட் கார்டு கொடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் தான் மீனவர்களுக்கு  தனி அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், புதிய மீன்வள சட்டத்தின் மூலம் வெளி மாநில மீனவர்கள் தங்கள் பகுதிக்குள் வருவதை தடுக்கும் பொருட்டு மீனவர்கள் பதிவு முறை கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் ஆழ்கடல் மீனவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

மீனவ பெண்கள் பயன்பெறும் வகையில் கடற்பாசி திட்டம் கொண்டுவருவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுய உதவி குழுக்கள்,  பெண்கள் பயனடைவர். மத்திய அரசின் மீன்வளம் மற்றும் மீன்வள கட்டுமான மேம்பாட்டு நிதியம்  மூலம் மீனவ கிராமங்களை தத்தெடுத்து அங்கு அடிப்படை வசதிகள், பள்ளி,  ஆகியவை ஏற்படுத்தி தரப்பட உள்ளது என்றார் அவர்.

தொடர்ந்து, சென்னை துறைமுகத்தை நவீனப்படுத்தும் திட்டம் குறித்து, கடலில் படகில் சென்று அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.திருவொற்றியூர் குப்பத்தில் அமைய உள்ள துறைமுகத்தின் மூலம் 8 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள்: மத்திய இணை அமைச்சர் திரு. எல். முருகன்

திருவொற்றியூர் குப்பத்தில் அமைய உள்ள துறைமுகத்தின் மூலம் 8 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள் என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு. எல். முருகன் சென்னையில் தெரிவித்தார்

மீனவ மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படும் மத்திய மீன்வளம் மற்றும் மீன்வள மேம்பாட்டு நிதியம் (FIDF) பங்களிப்பு மற்றும் தமிழக அரசின் நிதி உதவியுடன் 200 கோடி மதிப்பீட்டில் திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் குப்பத்தில் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு. எல். முருகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அதிகாரிகளிடம் உரையாடிய அவர்,




தமிழகத்தில் திருவொற்றியூர், தரங்கம்பாடி, நாகை மாவட்டம் ஆற்காட்டுத்துறை  உள்ளிட்ட பகுதிகளில் துறைமுகங்களில் நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்த மத்திய இணை அமைச்சர், துறைமுக பணிகளை துரிதப்படுத்துமாறு கூறினார். திருவொற்றியூர் குப்பத்தில் அமைய உள்ள இந்த துறைமுகத்தின் மூலம் 8,000 பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற முடியும் என தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கடற்பாசி வளர்ப்பு திட்டத்தை துரிதப்படுத்தி, மீனவர்கள், மீனவ விவசாயிகளுக்கான முறையான பயிற்சி அளிக்க வேண்டும் என்றார் அவர். மத்சய சம்பத யோஜனா திட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளின் நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை கூடுதல் செயலர் திரு. ஜவகர், மீன்வளத்துறை இயக்குனர் திரு பழனிச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...