வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஆதரவளிக்க அஞ்சல் துறையளிக்கும் வாய்ப்பு
வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஆதரவளிக்க அஞ்சல் துறையளிக்கும் வாய்ப்பு
வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஆதரவளிக்க அஞ்சல் துறை பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்திய அஞ்சல் துறை பரந்த அளவிலான சிறு சேமிப்புத் திட்டங்களைக் கொண்டுள்ளது. அதில் செல்வமகள் சேமிப்புத் திட்டம் இந்திய அரசாங்கத்தின் சிறந்த சிறு வைப்புத் திட்டமாகும். இந்தத் திட்டம் ஒரு பெண் குழந்தைக்கு மட்டுமேயானது. இது பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (பேடி பச்சாவோ பேடி பதாவோ ) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் திட்டம் ஒரு பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமண செலவுகளை பூர்த்தி செய்வதாகும். 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைக்கு குறைந்தபட்சம் ரூ .250/- உடன் கணக்கு தொடங்கலாம்,
பொதுமக்கள் பயனாளியை அடையாளம் கண்டு, செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்கைத் தொடங்குவதற்கு, 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைக்கு ரூ .250/- பங்களிக்கலாம். அருகில் உள்ள தபால் அலுவலகம், தபால் துறையும் பெண் குழந்தையை அடையாளம் காண உதவும். ஒரு பெண் குழந்தையின் வாழ்வில் ஒளி ஏற்றவும் மற்றும் நிதி அதிகாரமளிப்பதற்காகவும் ரூ.250/- கொடுத்து பங்களிக்கவும். மேலும் விவரங்களுக்கு கீழ்க் கண்ட முகவரியைத் தொடர்பு கொள்ளவும் :
முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம், தி.நகர் தலைமை தபால் நிலையம், 3வது மாடி, சிவஞானம் சாலை, சென்னை 600017. தொலைபேசி : 9791960993, 9444251587 044-24340981, 24346980, 044-24311551, 24345794, மின் அஞ்சல் : dochennaicitycentral.tn@indiapost.gov.in
இந்தத் தகவல், முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம், சென்னை 600 017 வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்