முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய திருப்பத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு வரப்போகிறது பல அதிரடி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கேரளாவைச் சேர்ந்த வாடகைக் கார் உரிமையாளர் நவ்சாத் மற்றும் புரோகர் நவ்ஃபுல் ஆகியோரிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணையைத் துவங்கியுள்ளனர்.


2017 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத்துவங்கியுள்ளது. வழக்கில் கூடுதல் விவரங்கள் கிடைக்கப்பெற்றதால் காவல்துறை மேல் விசாரணை ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து, கொள்ளைக் கும்பல் பயன்படுத்திய இனோவா காரின் உரிமையாளர் கேரளாவைச் சேர்ந்த நவ்சாத் மற்றும் புரோகர் நவ்ஃபுல் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில்.

 ஆஜரான இருவரிடமும் தனிப்படை டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையிலானவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது எஸ்டேட் காவலாளியான கிருஷ்ண தாபா-விடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவரை நேபாளத்தில் இருந்து கூட்டி வர தனிப்படை  விரைவில் செல்லவிருப்பதாகத் தகவல். அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில் மேல் விசாரணைக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கோயமுத்தூர் மண்டல ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் தொடர்ந்து இரண்டாம் நாளாக உதகையில் முகாமிட்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர்





கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நான்காவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சார்ந்த ஜம்சீர் அலி மற்றும் பத்தாவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜித்தின் ஜாய் ஆகியோரை விசாரிக்க தனி படைக் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும்,  காவலாளி கிருஷ்ணதாபாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் நேபாளம் செல்ல திட்டமிட்டுள்ளனர்.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி ஜெயலலிதாவின் காருக்கு பழைய டிரைவரான ஆத்தூர் பகுதி கனகராஜ் என்பவன் தலைமையில் 11 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் நுழைந்து பணியிலிருந்த நேபாளம் கூர்க்கா  ஓம்பகதூரை கொலை செய்த பின்னர், ஜெ.ஜெயலலிதாவும் அவரது தோழி வி.கே. சசிகலா நடராஜனும் தங்கும் அறைகளுக்குள் நுழைந்து அங்கிருந்த பல்வேறு பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் தொடர்புடைய கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தாரா அல்லது வேறு விதமாக நடந்த சம்பவமா எனத் தெரியாமல் இருக்கும் நிலையில்


முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட சயான் உட்பட 10 நபர்களைக்  கைது செய்தனர். இரண்டாண்டுகளுக்கு முன் டெல்லியில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் பத்தரிககைகளுக்கு அளித்த தகவலின் படி. அப்போது, முன்னாள் முதல்வராக இருந்த எடப்பாடி கே‌ பழனிச்சாமிக்கும் இந்த கொலை வழக்கில் தொடர்பு உள்ளதாக தெரிவித்ததையடுத்து, சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரை அப்போது இருந்த அரசு காவல்துறை மூலம் அவர்களைக் கைது செய்தனர்.


இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சயான் ஜாமீனில் வெளி வந்தான். இவ்வழக்கில் மேலும் பல புதிய உண்மை தகவல்களை அளிக்க வேண்டும் என சயான் காவல்துறையினரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி அவரிடம் மீண்டும் வாக்குமூலம் பெறப்பட்ட இவ்வழக்கு விசாரணை செப்டம்பர் 2 ஆம் தேதி ஊட்டி நீதிமன்றத்தில் நடந்த போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள், விசாரணை மேற்கொள்ள 4 வாரம் அவகாசம் அளிக்கக் கேட்டு கொண்டதனைத் தொடர்ந்து, நீதிபதி சஞ்சய்பாபா 4 வாரம் அவகாசம் அளித்து வழக்கை அக்டோபர் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


அதைத்தொடர்ந்து, இவ்வழக்கை விசாரிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், முக்கிய சாட்சிகளிடம் ஐஜி சுதாகர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் ஐஜி தலைமையில் காவல்துறையினர் உதகமண்டலம் பழைய எஸ்பி அலுவலகத்தில் விசாரணையை நடத்தினர். குற்றவாளிகளின் உறவினரிடமும், பார் உரிமையாளர் அணீஷ் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அரசு தரப்புச் சாட்சிகளாக 101 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது, முக்கிய சாட்சிகளை மீண்டும் அழைத்து விசாரித்து வரும் நிலையில், மேலும் பலரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில்


வழக்கு விசாரணை வேகமாக நடந்து வருகிற நிலையில், கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்குத் தனிப்படை காவல்துறையினர் விரைந்தனர். இதற்கிடையே பழைய எஸ்பி அலுவலகத்தில் ஐஜி சுதாகர், டிஐஜி முத்துசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.  கொடநாடு எஸ்டேட்டில் கொலை செய்யப்பட்ட காவலாளி ஓம்பகதூருடன், மற்றொரு காவலாளியான கிருஷ்ணதாபா கோடநாடு எஸ்டேட் மற்றொரு வாயில் கதவில் பணியாற்றி வந்தார். அப்போது கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக அவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின்னர் அவர் குடும்பத்துடன் நேபாளத்துக்குச் சென்று விட்டார். இதற்கிடையே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மறு விசாரணை தொடங்கியுள்ள நிலையில், கூர்க்கா கிருஷ்ணதாபாவிடம் மீண்டும் விசாரிக்க தனிப்படை தீவிரமாக உள்ளது.


ஊட்டி பழைய கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் 2 பிரிவாக பிரிந்து, அதில் ஒரு கும்பல் கூடலூர் வழியாக காரில் தப்பி சென்றது. அந்த கும்பலுக்கு கார் வழங்கிய உரிமையாளர் நவுசத், ஏஜெண்ட் நவுபல் ஆகியோர் அரசு தரப்பில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரிடமும் ஊட்டி பழைய எஸ்பி அலுவலகத்தில் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். உண்மை வெளிச்சத்துக்கு வரத் தேவை சயானோட confession statement. தான் அது வந்தால் இனி கடந்த ஆட்சியில் நடைபெற்ற கொடூரச் செயல்களுக்கு முடிவுகள் வரும்.கொடநாடு வழக்கின் மறு விசாரணையில் முக்கிய ஆவணம்  கிடைத்திருக்கிறது. வழக்கில் முக்கிய குற்றவாளியான சயானுக்கு கோயமுத்தூரைச் சேர்ந்த காண்ட்ராக்டர் சந்தோஷ்குமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பவர் கொடுத்ததற்கான ஆவணம் உள்ளது தெரியவந்திருக்கிறது அதிமுக ஆட்சியில் எடப்பாடி கே.பழனிச்சாமி, வேலுமணி, தங்கமணி ஆகிய மூவரின் துறைகளிலும் அதிக அளவில் டெண்டர்களை எடுத்தவர் தான்  சந்தோஷ்குமார். எடப்பாடி கே. பழனிச்சாமிக்கும் வேலுமணிக்கும் மிகவும் நெருக்கமானவராக நம்பிக்கையானவராகவும் இருந்திருக்கிறார் இந்த சந்தோஷ்குமார். அவர்தான் கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயானுக்கு 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பவர்  கொடுத்திருக்கிறார்.





பின் பவர் கேன்சல் செய்யப்பட்டிருக்கிறது. பணம் கொடுப்பதற்கு பதிலாக தான் இந்த பவர் கொடுக்கப்பட்டிருக்கலாம். பணம் செட்டில்மெண்ட் செய்த பிறகு அந்த பவர் கேன்சல் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

சயானுக்கு 20 கோடிக்கு பவர் கொடுத்தவர் சந்தோஷ் குமார் என்றால், சந்தோஷ்குமாரை பவர் கொடுக்கச் சொன்னது யார் என்று விசாரிக்கவும் முடிவெடுத்திருக்கிறார்கள். இதனால் சந்தோஷ்குமாரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறார்கள் எனத் தகவல்.   சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் நிர்மல் குமார் அளித்திருக்கும் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது. உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் அளித்துள்ள தீர்ப்புகளின்படி குற்றவியல் விசாரணை முறைச் சட்டத்தின்படி எந்த ஒரு கட்டத்திலும் காவல் துறை மீண்டும் புலன் விசாரணையை மேற்கொள்ளலாம். இதில் சந்தேகமோ, எதிர்ப்போ, தவறோ காண முடியாது. இதனால் வழக்கு காலதாமதம் ஆகும் என்று மனுதாரர் சார்பில் வாதம் வைக்கப்பட்டது. ஒரு குற்ற வழக்கின் உண்மையை வெளியில் கொண்டு வருவது தான் முக்கியம் என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. புலன் விசாரணையில் குறைபாடு இருப்பது தெரியவந்தால் அதை நிவர்த்தி செய்ய வேண்டும். மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். இதில் ஒரே ஒரு நிபந்தனை. விசாரணை நீதிமன்றத்தில் இதனைத் தெரிவித்துவிட்டு விசாரணை செய்ய வேண்டும். கொடநாடு வழக்கில் காவல் துறையினர், விசாரணை நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். நீதிமன்றமும் அதை பதிவு செய்துள்ளது.பெரும்பாலும் விசாரணை முடியும் நிலையில் இருந்தாலும் நேர்மையான விசாரணையின் அடிப்படையில்தான் நியாயமான தீர்ப்புகளை வழங்க முடியும். எனவே இந்த வழக்கில் மீண்டும் புலன் விசாரணை மேற்கொள்வது அவசியமாகிறது. உண்மையை வெளியில் கொண்டு வருவதுதான் முக்கியமாகும். நேர்மையான விசாரணைக்கும் விரைவான விசாரணைக்கும வித்தியாசம் உள்ளது என நீதியரசர் தனது தீர்ப்பில் குறிப்பட்டுள்ளார்கள்கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை குறறவியல் விசாரணை முறைச் சட்டத்தின்படி மேற்கொண்டு காவல் துறையினர் புலன் விசாரணை செய்வதற்கு தடை விதிக்க முடியாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்ட பிறகும் இந்த விசாரணைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்திருப்பது அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது மர்மத்தை வலுக்க வைக்கிறது.


முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பங்களாவில் நடந்த சம்பவங்களின் உண்மைத் தன்மையை ஊருக்குச் சொல்வதற்கு நாங்கள் தடையாக இருக்க மாட்டோம் என அதிமுக தலைமை அறிவித்தாக வேண்டும். என் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்த முடியாது. நான் அப்பழுக்கற்றவன். எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன் என எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்தாக வேண்டும். இவற்றைச் செய்யாமல் காவல்துறைக்கு உள்நோக்கம் கற்பிப்பது கண்டிக்கத்தக்கது. இதுவே குற்ற உடந்தையாகப் பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த