பிரதமர் அலுவலகம் பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் பேட்மிண்டன் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற பிரமோத் பகத்திற்கு பிரதமர் பாராட்டு
டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற பிரமோத் பகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“பிரமோத் பகத், ஒட்டுமொத்த நாட்டின் மனங்களை வென்றுள்ளார். தலைசிறந்த வீரரான அவரது வெற்றி, லட்சக் கணக்கானோருக்கு எழுச்சியூட்டும். போற்றத்தக்க நெகிழ்தன்மை மற்றும் அர்ப்பணிப்பை அவர் வெளிப்படுத்தினார். பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.” எனவும் பிரதமர் அலுவலகம்
பாராலிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிங்ராஜ் அதானாவுக்கு பிரதமர் பாராட்டு
டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிங்ராஜ் அதானாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,
“தலைசிறந்த சிங்ராஜ் அதானா மீண்டும் நிகழ்த்தி காட்டியுள்ளார். மற்றொரு பதக்கத்தை, இம்முறை கலப்பு 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் எஸ்ஹெச்1 பிரிவில் அவர் வென்றுள்ளார். அவரது இந்த சாதனையை இந்தியா கொண்டாடுகிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரதமர் அலுவலகம்
பாராலிம்பிக் போட்டிகளில் பாட்மிண்டனில் வெண்கலம் வென்றதற்காக மனோஜ் சர்காருக்கு பிரதமர் பாராட்டு
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் பாட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக மனோஜ் சர்காருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
“மனோஜ் சர்காரின் அற்புதமான செயல்திறனால் மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். பாட்மிண்டனில் மதிப்புமிக்க வெண்கலப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு பாராட்டுகள். வரும் காலங்களில் சிறந்து விளங்க மனப்பூர்வ வாழ்த்துகள்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்