கிருஷ்ணா இணைப்புக் கால்வாயில் குளித்த ஐடி நிறுவனப் பணியாளர் மூழ்கி மரணம்.
சென்னை மதுரவாயல் சேர்ந்த சஞ்சீவ் (வயது 26). ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறார். வெள்ளி மாலை அவரது நண்பர்கள் வானகரம் ராஜ்குமார் (வயது 26), பட்டாபிராம் சோரஞ்செரி சேர்ந்த ராஜ்குமார் (வயது 27) ஆகியோருடன் தன்னுடைய காரில் திருவள்ளூர் நோக்கி சென்றுள்ளார். அரண்வாயல் பகுதியில் பூண்டியிலிருந்து செம்பரம்பாக்கம் செல்லும் இணைப்புக் கால்வாயில் குளித்துள்ளனர்.
இதில் சஞ்சீவ் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இத்தகவல் உடன் அங்கிருந்தவர்கள் மூலம் செவ்வாப்பேட்டை காவல்நிலையம் மற்றும் திருவூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததும்
தகவலறிந்து விரைந்து வந்து கால்வாயில் தண்ணீர் நிறுத்தி விட்டு தேடிய நிலையில் சனிக்கிழமை இரவு 9:30 மணியளவில் சஞ்சீவ் உடல் மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த செவ்வாப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்