புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலா முத்து தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு.
செப்டம்பர் 18 ஆம் தேதி- பெரியார் ஈ.வே.ரா வின் பிறந்தநாளை சமூக நீதி நாளாகக் கொண்டாட தமிழ்நாடு முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலா முத்து தலைமையில் சமூகநீதி உறுதி மொழியை வாசித்து ஏற்றார்கள்.
தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதவல்லி, வட்டார வளர்ச்சி ஊராட்சிகள் அலுவலர்
இரவி, ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்புத் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளர்களும் கலந்துகொண்டு உறுதிமொழியை ஏற்றனர்.
கருத்துகள்