ஓன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துடன் கூடிய உணவுகள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் பூர்ணகும்ப மரியாதையுடன் மாணவிகளை வரவேற்ற ஆசிரியைகள். நீண்ட இடைவெளிக்கு பிறகு திறக்கப்படும் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்படும் கொரோனா விதிமுறைகள் சம்பந்தமான அமைச்சர் ஆய்வு லயோலா கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டது.தொடர்ந்து அம்மாணவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாமும் தொடங்கிவைக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் இன்று முதல் அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாமென-போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல். தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் நான்கு மாதங்களுக்குப் பின் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை திறக்கப்பட்டது. கல்லூரிகளில் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தமிழகத்தில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர மற்றவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு, மாணவர்கள் உற்சாகமாக வந்தனர்.
பள்ளி, கல்லூரி வளாகங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டன. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டனர். மாணவர்களின் வசதிக்காக அரசு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. சீருடையுடன் வரும் மாணவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
புதுச்சேரியிலும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் நிபந்தனைகள் யாரிடமும் மதிய உணவு தின் பண்டங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.. கைக்குட்டை இரண்டு, முகவசம், துண்டு கொடுத்து அனுப்புங்கள்.
எந்த பொருட்களையும் யாருக்கும் கொடுக்கவும் வேண்டாம், யாரிடமும் பெறவும் வேண்டாம்.
படிக்கட்டுகளில் ஏறும் பொழுதும், கழிவறைகளுக்கு செல்லும் போதும் இடைவெளி விட்டு செல்ல அறிவுறுத்துங்கள்.
பள்ளி சென்று வந்ததும் குளித்து விட்டு வீட்டுக்குள் செல்ல சொல்லுங்கள்.
உடல் சோர்வு, இருமல், இது போன்று வேறு தொந்தரவு இருந்தால் பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.
சுடுதண்ணீர் கொடுத்து அனுப்புங்கள்.
கருத்துகள்