பிரதமர் அலுவலகம் பண்டித தீன்தயாள் உபாத்தியாயாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை
பண்டித தீன்தயாள் உபாத்தியாயாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,
“ஒருங்கிணைந்த மனித தத்துவத்தின் முன்னோடியான பண்டித தீன்தயாள் உபாத்தியாயா அவர்களின் பிறந்தநாள் அன்று அன்னாருக்கு எனது மரியாதை. தேசிய கட்டமைப்பில் தமது வாழ்நாளை அவர் அர்ப்பணித்தார். அவரது எண்ணங்கள், நாட்டு மக்களுக்கு எப்போதும் எழுச்சியூட்டும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்