முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியன் ஆயில் பத்து மாநிலங்களின் 17 சிறைச்சாலைகளில் விளையாட்டு பயிற்சி நிகழ்வு

இந்தியன்ஆயில் நிறுவனம், பரிவர்த்தன் முன்முயற்சியின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளது. இந்தியாவெங்கிலும் உள்ள பத்து மாநிலங்களின் 17 சிறைச்சாலைகளில் விளையாட்டு பயிற்சி நிகழ்வு


1000 க்கு மேற்பட்ட சிறைவாசிளுக்கு விளையாட்டு பயிற்சி

.இந்தியன்ஆயில் நிறுவனம் சிறையிலிருந்து கௌரவம் பெறச்  செய்கிற முன்முயற்சி நடவடிக்கையான பரிவர்த்தன் திட்டத்தின் வாயிலாக பத்து மாநிலங்களின் 17 சிறைச்சாலைகளில் உள்ள சிறைவாசிளுக்கு குறிப்பிட்ட விளையாட்டுகளில் பயிற்சி அளிக்க வழிவகை செய்துள்ளது.

புதுதில்லி திகார் சிறைச்சாலையில், மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினக் கொண்டாட்டத்தின் பகுதியாக , இந்த முன்முயற்சி நிகழ்வு, இந்தியன்ஆயில் தலைவர் திரு.ஶ்ரீகாந்த் மாதவ் வைத்யா அவர்களால் நேரடியாக தொடங்கி வைக்கப்பட்டது. அதே வேளையில், இந்த பயிற்சி முகாம் மேலும் எட்டு இடங்களில் இணைய வழியில் தொடங்கி வைக்கப்பட்டது.

பரிவர்த்தன் முன்முயற்சியானது, மிகச்சிறந்த வாழ்வைப் பெற்றிடவும் அவர்களுடைய தன்னம்பிக்கை மற்றும் தன்மானம் மேம்படவும் அதிக அளவில் உறுதுணை புரிகிறது . சிறைவாசத்தால் ஏற்படுகிற சிக்கலை எதிர்கொண்டு, விடுதலைக்குப் பின் சமூகத்தில் சுமூகமாக மறுவாழ்வு வாழ்ந்திட இந்த திட்டம் சிறைவாசிகளுக்கு கைகொடுக்கிறது.


இரண்டாம் கட்ட நிகழ்வில் , இந்தியன்ஆயில் நிறுவனமானது ,இந்தியாவெங்கிலும் அந்தந்த மாநில காவல்துறையின் சிறைத்துறையினருடன் கலந்து பேசி, கூடைப்பந்து, பேட்மின்ட்டன், கைப்பந்து, சதுரங்கம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், கோ-கோ, கேரம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சிகளை வழங்கிடும். இப்படிப்பட்ட விளையாட்டுப் பயிற்சியானது, சிறைவாசிகள்,  உடல் நலத்தையும் மனநலனையும் குறிப்பாக இந்த பெருந்தொற்று காலத்தில் நன்றாகப் பேணிப் பாதுகாக்க பெரிதும் உதவும். நான்கு வாரங்கள் மேற்கொள்ளப்படும் இந்த பயிற்சி நிகழ்வில், மனமகிழ் நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளூர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக, பல்வேறு சிறைச்சாலைகளைச் சார்ந்த 1000-க்கு மேற்பட்ட சிறைக்கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த நிகழ்வுக்கான உபகரணங்கள் மற்றும் விளையாட்டுக் கருவிகளை இந்தியன்ஆயில் வழங்கும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு வைத்யா அவர்கள் கூறியதாவது - ‘சமூகத்தால் புறக்கணிக்கப்ட்ட சிறைக்கைதிகளுக்கு தெம்பூட்டும் வகையில் பரிவர்த்தன் முன்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. விளையாட்டு போன்ற விறுவிறுப்பான செயல்களில் அவர்களை ஈடுபடுத்துவதன் மூலமாக அவர்களுக்கு மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் கிட்டும் என்பதில் ஐயமில்லை'. அவர் மேலும் பேசுகையில் நாடெங்கிலுமுள்ள சிறைத்துறை அதிகாரிகளுக்கு இந்த செயல்திட்டத்தை நடைதுறைப்படுத்த ஒத்துழைப்பு நல்கியதற்காக தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் அவர் கூறியதாவது - ‘இந்த உன்னத திட்டம், சிறைவாசிகள், தங்கள் உடல்நலத்தை மேம்படுத்திக் கொள்ளவும் கவலை, பதற்றம், வருத்தம், சுயபச்சாதாபம் உள்ளிட்ட உளவியல் சார்ந்த சிக்கல்களை நன்றாக எதிர்கொண்டு வெற்றி பெறவும் உறுதுணை புரியும்.

'பரிவர்த்தன் சிறைவாசிகளின் மனங்களில், சுய கௌரவம், தன்மானம், கம்பீரம், சிநேகம் ஆகிய பண்புகளை விதைத்து, அவர்கள் மறுவாழ்வில் தாழ்வு மனப்பான்மை ஏதுமின்றி இயங்க வைக்கிறது.' என்று தெரிவித்தார்.

பரிவர்த்தன் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வில் பங்கேற்கும் சிறைகளாவன - தில்லி திகார் மத்திய சிறை, புனே யெரவாடா மத்திய சிறை, கோலாப்பூர் மத்திய சிறை, பாட்டியாலா மத்திய சிறை, லாலா லஜபத் ராய் மாவட்டம், தர்மசாலா திறந்தவெளி சிறை, இந்தூர் மத்திய சிறை, போபால் மத்திய சிறை, அகமதாபாத் மத்திய சிறை, வதோதரா,ஆதர்ஷ் கார்கர், லக்னோ, வாரணாசி மத்திய சிறை, பிரயாக்ராஜ் நாயினி மத்திய சிறை, கவுஹாத்தி மத்திய சிறை, திப்ருகர் மத்திய சிறை, திமாபூர் மத்திய சிறை. இந்த நிகழ்வில் சர்வதேச அளவிலான விளையாட்டு வீர ர்கள், இந்தியன்ஆயில் உடன் தோள் கொடுக்க தயாராக உள்ளார்கள். பயிற்சி அளிக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளில் பின்வரும் ஆளுமைகள் அடங்குவார்கள் - மஞ்சுஷா கன்வர் (முன்னாள் தேசிய சாம்பியன்), அபின் ஷியாம் குப்தா (அர்ஜுனா விருது பெற்றவர்), பேட்மின்ட்டன், மகளிர் கிராண்ட்மாஸ்டர்கள் ஈஷா கரவடே, சௌம்யா ஸ்வாமிநாதன் & கிராண்ட் மாஸ்டர் எஸ் எஸ் கங்குலி, டென்னிஸ் ஆட்டக்காரர் ருஷ்மி சக்ரவர்த்தி (தேசிய சாம்பியன்) டிடி அர்ஜுனா விருது பெற்றவரான சௌம்யாதீப் மற்றும் புகழ்பெற்ற கேரம் ஆட்டக்காரர்கள் - யோகேஷ் பர்தேசி, முகம்மது குப்ரான், காஜல் குமாரி, ரமேஷ் பாபு.

முதல் கட்டத்தின் போது, பின்வரும் சிறைச்சாலைகளில் பரிவர்த்தன் செயல்படுத்தப்பட்டது - ஐதராபாத் சாஞ்சாலக்குடா மத்திய சிறை, சென்னை புழல் மத்திய சிறை, திருவனந்தபுரம் பூஜப்புரா மத்திய சிறை, புவனேஸ்வர் சிறப்பு சிறைச்சாலை, கட்டாக் வட்ட சிறை. இந்த அமைவிடங்களில் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. வெற்றிகரமாக பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தற்போதைய நிலையில், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 30 விற்பனை நிலையங்களில், தங்கள் சிறைக்காலத்தை முடித்து வெளியே வந்த சிறைவாசிகளை வாடிக்கையாளர் உதவியாளராக இந்தியன்ஆயில் நிறுவனம் பணிக்கு அமர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த