முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாக்பூரில் விஜய தசமி தசரா விழாவில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் தலைவர் 'சாஸ்திர பூஜை' செய்து உரையாற்றினார்

நாக்பூரில் விஜய தசமி  தசரா விழாவையொட்டி ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் வெள்ளிக்கிழமை 'சாஸ்திர பூஜை' செய்தார்.


ஆர்எஸ்எஸ் தலைமையகம் நாக்பூர்  நகரின் மஹால் பகுதியில் அமைந்துள்ளது. ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேசவ பலராம் ஹெட்கேவார் மற்றும் எம்.எஸ் கோல்வால்கரின் சமாதி ஸ்தலத்திலும் பகவத் தனது மரியாதை சொலுத்தினார். தவிர, அவர் ஸ்வயம் சேவகர்களின் பயிற்சி முகாமில் பங்கேற்றார். பின்னர் ஸ்வயம் சேவகர்களுக்கு மத்தியில் உரையாற்றிய பகவத், "பிரிவை விரிவாக்கும் ஒரு கலாச்சாரத்தை நாங்கள் விரும்பவில்லை, ஆனால் தேசத்தை ஒன்றிணைத்து அன்பை ஊக்குவிக்கும் கலாச்சாரம் எங்களுக்கு வேண்டும்" என்றார்.


"எனவே, பிறந்தநாள் விழாக்கள், பண்டிகைகள் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் ஒன்றாகக் கொண்டாடப்பட வேண்டும். 'ஸ்வதீஹந்தாவில் இருந்து சுதந்திரம்' வரையிலான எங்கள் பயணம் இன்னும் நிறைவடையவில்லை. இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் மரியாதைக்குரிய நிலைக்கு உயர்வு தீங்கு விளைவிக்கும் கூறுகள் உலகில் உள்ளன. அவர்களின் நலன்கள்."




அதிகரித்து வரும் மக்கள் தொகை குறித்த கவலையை வெளிப்படுத்தியவர், நாட்டின் மக்கள் தொகைக் கொள்கை மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுத்தார். "நாங்கள் மக்கள் தொகை கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நம்முடையது இளைஞர்களின் நாடு ... 56-57 சதவிகிதம் இளைஞர்கள் முதுமை அடைவார்கள். எத்தனை பேருக்கு உணவளிக்க முடியும்? அடுத்த 50 ஆண்டுகளைப் பற்றி மக்கள் தொகை கொள்கை சிந்திக்கப்பட வேண்டும், அது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும், "என்று பகவத் தனது வருடாந்திர விஜயதசமி உரையில் கூறினார்." கொள்கை சமமாக செயல்படுத்தப்பட வேண்டும், மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு ஒரு பிரச்சனையாகி விட்டது "என்றார். அடுத்த 50 ஆண்டுகளுக்குப் இந்தக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும். நாக்பூரில் நடந்த ஆர்எஸ்எஸ் தசரா நிகழ்ச்சியில் மோகன் பகவத் மேலும் கூறுகையில்,




மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த ஒரு கொள்கை இருக்க வேண்டும், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) 1925 ஆம் ஆண்டில் இந்த நாளில் நிறுவப்பட்டதால், சர்ச்சங்க்சல்களுக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. நாக்பூரில் விஜய தசமி அல்லது தசரா விழாவையொட்டி ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் வெள்ளிக்கிழமை 'சாஸ்திர பூஜை' செய்தவர்  ஸ்வயம்சேவகர்களின் பயிற்சி முகாமில் பங்கேற்றார்.  ஆர் எஸ் எஸ் குறித்து ஒரு பார்வை :ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம்  இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்துக்கள் அமைப்பு அல்லது ஆர் எஸ் எஸ் (RSS, தேசிய தொண்டர் அணி) எனப்படும் 1925 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி விஜயதாசமி நாளில் கேசவ பலராம் ஹெட்கேவரால் நிறுவப்பட்டது அவர் நிறுவனத் தலைவராவார்.

இராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத் உறுப்பினர்களின் பயிற்சி வகுப்பு சங்கமானது ஆரம்பிக்கப்பட்ட பத்து வருடங்களுக்குள் வடஇந்தியாவில் பெற்ற செல்வாக்கு மிக அதிகம். இதற்கு மிக முக்கிய காரணம்னு, சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கி "இந்து" என்ற அடையாளத்துடன் ஒன்று சேர்வோம் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.



ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்தியாவில் மட்டுமில்லது வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களால் இயங்குகின்றது. தென்னாப்பிரிக்காவில் தெற்காசிய நண்பர்கள் என்ற பெயரிலும், மியான்மரில் சனாதன் தர்ம சுயம்சேவாக் சங்கம் (எஸ்.டி.எஸ்.எஸ்), மொரிசியசில் மொரிசியஸ் சுயம்சேவாக் சங்கம் (எம்.எஸ்.எஸ்), மற்றும் ஐக்கிய அமெரிக்க நாட்டில் இந்து சுயம்சேவாக் சங்கம் (HSS) என்ற பெயரில் இயங்குகின்றது. 


இதன் கொள்கை கலாச்சார தேசியவாதம் எனப்படுகிற முழு மனிதப்பற்றைக் கொண்டு உயிரான, தனித்துவம் மற்றும் நன்னெறிகளைக் கொண்ட பாரம்பரிய இந்தியாவிற்கு புத்துயிர் அளிப்பது தேசத்துக்கு சேவை செய்வதை அன்னை இந்தியாவுக்கு (பாரத மாதா) சேவை செய்வதாகக் கொண்டு இந்தியாவை தன் தாய் நாடாக நினைத்து அதை பாதுகாப்பது.


ஆர்.எஸ்.எஸ் நேரடியாக தேர்தலில் பங்கு கொள்வதில்லை. அதன் கொள்கையை ஒத்திருக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிக்கும். அதன்படி ஆதரித்த கட்சிதான் பாரதீய ஜனதா கட்சி. ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவார் அமைப்புடன் அதிகத் தொடர்புடையது.


ஆர் எஸ் எஸ் அமைப்பில் உறுப்பினராகச் சேர எவ்வித நடைமுறையும் இல்லை. உறுப்பினர் கட்டணம், அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. தன்னார்வலர்கள் அருகில் உள்ள ஆர் எஸ் எஸ் கிளைக்குச் (ஷாகா) (அடிப்படை அலகு) சென்று தானாக உறுப்பினராக இணைந்துக் கொள்ள வேண்டியது. இவ்வமைப்பில் உறுப்பினர்களின் விவரங்கள் குறித்துக் கொள்ளப்படுவதில்லை. ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் பயிற்சியின் போது வெள்ளை நிற சட்டை, காக்கி நிற அரைக்கால் டவுசர் அணிந்து இருப்பர். தற்போது காக்கி நிற அரைக்கால் டவுசருக்கு பதிலாக பழுப்பு நிற முழுக்கால் டவுசர் அணிய தீர்மானித்த நிலை.

தேசிய அளவில் சர்சங்கசாலக் என்ற பெயரில் தேசியத் தலைவரும் மற்றும் பொதுச் செயலாளர் தலைமையில் அமைப்பு நிர்வாகிக்கப்படுகிறது. மாநில, மாவட்ட மற்றும் கிளைகள் அளவில் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர் தலைமையில் அமைப்பு செயல்படுகிறது.

குரு பூர்ணிமா அன்று மட்டும் உறுப்பினர்கள் தரும் குரு காணிக்கையை மட்டும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்தியா முழுவதும் இவ்வமைப்பில் 25 இலட்சம் முதல் 60 இலட்சம் உறுப்பினர்களும், 51,688 கிளைகளும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவதில்லை. தற்போதைய தலைவர் எதிர்கால தலைவரைத் தேர்ந்தெடுப்பார். பின்னர் அமைப்பின் பொதுக்குழு புதிய தலைவருக்கு அங்கீகாரம் அளிக்கும். ஆர்எஸ்எஸ் அமைப்பில் தலைவர் பதவிக்கு பிறகு அதிக அதிகாரம் கொண்ட பொதுச்செயலாளர் பதவி கருதப்படுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும். பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். மேலும் துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட 20 பேர் கொண்ட நிர்வாகக்குழுவினர்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவர். இப்பொதுக்குழுக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி சங்கப் பரிவார் எனப்படும் அதன் துணை அமைப்புகளின் நிர்வாகிகளும் இப்பொதுக்குழு கூட்டத்தில் பங்கெடுப்பர் 


தேசியத் தலைவர்கள் (Sarsanghchalaks) இராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தேசியத் தலைவராக இருப்பவரின் முடிவின்படி, வருங்காலத் தலைவர் (Sarsanghchalak) தேர்ந்தெடுக்கப்படுகிறார். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தேசியத் தலைவர்கள் (Sarsanghchalak) பட்டியல்;

கேசவ பலராம் ஹெட்கேவர் (1925 முதல் 1930 வரை) மற்றும் (1931 முதல் 1940 வரை)    இலட்சுமன் வாமன் பரஞ்பே (1930 முதல் 1931வரை)                                                      எம். எஸ். கோல்வால்கர் (1940 முதல் 1973 வரை)                                                        மதுகர் தத்தாத்திரேய தேவ்ரஸ் (1973 முதல் 1993 வரை)                                          ராஜேந்திர சிங் (1993 முதல் 2000 வரை)    கே. எஸ். சுதர்சன் (2000 முதல் 2009 வரை) மோகன் பாகவத் (21 மார்ச் 2009 முதல் - தற்போது வரை)

பொதுச் செயலாளர்கள் (சர்காரியவா) ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் அகில இந்திய பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நாக்பூரில் கூடி, பொதுச் செயலாளர் எனும் சர்காரியவா பதவிக்கு ஒருவரைத் தேர்வு செய்கின்றனர்.

மோகன் பாகவத் - 2000 முதல் 2009 வரை சுரேஷ் ஜோஷி - 2009 முதல் 2021 வரை தத்தாத்ரேயா ஹோசாபலே - 2021  ஆம் ஆண்டு முதல் தற்போது வரை.

சங்கப் பரிவாரின் உறுப்பு அமைப்புகளான ராஷ்டிரிய சேவிகா சமிதி, பாரதிய ஜனதா கட்சி, விசுவ இந்து பரிஷத், துர்கா வாகினி, பஜ்ரங்தள், ஹிந்து முன்னணி, அகில பாரத வித்தியார்த்தி பரிசத், விவேகானந்த கேந்திரம், இந்து இளைஞர் சேனை, இந்து மக்கள் கட்சி, பாரதிய மஸ்தூர் சங்கம், ராம ஜென்மபூமி அறக்கட்டளை, பாலகோகுலம், சுதேசி விழிப்புணர்வு இயக்கம், சேவா பாரதி, பாரதிய கிசான் சங்கம், வனவாசி கல்யாண் ஆசிரமம் மற்றும் பாரதிய ஆய்வு மையம். விவேகானந்த கேந்திரம் சிவசேனா ஹனுமன் சேனா சுயம்சேவக் சங்கத்தின் ஆதரவுடனும், வழிகாட்டுதலுடனும் இயங்குகின்றது

ஆர் எஸ் எஸ் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 1948  ஆம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, அவசர நிலை பிரகடனம்  (1975 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை) அமலிலிருந்த போதும் மற்றும் 1992 ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும் தடைசெய்யப்பட்டிருக்கிறது.

1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடைசெய்து 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி அரசு அறிக்கை வெளியானது.இதில், மகாத்மா காந்திஜியின் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ்-தான் காரணமென்று கூறப்படவில்லை.

ஆர்.எஸ்.எஸ். இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்களுடைய நோக்கம் என்று கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அந்த இயக்கத்தவர் அப்படி நடந்துகொள்ளவில்லை. விரும்பத்தகாத, அதேசமயம் பயங்கரமான சில நடவடிக்கைகளில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டுள்ளனர். பொதுச் சொத்துக்களுக்குத் தீயிடல், சேதப்படுத்துதல், போன்ற சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவருகிறதாலும். அவர்களுடைய செயல்பாடுகள் இரகசியமாகவே உள்ளனவென்று

இந்திய அரசு, 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம்  தேதி அரசு அறிக்கை என்று அரசு வெளியிட்ட தடை நடவடிக்கையில் காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ். தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற அரசின் அறிவுரையை ஏற்காமலேயே, தங்கள் மீதான தடையை அரசு விலக்க வேண்டுமென்று கோல்வால்கர் விரும்புகிறார் என்று சர்தார் வல்லபாய் படேல் தலைமையிலான உள்துறை அமைச்சகம் 1948  ஆம் ஆண்டு நவம்பர் மாதம்14 ஆம் தேதியில் அறிக்கை வெளியிட்டது . 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதியில் கோல்வால்கருக்கே ஒரு கடிதம் எழுதினார். இந்து சமுதாயத்துக்காக ஆர்.எஸ்.எஸ். ஆற்றிவரும் தொண்டுகளைப் பாராட்டினாலும் அதன் ஆட்சேபிக்கத்தக்க செயல்பாடுகளைப் பட்டியலிட்டார். இதற்குப் பிறகு , ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதான தடையை விலக்க சில முக்கிய நிபந்தனைகளை படேல் விதித்தார். "இந்திய தேசியக் கொடியை மதிப்போம், வெளிப்படையாகச் செயல்படுவோம், அமைதியான வழிமுறைகளிலேயே ஈடுபடுவோம், அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி நிற்போம்" என்பது அந்த நிபந்தனைகளில் சில. ஆர்.எஸ்.எஸ். கலாச்சாரப் பணியில் தான் ஈடுபடும்.அரசியலில் ஈடுபடாதென்று ஆர்.எஸ்.எஸ். தனது அமைப்பு விதியிலேயே வரையறுத்து 1949 ஆம் ஆண்டில் சர்தார் வல்லபாய் படேலிடம் அளித்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு விதியின் 4 (பி) பிரிவு இதைத் தெரிவிக்கிறது. இதன் பிறகே 1949 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதியில் ஆர்.எஸ்.எஸ். மீதான தடை விலக்கப்பட்டது..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த