முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நவராத்திரி தசரா விழா நாடுமுழுவதும் கோலாகலம்

நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின்


ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.




நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்.



இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள் நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத்தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூசை தொடங்கவேண்டும்.நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு. இவ்விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.சக்தியின் தலை முடி விழுந்த இடமாக அதிசயங்கள் பல நிகழ்த்தும் மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயம்




அரண்மனையும் அழகும் நிறைந்த மைசூர் நகரத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் சாமுண்டி மலையில் அமைந்துள்ள ஆலயம் அம்பிகை துர்கையின் அம்சம். மிகவும் சக்திவாய்ந்த அம்பிகை சாமுண்டீஸ்வரி என அழைக்கும். நூற்றாண்டு பல கடந்த நகரத்தை ஆண்டு வந்த மைசூர் அரசர்களுக்குதா தெய்வமாக விளங்கியது பற்றி குறிப்புகள் வரலாற்றிலுண்டு.

18 மஹா சக்தி பீடங்களுள் ஒன்றான ஸ்தலம். இந்தக் கோவிலை க்ரவுஞ்ச பீடம் என்றும் குறிப்பிடுவர்.  புராண காலத்தில்  க்ரவுஞ்ச புரி என அழைக்கப்பட்டதையும்,  சக்தியின் தலை முடி  விழுந்த இடம் என புராணம் கூறுகிறது.



 12 ஆம் நூற்றாண்டில் ஹொய்சால அரசர்களால் கட்டப்பட்டிருக்கலாமெனவும் கோபுரம் 17 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் கட்டப்படிருக்கலாம் எனவும். 1659 ஆம் ஆண்டு 3000 அடி கொண்ட மலைக்கு ஆயிரம் படிகட்டுகள் வரை உருவாக்கப்பட்ட நிகழ்வு. கோவிலின் முக்கிய அம்சம் வீற்றிருக்கும் நந்தி. இந்த மலையின் ஏற்றத்தின் போது 700 ஆவது படிகட்டில், சிறிய சிவன் கோவிலுடன் கூடிய பிரமான்ட நந்தி சிலை உள்ளது.  15 அடி உயரமும், 24 அடி நீளமும், இதன் கழுத்தை சுற்றிய பெரிய மணிகளும் கொண்டு மிக பிரமாண்டமாக அமைந்துள்ளது.



வெள்ளிக்கிழமை  விஷேச நாளாகும். இங்கு நிகழும் நவராத்திரி தசரா விழா உலக பிரசித்தி பெற்ற  நிகழ்வின் போது இந்த கோவிலிலும், நகரத்திலும் இலட்சக்கணக்கான மக்கள்  வழிபடுகின்றனர் மற்றொரு சிறப்பம்சம்,சாமுண்டி ஜெயந்தி விழா.

நவராத்திரி விழாவின் போது, அம்பிகை ஒன்பது விதமாக அலங்கரிக்கப்படுவார். எழாம் நாளில்  கால ஆரத்தி நிகழும். அப்போது மைசூர் மஹாராஜாவல் கொடையளிக்கப்பட்ட நகைகள் மாவட்ட பொக்கிஷக் கிடங்கிலிருந்து கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு அம்பாளுக்கு அலங்காரம் நிகழும்.


இந்த மலையின் அடிவாரத்தில் ஜுவாலமுகி திரிபுரசுந்தரி கோவில் உண்டு. இந்த அம்மன் சாமுண்டியின் சகோதரி என்றும், ரக்தபீஜ என்ற அரக்கனை வதம் செய்யும் போரில் சாமுண்டி தேவிக்கு துணை நின்ற தேவியார் தற்போது விழா மைசூர் நகரத்தில் கலைகட்டியுள்ளது .                                பிரதமர் அலுவலகம்காத்யாயினி அம்மனைப் பிரதமர் வணங்கினார்.

நவராத்திரியின் போது நமது சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் கருணையை மேம்படுத்துவதற்காக  பக்தர்களுக்கு காத்யாயினி அம்மன் ஆசீர்வாதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வேண்டியுள்ளார்.

இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “காத்யாயினியை நான் வணங்குகிறேன். அம்மனின் ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்கட்டும். அம்மனால் நம் சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் கருணை  மேலும் அதிகரிக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

நவராத்திரியின் போது மா குஷ்மாந்தா மற்றும் மா ஸ்கந்தமாதாவுக்கு பிரதமரின் பிரார்த்தனைகள்

நவராத்திரியின் போது பக்தர்களுக்கு மா குஷ்மாந்தா மற்றும் மா ஸ்கந்தமாதா ஆகியோரின் ஆசீர்வாதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாடினார் மற்றும் தேவதைகளின் பிரார்த்தனையை (ஸ்துதி) பகிர்ந்துகொண்டார்.

‘நவராத்திரியின் போது ஸ்கந்தமாதா வழிபடப்படுகிறார். மா ஸ்கந்தமாதா தனது பக்தர்களுக்கு அனைத்து கஷ்டங்களையும் சமாளிக்க வலிமை தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்’’சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் அரண்மனையில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவிலில்  பரம்பரை அறங்காவலர் மேதகு இராணி D.S.K மதுராந்தகி நாச்சியார் நிர்வாகத்துக்கு உட்பட்ட ஆலயத்தில் தசரா கலை இலக்கியப் பெருவிழா. ஒன்பது நாட்களும் நடக்கிறது. பத்தாம் தேதி நடைபெற்ற அலங்காரம் : ஸ்ரீ அன்னபூரணி மண்டகப்படிதார்கள் :  தேவர் தெய்வீக பேரவையின் சார்பில் செய்யப்பட்டது   சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் அமைந்துள்ள ."பேசும் தெய்வம்" ஸ்ரீ சௌந்தர நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ கைலாச நாதர் கோவில் அறங்காவலர்கள் வெங்கடாசலம் செட்டியார், காளைராஜா செட்டியார், தலைமையில், நவராத்திரி விழா தொடக்கி தினமும் நடைபெற்றது. இரண்டாம் நாள் நவராத்திரி விழா மண்டகப்படி ,உபயதாரர்  கானாடுகாத்தான்  சித.சரவணன் குடும்பத்தார் நிகழ்த்தும் சிறப்பு வாய்ந்த அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது கொத்தரி கீர்திகா மற்றும் நேமத்தான்பட்டி எம்.எஸ். மோகனமீனாட்சி ஆகியோர் இணைந்து இசையிலா வாய்ப்பாட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக அருணாச்சலம் செட்டியார்  உபயதாரர் வழிபாடு நடந்தது. பேராசிரியர்.கவிஞர் பாகை  இரா.கண்ணதாசன் நடுவராக பங்கேற்ற வழக்காடு மன்றத்தில்.

 "அகத்திய சிவ ஸ்ரீ" ரமணி ஐயருடன் மதுரை இராமநாதன்  வழக்கு தொடுத்து மறுத்தனர். "புராணங்கள் கற்பனையே என்பது குற்றம்" என்ற தலைப்பில் நடைபெற்றது .பின் தெய்வத் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது. நான்காம்  நாள்  ஞானப்பால் ஊட்டும் அலங்காரத்துடன். கொலு வழிபாடு நடைபெற்றது. முனாதாக இல்லம் நிறைக்கும் இலக்குமி அருள்" தலைப்பில் பள்ளத்தூர் வித்யா லெட்சுமி  ஆன்மீக சொற்பொழிவாற்றினார். ஐந்தாம் நாள் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு தொடங்கியது கானாடுகாத்தான் "சிவத் தொண்டர்"  அண்ணாத்துரை அழகு ராமலிங்கம்,மற்றும் பெரியகோவில் இளமுருகனுக்கு வெங்கடா சலம் செட்டியார், பெரிய கோவில் சுபிரமணியனுக்கு பழையூர் சுப்பிரமணியன், பழையூர் ரவி அவர்களுக்கு ரமணி ஐயர், ஆகியோர் கதர் ஆடை அணிவித்து கௌரவித்தனர்.தொடர்ந்து கோவில் அர்ச்சகர் "அகத்திய சிவ ஸ்ரீ"ரமணி ஐயர் கொலு வழிபாடு நடத்தி கொலு விளக்கம் அளித்து சிறப்புற, நேர்த்தியாக, தீப ஆராதனை நடத்தினார்.

நாட்டார், நகரத்தார். உள்ளூர் பக்தர்கள் முன்னிலையில் கொலு வழிபாடு, நடைபெற்றது.   நவராத்திரி விழா ஒருங்கிணைப்பு  பணியில் பத்திரிகையாளர்  நேமத்தான்பட்டி ஸ்ரீனிவாசன் சிறப்புடன் பங்களிப்பு  செய்திருந்தார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த