முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை அறிவிப்பும்,பயணிகள் இரயில் இயக்கமும்

 மதுரையிலிருந்து புறப்படும் பாண்டியன், மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் சிறப்பு இரயில்களின் நேரத்தில் மாற்றம். தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை அமல்படுத்தப்படும் நிலையில்


தெற்கு ரயில்வேயில் புதிய காலஅட்டவணை  அறிவிப்பு 

மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண் 02636) மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு பதிலாக காலை 7:05 மணிக்கும், திண்டுக்கல்லிலிருந்து காலை 8 மணிக்குப் பதிலாக காலை 8:05 மணிக்கும் புறப்பட்டு சென்னை சென்றடையும்.

சென்னை-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (எண் 02637) திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையே அதிகாலை 4:05, 4:18, 4:30 மணிக்குப் பதிலாக அதிகாலை 3:55, 4: 07, 4: 17 மணிக்குப் புறப்படும்.


பைசாபாத்-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (எண் 06794) மதுரை ரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவு 1: 30 மணிக்குப் பதிலாக நள்ளிரவு 12:40 மணிக்குப் புறப்படும்.

மதுரை-புனலூர் சிறப்பு ரயில் எண் 06729 மதுரையிலிருந்து இரவு 11: 30 மணிக்கு பதிலாக இரவு 11:25 மணிக்கு புறப்படும். இந்த இரயில் திருப்பரங்குன்றம், நெல்லை, கொல்லம் கிளிகொல்லூர், குன்டரா, எழுகோன், கொட்டாரக்கரா ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து  முறையாக இரவு 11:42, மற்றும் அதிகாலை 3:10, காலை 9 மணி, 9:11, மற்றும் 9:22, மற்றும் 9:30, 9:40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, முறையே இரவு 11:38, நள்ளிரவு 2:45, காலை 8:45, 8:55, 9:05, 9:15, 9:24 மணிக்குப் புறப்படும்.


மறு மார்க்கத்தில் புனலூர்-மதுரை சிறப்பு ரயில் (எண் 06730) திருமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 3:45 மணிக்கு பதிலாக 3:40 மணிக்கு புறப்படுமெனத் தெற்கு இரயில்வேயின் மதுரை கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதில் 

தூத்துக்குடியிலிருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் 02694 ரயிலின் புறப்படும் நேரம் மாற்றம்  இரவு 8.15 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து  புறப்படும். மறுமார்க்கமாக சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடிக்கு ரயில் புறப்படும் நேரமும், வந்து சேரும் நேரமும் மாற்றம் செய்யப்பட்டதன்படி, இரவு 7.30 மணிக்கு  சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு தூத்துக்குடி இரயில் நிலையம் வந்து சேரும்

எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் 02661 எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் செங்கோட்டைக்கு வந்து சேரும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி காலை 8.15 மணிக்கு வந்து சேரும். மேலும் செங்கோட்டையில் இருந்து எழும்பூருக்கு புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி மாலை 6.20 மணிக்கு செங்கோட்டையில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு எழும்பூருக்கு வந்து சேரும்.

கன்னியாகுமரியில் இருந்து எழும்பூருக்கு 02634 புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்படவில்லை. மாறாக, நெல்லை ரயில் நிலையத்துக்கு இரவு 7.15 மணிக்கு வந்தடையும். பின் நெல்லையிலிருந்து 7.20 மணிக்கு புறப்பட்டு காலை 6.10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். மறுமார்க்கமாக எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு 02633 புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் இதே ரயில் நெல்லைக்கு அதிகாலை 3.45 மணிக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து 3.50 மணிக்கு கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்லும்.

இதனிடையே தெற்கு ரயில்வேயில் புதிய காலஅட்டவணை ஒரு நாளுக்கு முன்பு அறிவித்திருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். 130 க்கும் மேற்பட்ட ரயில்களின் நேர மாற்றத்தை அவசர, அவசரமாக அறிவிப்பது ஏன்? முன்கூட்டியே ரயில்களின் நேரம் மாற்றம் குறித்துஅறிவிப்பு வெளியிட்டால் தான் பயணிகள் திட்டமிட்டுப் பயணிக்க முடியும் என்று கூறியுள்ளனர். விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு, ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் உள்ளிட்டவை குறித்து எதுவும் இடம்பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ரயில் முனையங்களில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றம் மற்றும் இடைப்பட்ட ரயில் நிலையங்களில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகளின் செல்போன்களுக்கு ரயில்களின் நேரம் மாற்றம் குறித்து எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளோம். மேலும், நேரம் மாற்றம் குறித்து விபரங்களை ரயில் நிலையங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க போதிய ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, ரயில் (வ.எண்.06654), வருகிற 7-ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில், இந்த ரயில் (வ.எண்.06655) மதுரையில் இருந்து மாலை 6.10 மணிக்குப் புறப்பட்டு இரவு 10 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.இந்த ரயில்கள் பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, திருப்பாசேத்தி, திருப்புவனம், சிலைமான், கீழ்மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்