முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை ஐஐடி-ல் இரண்டு டிப்ளோமா படிப்புகள் அறிமுகம்

மாணவர்கள், பணியிலிருப்பவர்கள், வேலை தேடுபவர்களுக்காக ப்ரொக்ராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் துறையில், சென்னை ஐஐடி-ல் இரண்டு டிப்ளோமா படிப்புகள் அறிமுகம்


எந்தத் துறைக் கல்வி கற்றவர்களுக்கும் நிரலாக்க மற்றும் தரவு அறிவியலில் வேலை வாய்ப்பை உருவாக்க இது ஒரு அற்புதமான வாய்ப்பு.

எட்டு மாதங்களில் ஐஐடி மெட்ராஸின் ஒரு டிப்ளோமா படிப்பை முடிக்க முடியும்


குறைந்தபட்சம் இரண்டு வருட இளங்கலைப் பட்டப் படிப்பை எந்த முறையிலும் கற்ற எவரும் இந்த டிப்ளோமா வகுப்பில் சேரலாம்.

இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தத் துறையைச் சேர்ந்திருந்தாலும் இவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.


சென்னை, அக்டோபர் 4, 2021: Indian Institute of Technology Madras, ஐஐடி மெட்ராஸ், ப்ரோக்ராமிங் மற்றும் டேட்டா சயன்ஸில் இரண்டு டிப்ளமோ படிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. மிகச் சிறப்பான இந்த டிப்ளமோ படிப்புகள், இந்தத் துறையில் முன்னணி நிபுணர்களால் கவனமாக வடிவமைக்கப்பட்டது.  ஐஐடி மெட்ராஸ் வழங்கும்  அதிகாரப்பூர்வ டிப்ளோமாக்கள் இவை மட்டுமே.



எந்தத் துறையைச் சேர்ந்தவர்களானாலும் அவர்கள், தேவையான அடிப்படை அறிவைப் பெறவும் அதை விரிவுபடுத்தவும் திறன் மேம்படுத்திக்கொள்ளவும் இந்தத் திட்டங்கள் வழி வகுக்கின்றன. இதில் சேர, பொறியியல் அல்லது கணினி அறிவியல் பின்னணி தேவையில்லை. மாணவர்கள், வேலை செய்யும் தொழில் வல்லுநர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த டிப்ளோமா படிப்பில் சேர்வதற்கான போர்ட்டல் இன்று (4 அக்டோபர் 2021), அகில இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கௌன்சில்(ஏ ஐ சி டி ஈ) தலைவரான பேராசியர் அனில் சஹஸ்ரபுத்தே அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி, ஐ ஐ டி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரிய பாஸ்கர் ராமமூர்த்தி மற்றும் இன்ஃபோசிஸ் லிமிடெடின் மூத்த துணைத் தலைவர் திரு திருமலா ஆரோஹி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

டிப்ளமோ நுழைவுத் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கக் கடைசி தேதி 15 நவம்பர் 2021. விருப்பமுள்ளவர்கள் https://diploma.iitm.ac.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான நுழைவுத் தகுதித் தேர்வு, டிசம்பர் 12, 2021 அன்று நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விரும்பும் நகரத்தின் தேர்வு  மையத்தில் நேரில் வந்து தேர்வெழுத வேண்டும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் டிப்ளமோ படிப்பில் சேரத் தகுதி பெறுவர்.

தொடக்க விழாவில் உரையாற்றிய, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கௌன்சிலின் (ஏஐசிடிஇ) தலைவர் பேராசிரியர் அனில் சஹஸ்ரபுத்தே, “உலகப் பொருளாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய  தரவு அறிவியல் மற்றும் நிரலாக்கத்தில் திறமையான மனிதவளம் இந்தியாவிலிருந்து உருவாவது மிகவும் அவசியம். ஐஐடி மெட்ராஸ் தொழில்துறையின் தேவைக்கு ஏற்ற பொருத்தமான திட்டங்களை அறிமுகப்படுத்துவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்று கூறினார்.

மேலும் உரையாற்றிய பேராசிரியர் அனில் சஹஸ்ரபுத்தே, “கல்வி என்பது தொடர்ச்சியான கற்றல் செயல்முறையாகும். இன்றைய சூழலில், பணியிடத்தில் போட்டித்தன்மையுடன் இருக்க மாணவர்கள் மற்றும் பணியிலிருக்கும் வல்லுநர்கள் தொடர்ந்து தங்கள் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.  இந்த டிப்ளோமாக்கள் நிரலாக்க அல்லது தரவு அறிவியலில் வேலை வாய்ப்பை உருவாக்க்கிக் கொள்வதில் ஆர்வமுள்ள பலதரப்பட்ட மாணவர்களைச் சென்றடையும் என்று நான் நம்புகிறேன்.” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஒரு மாணவர், நிரலாக்க அல்லது தரவு அறிவியலில் டிப்ளோமா பெற எட்டு பாடத் திட்டங்களில் கற்றுத் தேறவேண்டும்.  ஒரு டிப்ளமோவை எட்டு மாதங்களுக்குள் முடிக்க முடியும். இந்தப் படிப்பு ஆன்லைன் முறையில் இருக்கும் என்பதால், வேலைக்குச் செல்வோருக்கும் மாணவர்களுக்கும் வசதியான நேரத்தில் கற்க உதவும்.

இந்த டிப்ளோமாக்கள் மூலமாக,  மிக உயர்ந்த தரமான கல்வி மற்றும் பயிற்சியை மிகப்பெரிய எண்ணிக்கையிலானவர்களுக்குக் கொண்டு செல்வதை  நோக்கமாகக் கொண்டுள்ளது, ஐஐடி மெட்ராஸ். இந்த இலக்கை மனதில் கொண்டு, இந்தத் திட்டம், பொருளாதாரச் சலுகைகளையும் வழங்குகிறது.  ஒவ்வொரு பருவத்திலும் பதிவு செய்யப்பட்ட படிப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் அமைகிறது. மேலும், ஐஐடி மெட்ராஸ், மாணவர்களின் சமூகப் பொருளாதார பின்னணியின் அடிப்படையில் 75% வரை பாடக் கட்டணத் தள்ளுபடியையும் வழங்குகிறது.

நிகழ்ச்சியில் பேசிய, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும் கல்விப் பயிற்சி மற்றும் மதிப்பீட்டுத் துறைத் தலைவருமான  திரு. திருமலா ஆரோஹி, இந்த நிகழ்ச்சியில் பேசுகையில்,  “ஐஐடி மெட்ராஸ் நிரலாக்க மற்றும் தரவு அறிவியலில் டிப்ளமோ படிப்புகளைத் தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தொழில்நுட்பம் எங்கும் கோலோச்சும் ஒரு உலகில் நாம் செழித்து வளர்கிறோம். வாய்ப்புகளின் இந்தக் களஞ்சியத்தில் தொடர்ந்து இயங்க,  மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் வாழ்நாள் முழுவதும் கற்றல் என்பதைத் தொடர வேண்டியது அவசியம். எனவே,  முதன்மையான கல்வி நிறுவனமான ஐஐடி மெட்ராஸ், கல்லூரி மாணவர்கள் மற்றும் பணியிலிருப்பவர்களுக்கு, நிரலாக்க மற்றும் தரவு அறிவியலில் டிப்ளோமாக்களை வழங்குவது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை. இந்தப் பாடத் திட்டம், நன்கு கட்டமைக்கப்பட்ட, நேரடி வகுப்புகள், செயல்பாடுகள், பயிற்சிகள் ஆகியவற்றை நமக்கான வேகத்தில் நேரத்தில் கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நெகிழ்வுத் தன்மையும் மலிவான கட்டணமும், ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அவர்களின் திறன்களை மேம்படுத்துவதைத் துரிதப்படுத்த உதவுகிறது. பல்வேறு துறைகளில் எண்ணற்ற வாய்ப்புகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும் இது உதவும். “என்றார்.

வேலை செய்யும் தொழில் வல்லுநர்களுக்கு விடுப்பு  எடுக்காமல் தங்களை மேம்படுத்திக்கொள்ள இந்த டிப்ளோமாக்கள் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றன. தங்கள் ஊழியர்களின் திறனை மேம்படுத்த விரும்பும் நிறுவனத் தலைவர்களும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வகுப்பறைக் கல்விக்கு  இணையான விரிவான கற்பித்தல் முறைகள் மூலம் இவை கற்பிக்கப்படுகின்றன.  விரிவுரை வீடியோக்கள், விரிவுரை அடிப்படையிலான செயல்பாட்டுக் கேள்விகள், பயிற்சிப் பணிகள், தரம் நிர்ணையிக்கும் பயிற்சிப் பணிகள்,  சிக்கல் தீர்க்கும் திறன்களை வலுப்படுத்தும் சிறு பயிற்சிகள் ஆகியவை இக்கல்வித் திட்டத்தில் அடங்கும்.

பாடத்திட்ட பயிற்றுனர்களுடனான நேரடி அமர்வுகளின் போது, ஒவ்வொரு பாடத்திற்கும் மாணவர்களின்  கேள்விகளுக்குப் பதில்கள் அளிக்கப்படுகின்றன. கல்லூரிக்குச் சென்று கற்பதற்கு இணையாக, நேரடி வினாடிவினா நிகழ்ச்சிகள், பருவ இறுதித் தேர்வுகள் என அனைத்தையும் வழங்க ஐ ஐ டி மெட்ராஸ் திட்டமிட்டுள்ளது. வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களால் விரும்பப்படும் தகுதிகளை இந்தக் கலவை வழங்குகிறது.

நிகழ்ச்சியில் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி, “நிரல் மற்றும் தரவு அறிவியலில் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள், பணியிலிருக்கும்  தொழில் வல்லுநர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு இந்த திட்டத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆன்லைன் மற்றும் நேரடிக் கற்றலின் கலவையான இது, கல்வி கற்கும் சூழலில் தொய்வின்றி, அதே நேரத்தில் மாணவர்களுக்கு வசதியான நேரத்தில் கற்கவும் உதவுகிறது. ஆன்லைன் கல்வியில் எங்களுக்கு இருக்கும் சிறந்த அனுபவத்தின் உதவியால், வளமான முழு கல்விச் சூழலை உருவாக்க முடியும்.” என்று கூறினார்.

உயர்தரப் பாடத் திட்டம்,  தொடர்ச்சியான வழிகாட்டுதல், கடுமையான பயிற்சிகள், மாணவர்களிடையேயான செயல்பாடு, உடனடிப் பின்னூட்டம் ஆகியவற்றின் கலவையுடன், ஐஐடி மெட்ராஸின் இந்த இரண்டு அதிகாரப்பூர்வ டிப்ளோமாக்கள், எந்தத் துறையைச் சேர்ந்த மாணவராக இருந்தாலும், நிரலாக்கம் மற்றும் தரவு அறிவியல் துறையில் அடிப்படை அறிவையும் தொழில் துறைக்குத் தேவையான நவீன திறன்களையும் பெற உதவுகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த