முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பீகார் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் குடியரசுத்தலைவர் உரை

பீகார் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் குடியரசுத்தலைவர் உரை


பீகார் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந் கலந்துகொண்டு, பாட்னாவில் இன்று (அக்டோபர் 21, 2021) பீகார் சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே உரையாற்றி சிறப்பித்தார். நூற்றாண்டு நினைவுத்தூணுக்கும் அடிக்கல் நாட்டிய அவர், பீகார் சட்டப்பேரவை வளாகத்தில் மஹாபோதி மரக்கன்றையும் நட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர் பீகார் சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது, ஒரு ஜனநாயகக் கொண்டாட்டம் என்றார். பீகார் சட்டப்பேரவையின் இந்நாள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் உற்சாகத்துடன் பங்கேற்றிருப்பது, நாட்டில் உருவாக்கப்பட்ட ஆரோக்கியமான நாடாளுமன்ற பாரம்பரியத்திற்கு சிறந்த உதாரணம் என்று கூறினார்.


ஜனநாயகத்திற்கு பீகாரின் பங்களிப்புப் பற்றிக் குறிப்பிட்ட அவர், உலகின் முதல் ஜனநாயகப் பூமியாக பீகார் திகழ்வது பெருமிதம் அளிப்பதாக தெரிவித்தார். உலகின் ஆரம்பகால குடியாட்சிக்கு ஞானம் மற்றும் கருணையை புத்தபிரான் போதித்தார். அத்துடன் ஜனநாயக அடிப்படையில் அமைந்த அந்தக் குடியாட்சிக்கு, சங்கதிகள் என்ற விதிமுறைகளையும் புத்தபிரான் வகுத்துத்தந்தார். பாபா சாஹேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் அரசியல் சட்ட நிர்ணய சபையில் கடைசியாக ஆற்றிய உரையில், புத்தச் சங்கதியில் இடம்பெற்ற பெரும்பாலான விதிமுறைகள், தற்போதைய நாடாளுமன்ற நடைமுறையிலும் தொடரும் என்று தெரிவித்ததைக் குடியரசுத்தலைவர் சுட்டிக்காட்டினார்.


பீகார் மாநிலம் அறிவார்ந்த மக்கள் நிறைந்த பூமி என்றும் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். நாளந்தா, விக்ரம்ஷிலா மற்றும் ஓடாந்தபுரி போன்ற உலகத் தரம் வாய்ந்த கல்வி நிலையங்களை இந்த பூமியில் உருவாக்கிய பாரம்பரியம் மற்றும் ஆரியபட்டா போன்ற விஞ்ஞானிகள், சாணக்கியர் போன்ற கொள்கை உருவாக்குவோர் மற்றும் இதர தலைசிறந்த பிரமுகர்களை உருவாக்கியதன் காரணமாக ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமிதம் தேடித்தந்ததாகவும் அவர் கூறினார். பீகார் மக்கள் சிறப்பான பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள் என்று குறிப்பிட்ட குடியரசுத்தலைவர் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டியக் கடமை அவர்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அரசியல் சட்ட நிர்ணயச் சபையால், நமது நவீன ஜனநாயகத்தின் புதிய அத்தியாயமான இந்திய அரசியல் சாசனம் படைக்கப்பட்டபோது, அதில் டாக்டர் சச்சிதானந்த சின்ஹா போன்ற பிரமுகர்கள் முக்கியப் பங்களிப்பை வழங்கியிருப்பதுடன் அரசியல் சட்ட நிர்ணயச் சபையின் மூத்த உறுப்பினரான திரு சச்சிதானந்த சின்ஹா அதன் இடைக்காலத்தலைவராக நியமிக்கப்பட்டு, பின்னர் டிசம்பர் 11, 1946ல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் நிரந்தரத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதையும் குடியரசுத்தலைவர் சுட்டிக்காட்டினார். மேலும், தர்பங்கா மஹாராஜா காமேஷ்வர்சிங், பாபு ஜகஜீவன்ராம் உள்ளிட்டோர் அரசியல் சட்ட நிர்ணயசபை உறுப்பினராக பணியாற்றி மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கியிருப்பதாவும் அவர் தெரிவித்தார். சமூக மற்றும் பொருளாதார நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நமது ஜனநாயகம், பண்டைக்கால பீகாரின் ஜனநாயக நற்பண்புகளைத் தழுவி அமைக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய பீகார் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வார்கள் என்று நம்பிக்கைத் தெரிவித்த குடியரசுத்தலைவர், சமூக பிரச்சனைகளிலிருந்து பீகார் மாநிலத்தை விடுவிக்க புதிய திட்டத்தைத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.

தீபாவளி பண்டிகை மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு மக்களுக்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டதுடன், சாத் பூஜை தற்போது உலகளாவிய பண்டிகையாக மாறியிருப்பதாகவும் தெரிவித்தார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...