முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பீகார் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் குடியரசுத்தலைவர் உரை

பீகார் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் குடியரசுத்தலைவர் உரை


பீகார் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந் கலந்துகொண்டு, பாட்னாவில் இன்று (அக்டோபர் 21, 2021) பீகார் சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே உரையாற்றி சிறப்பித்தார். நூற்றாண்டு நினைவுத்தூணுக்கும் அடிக்கல் நாட்டிய அவர், பீகார் சட்டப்பேரவை வளாகத்தில் மஹாபோதி மரக்கன்றையும் நட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர் பீகார் சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது, ஒரு ஜனநாயகக் கொண்டாட்டம் என்றார். பீகார் சட்டப்பேரவையின் இந்நாள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் உற்சாகத்துடன் பங்கேற்றிருப்பது, நாட்டில் உருவாக்கப்பட்ட ஆரோக்கியமான நாடாளுமன்ற பாரம்பரியத்திற்கு சிறந்த உதாரணம் என்று கூறினார்.


ஜனநாயகத்திற்கு பீகாரின் பங்களிப்புப் பற்றிக் குறிப்பிட்ட அவர், உலகின் முதல் ஜனநாயகப் பூமியாக பீகார் திகழ்வது பெருமிதம் அளிப்பதாக தெரிவித்தார். உலகின் ஆரம்பகால குடியாட்சிக்கு ஞானம் மற்றும் கருணையை புத்தபிரான் போதித்தார். அத்துடன் ஜனநாயக அடிப்படையில் அமைந்த அந்தக் குடியாட்சிக்கு, சங்கதிகள் என்ற விதிமுறைகளையும் புத்தபிரான் வகுத்துத்தந்தார். பாபா சாஹேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் அரசியல் சட்ட நிர்ணய சபையில் கடைசியாக ஆற்றிய உரையில், புத்தச் சங்கதியில் இடம்பெற்ற பெரும்பாலான விதிமுறைகள், தற்போதைய நாடாளுமன்ற நடைமுறையிலும் தொடரும் என்று தெரிவித்ததைக் குடியரசுத்தலைவர் சுட்டிக்காட்டினார்.


பீகார் மாநிலம் அறிவார்ந்த மக்கள் நிறைந்த பூமி என்றும் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். நாளந்தா, விக்ரம்ஷிலா மற்றும் ஓடாந்தபுரி போன்ற உலகத் தரம் வாய்ந்த கல்வி நிலையங்களை இந்த பூமியில் உருவாக்கிய பாரம்பரியம் மற்றும் ஆரியபட்டா போன்ற விஞ்ஞானிகள், சாணக்கியர் போன்ற கொள்கை உருவாக்குவோர் மற்றும் இதர தலைசிறந்த பிரமுகர்களை உருவாக்கியதன் காரணமாக ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமிதம் தேடித்தந்ததாகவும் அவர் கூறினார். பீகார் மக்கள் சிறப்பான பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள் என்று குறிப்பிட்ட குடியரசுத்தலைவர் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டியக் கடமை அவர்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அரசியல் சட்ட நிர்ணயச் சபையால், நமது நவீன ஜனநாயகத்தின் புதிய அத்தியாயமான இந்திய அரசியல் சாசனம் படைக்கப்பட்டபோது, அதில் டாக்டர் சச்சிதானந்த சின்ஹா போன்ற பிரமுகர்கள் முக்கியப் பங்களிப்பை வழங்கியிருப்பதுடன் அரசியல் சட்ட நிர்ணயச் சபையின் மூத்த உறுப்பினரான திரு சச்சிதானந்த சின்ஹா அதன் இடைக்காலத்தலைவராக நியமிக்கப்பட்டு, பின்னர் டிசம்பர் 11, 1946ல் டாக்டர் ராஜேந்திர பிரசாத் நிரந்தரத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதையும் குடியரசுத்தலைவர் சுட்டிக்காட்டினார். மேலும், தர்பங்கா மஹாராஜா காமேஷ்வர்சிங், பாபு ஜகஜீவன்ராம் உள்ளிட்டோர் அரசியல் சட்ட நிர்ணயசபை உறுப்பினராக பணியாற்றி மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கியிருப்பதாவும் அவர் தெரிவித்தார். சமூக மற்றும் பொருளாதார நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நமது ஜனநாயகம், பண்டைக்கால பீகாரின் ஜனநாயக நற்பண்புகளைத் தழுவி அமைக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய பீகார் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வார்கள் என்று நம்பிக்கைத் தெரிவித்த குடியரசுத்தலைவர், சமூக பிரச்சனைகளிலிருந்து பீகார் மாநிலத்தை விடுவிக்க புதிய திட்டத்தைத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.

தீபாவளி பண்டிகை மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு மக்களுக்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டதுடன், சாத் பூஜை தற்போது உலகளாவிய பண்டிகையாக மாறியிருப்பதாகவும் தெரிவித்தார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த