டெல்லிக்குத் தேவையான மின்சாரத்தை முழு அளவில் வழங்குமாறு என்டிபிசி மற்றும் டிவிசி-க்கு மத்திய மின்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
எரிசக்தி அமைச்சகம் தலைநகர் டெல்லிக்குத் தேவையான மின்சாரத்தை முழு அளவில் வழங்குமாறு என்டிபிசி மற்றும் டிவிசி-க்கு மத்திய மின்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
கடந்த பத்து நாட்களில் தில்லி டிஸ்காம்களுக்கு அறிவிக்கப்பட்ட மின்திறனைக் கருத்தில் கொண்டு, மத்திய மின் துறை அமைச்சகம் 10.10.2021 அன்று என்டிபிசி மற்றும் டிவிசி-க்கு தில்லிக்குப் போதுமான மின்சாரத்தை வழங்குவதை உறுதி செய்ய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது தில்லியின் மின் விநியோக நிறுவனங்களின் தேவைக்கு
ஏற்ப மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யும்.
அதற்காக பின்வரும் வழிகாட்டுதல்கள், அளிக்கப்பட்டுள்ளன:
மேலும் எந்தவொரு மாநிலமும், மின்சார பரிமாற்றத்தில் அதனை விற்காமலோ அல்லது ஒதுக்கீடு செய்யாமலோ இருந்தால் அந்த மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட மின்சாரம் தற்காலிகமாக குறைக்கப்படும் அல்லது திரும்பப் பெறப்படும். இந்த மின்சாரம் தேவைப்படும் மாநிலங்களுக்கு மறு ஒதுக்கீடு செய்யப்படும்.உண்மைத் தகவல்: தில்லி மின்சார விநியோக நிலைமை
தில்லியின் அதிகபட்ச மின்சார தேவை 2021 அக்டோபர் 10 அன்று 4536 மெகாவாட் (உச்சம்) மற்றும் 96.2 எம் யு (எரிசக்தி) ஆகும்.
தில்லி மின்சார விநியோக அமைப்புகளிடம் இருந்து பெற்ற தகவல்களின் படி, போதுமான மின்சார விநியோகம் அவர்களுக்கு வழங்கப்பட்டதால் மின்சார பற்றாக்குறை காரணமாக மின் தடை எதுவும் ஏற்படவில்லை.
கடந்த இரண்டு வாரங்களில் தில்லியின் மின்சார நிலைமை விபரம்
கருத்துகள்