முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரூர் இனுங்கூரில் தேசிய ஊட்டச்சத்து மாதம் குறித்த ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சி

தேசிய ஊட்டச்சத்து மாதம் குறித்த ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சியை கரூர் இனுங்கூரில் திருச்சிராப்பள்ளி கள விளம்பர அலுவலகம் நடத்தியது


ஊட்டச்சத்து மாதம், இந்தியாவின் 75 ஆண்டுகள் சுதந்திரத்தை குறிக்கும் விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம் மற்றும் கொவிட் தடுப்பு குறித்த ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சி ஒன்றை கரூரில் உள்ள குளித்தலை வட்டத்தில் இருக்கும் இனுங்கூரில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கள விளம்பர அலுவலகம், திருச்சிராப்பள்ளி நடத்தியது. 


தலைமையுரை ஆற்றிய இனுங்கூர் பஞ்சாயத்து தலைவர் திரு பி குமார், 18 வயதுக்கு பின்பே பெண்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார். பத்தாம் வகுப்பு படித்த பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் ரூ 25000 மற்றும் பட்டப்படிப்பு படித்த பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் ரூ 50,000 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

அறிமுகவுரை ஆற்றிய திருச்சிராப்பள்ளி கள விளம்பர அலுவலர் திரு கே தேவி பத்மநாபன், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுவதாக கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியால் சர்வதேச பெண்கள் தினமான 2018 மார்ச் 8 அன்று ஊட்டச்சத்து இயக்கம் தொடங்கப்பட்டதென்று அவர் கூறினார்.

ஊட்டச்சத்து மாதத்தில் மொத்தம் நான்கு மையக்கருக்கள் இருப்பதாகவும், முதலாவதாக ஊட்டச்சத்து மிக்க செடிகளை நடுவதற்காக செப்டம்பர் 1 முதல் 7 வரை ஊட்டசத்து மரம் நடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இரண்டாவது மையக்கருவான ஆரோக்கிய ஊட்டச்சத்திற்காக யோகா செப்டம்பர் 8 முதல் 15 வரை அனுசரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், மூன்றாவது பகுதியாக செப்டம்பர் 16 முதல் 23 வரை அங்கன்வாடி பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டதென்றும் நான்காவதாக செப்டம்பர் 24 முதல் 30 வரை தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்கப்படுவதாகவும் கூறினார். 

திருச்சி அந்தநல்லூர் வட்டத்தில் உள்ள முத்தரசநல்லூரில் செப்டம்பர் 7 அன்று முதல் ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சியும், பெரம்பலூரில் உள்ள செட்டிகுளம் அலத்தூர் வட்டத்தில் இரண்டாவது நிகழ்ச்சியும், திருச்சி மணிகண்டம் வட்டத்தில் உள்ள நாகமங்கலத்தில் மூன்றாவது நிகழ்ச்சியும் நடத்தப்பட்டதென்றும், தற்போது கரூரின் குளித்தலை வட்டத்தில் உள்ள சுக்காப்பட்டி இனுங்கூர் கிராமத்தில் நான்காவது ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

சிறப்புரை ஆற்றிய இனுங்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்ட மருத்துவ அலுவலர் டாக்டர் டி சிவகுமார், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை வலுப்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை சுகாதாரத் துறை செயல்படுத்தி வருவதாக கூறினார். பெருந்தொற்றின் பரவலை தடுக்க கொவிட் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு ஏ ராஜேந்திரன் மற்றும் திரு ஏ பி சுப்பிரமணியன் ஆகியோர் மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து பேசினர். ஊட்டச்சத்து மாதமாக செப்டம்பர் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் திருமதி எம் வினோதினி பேசினார். மன நலனின் முக்கியத்துவம் குறித்து கரூர் மாவட்ட மனநல ஆலோசகர் திருமதி ஏ மகேஸ்வரி பேசினார்.

வரவேற்புரை வழங்கிய திருச்சிராப்பள்ளி கள விளம்பர அலுவலர் திரு கே ரவீந்திரன், ஊட்டச்சத்து மாதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குளித்தலை பஞ்சாயத்து ஒன்றியம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் குளித்தலை, இனுங்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றோடு இணைந்து நடத்தப்படுவதாக கூறினார்.

சித்த மருத்துவ அலுவலர் திரு நடராஜன், சுக்கம்பட்டி பஞ்சாயத்து ஒன்றிய பள்ளி தலைமையாசிரியர் திரு பால் ஜகதீசன், இனுங்கூர் பஞ்சாயத்து துணை தலைவர் திரு பாலு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பேசினர். இனுங்கூர் பஞ்சாயத்து செயலாளர் திரு பி மதியழகன் நன்றியுரை வழங்கினார்.

ஆரோக்கியமான குழந்தையின் தாய்க்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கீரைகள், காய்கறிகள் மற்றும் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் குறித்த கண்காட்சி நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்டது. கொவிட் தடுப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பாடல் மற்றும் நாடக நிகழ்ச்சிகளை அபிநயா கலை மன்றம் நடத்தியது.

தேசிய ஊட்டச்சத்து மாதம், விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம் மற்றும் கொவிட் தடுப்பு விழிப்புணர்வு குறித்த எல் ஈ டி விழிப்புணர்வு வாகனம் பஞ்சாயத்து தலைவர் திரு பி குமாரால் இனுங்கூர் கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த