முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரூர் இனுங்கூரில் தேசிய ஊட்டச்சத்து மாதம் குறித்த ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சி

தேசிய ஊட்டச்சத்து மாதம் குறித்த ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சியை கரூர் இனுங்கூரில் திருச்சிராப்பள்ளி கள விளம்பர அலுவலகம் நடத்தியது


ஊட்டச்சத்து மாதம், இந்தியாவின் 75 ஆண்டுகள் சுதந்திரத்தை குறிக்கும் விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம் மற்றும் கொவிட் தடுப்பு குறித்த ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சி ஒன்றை கரூரில் உள்ள குளித்தலை வட்டத்தில் இருக்கும் இனுங்கூரில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கள விளம்பர அலுவலகம், திருச்சிராப்பள்ளி நடத்தியது. 


தலைமையுரை ஆற்றிய இனுங்கூர் பஞ்சாயத்து தலைவர் திரு பி குமார், 18 வயதுக்கு பின்பே பெண்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார். பத்தாம் வகுப்பு படித்த பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் ரூ 25000 மற்றும் பட்டப்படிப்பு படித்த பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் ரூ 50,000 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

அறிமுகவுரை ஆற்றிய திருச்சிராப்பள்ளி கள விளம்பர அலுவலர் திரு கே தேவி பத்மநாபன், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுவதாக கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியால் சர்வதேச பெண்கள் தினமான 2018 மார்ச் 8 அன்று ஊட்டச்சத்து இயக்கம் தொடங்கப்பட்டதென்று அவர் கூறினார்.

ஊட்டச்சத்து மாதத்தில் மொத்தம் நான்கு மையக்கருக்கள் இருப்பதாகவும், முதலாவதாக ஊட்டச்சத்து மிக்க செடிகளை நடுவதற்காக செப்டம்பர் 1 முதல் 7 வரை ஊட்டசத்து மரம் நடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இரண்டாவது மையக்கருவான ஆரோக்கிய ஊட்டச்சத்திற்காக யோகா செப்டம்பர் 8 முதல் 15 வரை அனுசரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், மூன்றாவது பகுதியாக செப்டம்பர் 16 முதல் 23 வரை அங்கன்வாடி பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டதென்றும் நான்காவதாக செப்டம்பர் 24 முதல் 30 வரை தீவிர ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்கப்படுவதாகவும் கூறினார். 

திருச்சி அந்தநல்லூர் வட்டத்தில் உள்ள முத்தரசநல்லூரில் செப்டம்பர் 7 அன்று முதல் ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சியும், பெரம்பலூரில் உள்ள செட்டிகுளம் அலத்தூர் வட்டத்தில் இரண்டாவது நிகழ்ச்சியும், திருச்சி மணிகண்டம் வட்டத்தில் உள்ள நாகமங்கலத்தில் மூன்றாவது நிகழ்ச்சியும் நடத்தப்பட்டதென்றும், தற்போது கரூரின் குளித்தலை வட்டத்தில் உள்ள சுக்காப்பட்டி இனுங்கூர் கிராமத்தில் நான்காவது ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

சிறப்புரை ஆற்றிய இனுங்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்ட மருத்துவ அலுவலர் டாக்டர் டி சிவகுமார், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை வலுப்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை சுகாதாரத் துறை செயல்படுத்தி வருவதாக கூறினார். பெருந்தொற்றின் பரவலை தடுக்க கொவிட் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு ஏ ராஜேந்திரன் மற்றும் திரு ஏ பி சுப்பிரமணியன் ஆகியோர் மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து பேசினர். ஊட்டச்சத்து மாதமாக செப்டம்பர் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் திருமதி எம் வினோதினி பேசினார். மன நலனின் முக்கியத்துவம் குறித்து கரூர் மாவட்ட மனநல ஆலோசகர் திருமதி ஏ மகேஸ்வரி பேசினார்.

வரவேற்புரை வழங்கிய திருச்சிராப்பள்ளி கள விளம்பர அலுவலர் திரு கே ரவீந்திரன், ஊட்டச்சத்து மாதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குளித்தலை பஞ்சாயத்து ஒன்றியம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் குளித்தலை, இனுங்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றோடு இணைந்து நடத்தப்படுவதாக கூறினார்.

சித்த மருத்துவ அலுவலர் திரு நடராஜன், சுக்கம்பட்டி பஞ்சாயத்து ஒன்றிய பள்ளி தலைமையாசிரியர் திரு பால் ஜகதீசன், இனுங்கூர் பஞ்சாயத்து துணை தலைவர் திரு பாலு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பேசினர். இனுங்கூர் பஞ்சாயத்து செயலாளர் திரு பி மதியழகன் நன்றியுரை வழங்கினார்.

ஆரோக்கியமான குழந்தையின் தாய்க்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கீரைகள், காய்கறிகள் மற்றும் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் குறித்த கண்காட்சி நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்டது. கொவிட் தடுப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பாடல் மற்றும் நாடக நிகழ்ச்சிகளை அபிநயா கலை மன்றம் நடத்தியது.

தேசிய ஊட்டச்சத்து மாதம், விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம் மற்றும் கொவிட் தடுப்பு விழிப்புணர்வு குறித்த எல் ஈ டி விழிப்புணர்வு வாகனம் பஞ்சாயத்து தலைவர் திரு பி குமாரால் இனுங்கூர் கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...