குடியரசுத் தலைவர் செயலகம் திராஸ் பகுதியில் ராணுவ வீர்ர்களுடன் தசரா கொண்டாடுகிறார் குடியரசுத்தலைவர்
குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் 2021 அக்டோபர் 14 மற்றும் 15ம் தேதிகளில் ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதிக்குச் செல்கிறார். அக்டோபர் 14ம் தேதியன்று லே, சிந்துப் படித்துறையில், குடியரசுத்தலைவர் சிந்து தர்ஷன் பூஜை செய்கிறார். அன்று மாலை உதம்பூரில் ராணுவ வீரர்களுடன்அவர் கலந்துரையாடுவார்.
அக்டோபர் 15-ம் தேதியன்று திராஸ் பகுதியில்உள்ள கார்கில் போர் நினைவுச் சின்னத்தில், குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்துகிறார் மற்றும் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடுகிறார்.
கருத்துகள்